Skip to main content

அ.தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில் ஆபாச பேச்சு!!! வழக்கு பதியுமா காவல்துறை?

Published on 23/11/2020 | Edited on 23/11/2020
admk

 

 

திருச்சி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் காடுவெட்டி தியாகராஜன் குறிப்பிட்ட சமூக பெண்களை ஆபாசமாக பேசியதை கண்டித்து வடக்கு, தெற்கு, மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் தனி தனியே கண்டன போராட்டம் நடத்தினார்கள்.

 

திருச்சி மாநகர் மாவட்டத்தில் சிந்தாமணி அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் ஆவின் பெருந்தலைவர் கார்த்திகேயன், பகுதி செயலாளர்கள் அன்பழகன், சுரேஷ் குப்தா, பூபதி, நாகநாதர் பாண்டி மலை கோட்டை அய்யப்பன், டாக்டர் சுப்பையா, தமிழரசிசுப்பையா, அருள் ஜோதி, வக்கில் எட்வின் ஜெயகுமார், வக்கில் தாமரை செல்வன், கிருஷ்ணவேணி, ஜாக்குலின் கூட்டுறவு அமைப்பு தலைவர்கள் பத்மநாபன், ஏர்போர்ட் விஜி, கேபிள் முஸ்தபா, பாபு, இலியாஸ், சையது அன்வர் அப்பா குட்டி கட்பிஸ் ரமேஷ் உட்பட பலர் கலந்து கெண்டனர். தியாகராஜனை கண்டித்து கோஷங்கள் எழுப்பட்டன. 

 

admk


இதில் தலைமை பேச்சாளர் நெத்தியடி நாகையன் கண்டன உரை ஆற்றினார். ஆரம்பத்தில் தியாகராஜனை கண்டித்து பேசியவர், பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் இருப்பதை கூட பொருட்படுத்தாமல் ஆபாசமாக பேசியதும் சர்ச்சைக்குள்ளானது. பெண்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் ஆபாசமாக பேசியதும், இதில் சோழிய வேளாளர் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது. 

 

காடுவெட்டி தியாகராஜன், தான் பெண்களை இழிவுபடுத்தி பேசவில்லை. பேசி இருந்தால் மன்னிக்கவும் என பொது மன்னிப்பு கேட்ட நிலையில் அமைச்சர் வெல்ல மண்டி நடராஜன் மாவட்ட செயலாளராக உள்ள மாநகர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையனின் பேச்சை கேட்டு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட துணை செயலாளர் ஜாக்குலின், மாவட்ட மகளிர் அணி செயலாளர் டாக்டர். தமிழரசி  சுப்பையா உட்பட மகளிர் அணியினர் முகம் சுழித்து காதை பொத்தியடியே ஆர்ப்பாட்டத்தை விட்டு கலைந்தனர்.

 

ddd

 

மேலும் இளம் பெண்கள் பாசறை மூலம் வந்த இளம் பெண்கள் வெட்கப்பட்டு சீ... சீ... தூ... தூ... என கூறியபடியே கலந்து சென்றனர். தொடர்ந்து நெத்தியடி நாகையன் பேசிய பேச்சை உளவு துறை போலிசார் பதிவு செய்தும், 500க்கும் மேற்பட்டோர் திரண்டதால் தடை உத்தரவு மீறிய அ.திமுக. நிர்வாகிகள் மீதும் வழக்கு பதிவு செய்தனர்.

 

தொடர்ந்து ஆபாசமாக பேசியதால் ஆண்களே சிலர் வெளியேற பெண்களும் வெளியேற வாகனத்தில் இருந்த கட்சி நிர்வாகிகள் நாகையனை தடுக்காமல் நின்றது அ.தி.மு.க பெண்களிடையே அதிருப்தி உருவாக்கியது.


ஆபாசமாக பேசிய நெத்தியடி நாகையன் மீதும் வழக்கு தொடர ஆலோசிக்கப்படும் என்றனர் காவல் துறையினர். திமுகவினரை ஆபாசமாக பேசிய அ.தி.மு.க. தலைமை கழக பேச்சாளர் நெத்தியடி நாகையன் மீது தி.மு.க.வினர் மாநகர காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Next Story

“சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல” - இ.பி.எஸ்.!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Expressing controversial opinion is not conducive to Indian sovereignty EPS

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று முன்தினம் (21.04.2024) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். இதனையடுத்து பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. மேலும் பிரதமர் மோடியின் இந்த பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திரமோடி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, இஸ்லாமிய மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார். இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடாகும். வாக்கு வங்கி அரசியலுக்காக அரசியல் கட்சித் தலைவர்களும், நாட்டின் உயர் ஆட்சிப் பதவியில் உள்ள பிரதமரும் இதுபோன்ற சர்ச்சைக்குரிய கருத்தை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு உகந்ததல்ல.

இஸ்லாமிய மக்களுடைய மனது புண்படும்படி இதுபோன்ற கருத்துகளை தெரிவிப்பது ஏற்புடையதல்ல. அரசியல் கட்சித் தலைவர்களும், ஆட்சி அதிகாரத்தில் மாண்பைமிகு உயர் பதவியில் உள்ளவர்களும் இதுபோன்ற கருத்துகளைத் தவிர்ப்பது நாட்டின் நலனுக்கும், மத நல்லிணக்கத்திற்கும் நல்லது. அரசியல் கட்சித் தலைவர்களின் இதுபோன்ற சர்ச்சை கருத்துகளால் சிறுபான்மையின மக்கள் மனதில் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், மத உணர்வுகளைத் தூண்டும் விதமாகவும் அமைகிறது. தேர்தல் பிரச்சாரத்திற்காக கண்ணியம் தவறிய இதுபோன்ற மத துவேச கருத்துகளை யார் பேசினாலும் அது, இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும். நாட்டின் நலனுக்காக இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.