Skip to main content

திருச்சுழியில் தொடர்ந்து ‘அரசு’ ராஜ்ஜியமே!

Published on 29/03/2021 | Edited on 29/03/2021

 

Thiruchuzhi constituency DMK and ADMK computation


நக்கீரன் மார்ச் 25 இதழில், ‘சட்டமன்றத் தேர்தல் 2021 – 234 தொகுதிகளில் யார் முன்னிலை? பண விநியோகத்துக்கு முன் கள நிலவரம்!’ என்னும் தலைப்பில், கவர் ஸ்டோரி வெளியிட்டு, நக்கீரன் டீம் எடுத்த சர்வே விபரங்களை வெளியிட்டுள்ளோம்.  

 

திருச்சுழி தொகுதி வேட்பாளர்களைக் கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்தி, நக்கீரன் இதழில் ‘கள நிலவரம்’ வெளிவந்திருக்கும் நிலையில், நக்கீரன் இணையதள வாசகர்களுக்காக திருச்சுழி தொகுதி குறித்த விரிவான கட்டுரை இதோ:

 

தங்கம் தென்னரசு (திமுக) – ராஜசேகர் (மூ.மு.க.)

 

‘இனி திருச்சுழி தொகுதி அதிமுகவுக்கு இல்லை என்று போர்டு மாட்டாத குறைதான். கட்சியின் தலைமையே இப்படி ஒரு முடிவுக்கு வந்துவிட்டது’ என்று பேசிக்கொள்கிறார்கள் இத்தொகுதியின் ஆளும்கட்சியினர். காரணம், இங்கே அதிமுக தேறாது என்று, கூட்டணிக் கட்சியான மூவேந்தர் முன்னணி கழகத்துக்கு இரண்டாவது தடவையாக இத்தொகுதியைத் தள்ளிவிட்டதுதான். 

 

திமுக வேட்பாளராக சிட்டிங் எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசுவும், அதிமுக கூட்டணி - மூ.மு.க. வேட்பாளராக ராஜசேகரும், அமமுக வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ. சிவசாமியும் களமிறங்கியிருக்கின்றனர். 

 

தந்தை தங்கப்பாண்டியன் காலத்திலிருந்தே, இத்தொகுதி மக்களுடன் இணக்கமாக இருந்துவரும் திமுக, மகன் தங்கம் தென்னரசு காலத்திலும் அந்தப் பந்தத்தை தொடர்வதும், தக்கவைத்துக்கொள்வதுமாக இருக்கிறது. மாற்றுக் கட்சியினரையும் அரவணைத்துச் செல்பவராக தங்கம் தென்னரசு இருப்பதால், ‘அடுத்து திமுக ஆட்சிதான்’ என்ற நம்பிக்கையோடு அதிமுகவிலிருந்து பஞ்சாயத்து தலைவர்களும், ஒன்றியக் கவுன்சிலர்களும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

 

அருப்புக்கோட்டை தொகுதியாக இருந்தபோதும், மறு சீரமைப்புக்குப் பின் திருச்சுழி தொகுதியாக மாறிய பிறகும், தொடர்ந்து மூன்று தடவை எம்.எல்.ஏ.வாக இருக்கிறார் தங்கம் தென்னரசு. தொகுதியின் நல்லது, கெட்டதுகளில் தவறாமல் கலந்துகொள்ளும் இவர், விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக, தன்னை நிலைநிறுத்தி வருகிறார். தொடர்ந்து அதிமுக ஆதரவில் உறுதியாக இருந்த முத்தரையர் வாக்குகளையும்கூட, சாதுர்யமாக திமுக பக்கம் திருப்பியிருக்கிறார்.

 

Thiruchuzhi constituency DMK and ADMK computation

 
மூமுக வேட்பாளர் ராஜசேகரைப் பொறுத்தமட்டிலும், இரட்டை இலை சின்னம்தான் ப்ளஸ் பாயிண்ட். தொகுதி அதிமுகவுக்கு ஒதுக்கப்படாத வருத்தத்தில் உள்ள அதிமுக நிர்வாகிகளிடம்,  ‘வேணும்னா என் நெஞ்சுல குத்துங்க. கூடவே இருந்து முதுகுல குத்திடாதீங்க..’ என்று வேட்பாளரே பேசிவரும் நிலையில்தான் இருக்கிறது ஆளும்கட்சியினரின் ஒத்துழைப்பு. கரன்ஸியில் குளிப்பதில் ஈடுபாடுள்ள அதிமுகவினர், இத்தொகுதியை அம்போவென விட்டுவிட்டு, ராஜேந்திரபாலாஜி போட்டியிடும் ராஜபாளையத்துக்குச் சென்றுவிட்டனர். 

 

Thiruchuzhi constituency DMK and ADMK computation


கணிசமாக உள்ள அகமுடையார் வாக்குகளை அறுவடை செய்பவராக இருக்கிறார் அமமுக வேட்பாளர் சிவசாமி. நாம் தமிழர் கட்சி – ஆனந்தஜோதி,  மக்கள் நீதி மய்யம் - முருகன், புதிய தமிழகம் – திருமுருகன் ஆகியோரும் இத்தொகுதியில் போட்டியிடுகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.