Skip to main content

இது எல்லாமே ஸ்டாலின் ராஜதந்திரமா? 

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி இரண்டாம் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.மேலும் வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கான  இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில் மே 23ஆம் தேதி வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு யார் ஆட்சி தமிழகத்தில் இருக்கும் என்று பெரும் பரபரப்பை எட்டியுள்ளது.தேர்தல் தேதி அறிவித்த நாளிலிருந்து அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் எல்லாம் வாக்காளர்கள் மத்தியிலும்,அரசியல் விமர்சகர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 

dmk



இந்த தேர்தலில் அதிமுகவை கடுமையாக விமர்சித்த பாமக அதிமுகவிடம் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. முதலில் பாமக திமுகவிடம் தான் கூட்டணி குறித்து பேசியதாகவும் அதை திமுக தலைவர் ஸ்டாலின் விரும்பவில்லை என்றும் அதனால் அவர்களை கூட்டணியில் சேர்க்கவிட்டால் அதிமுகவிடம் கூட்டணிக்கு செல்வார்கள் அதனால் அந்த கூட்டணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் மற்றும் மக்கள் அதிருப்தியில் திமுகவிற்கு பலம் சேரும் என்பதாலேயே ஸ்டாலின் இந்த ராஜதந்திர முடிவை எடுத்ததாக கூறப்படுகிறது.மேலும் கடந்த சில நாட்களாக திமுக பாஜகவிடம் பேசியது,மூன்றாவது அணி அமைக்க விரும்பும் சந்திரசேகரராவிடம் பேசியது என்று பெரும் விவாதத்தை அரசியல் கட்சியினரிடையே ஏற்படுத்தியுள்ளது.

 

dmk



இந்த மூவ் எல்லாமே ஸ்டாலின் தனது அரசியல்  இமேஜை இந்திய அளவில் உயர்த்துவர்க்காக எடுக்கப்பட்டது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்தியில் யார் ஆட்சி அமைப்பார்கள் என்ற கேள்வி இருக்கும் நிலையில் ஸ்டாலின், திமுக,காங்கிரஸ் கூட்டணியில் ராகுல்காந்தி தான் அடுத்து இந்தியாவின் பிரதமர் என்றும் அறிவித்தார்.மேலும் மற்ற மாநிலத்தில் பாஜக அல்லாத கூட்டணியில் இருப்பவர்கள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியில் இருப்பவர்கள் தேர்தல் முடிவுக்கு பிறகு பிரதமர் வேட்பாளரை தேர்ந்தெடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளனர்.

 

dmk



இந்த நிலையில் திமுக தலைவர் ஏற்கனவே ராகுல்காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்று கூறியதால், தேர்தல் முடிவுக்கு பின் மத்தியில் எந்த கட்சிக்கும் பெரும்பன்மை இல்லாமல் ஆட்சியை அமைக்க மாநில கட்சியின் ஆதரவு தேவை என்ற நிலைப்பாடு வந்தால் மாநில கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க முயற்சி செய்யும் அப்போது திமுகவின் நிலைப்பாடு என்ன என்று அறியவே இப்படியான அரசியல் மூவ்கள் நடப்பதாகவும் அதை ஸ்டாலின் சிறப்பாக கையாளுகிறார் என்றும் திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.
 
 

சார்ந்த செய்திகள்

Next Story

“பா.ஜ.கவை விட ஆபத்தானவர் நிதிஷ்குமார்” - மல்லிகார்ஜுன கார்கே

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Mallikarjuna Kharge says Nitish Kumar is more like BJP

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில் பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இதற்கிடையே, பீகாரில் மொத்தமுள்ள 40 தொகுதிகளுக்கு 7 கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான காங்கிரஸ், சிபிஐ, சிபிஎம், சிபிஐ (எம்எல்) ஆகிய கட்சிகள் உள்ளன. அதே போல், ஐக்கிய ஜனதா தளம், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கிறது.

இந்த நிலையில், நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற தற்போது நடைபெற்று வரும் தேர்தல்கள் மிகவும் முக்கியமானவை என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பீகார் மாநிலத்தில் உள்ள கிஷன்கஞ்ச் மற்றும் கதிஹார் தொகுதிகளில் நேற்று (19-04-24) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, “மோடி சமீபகாலமாக அரசியல் சாசனத்தின் மீது மிகுந்த மரியாதையைக் காட்டி வருகிறார். அவர் சொல்வதையே அவர் கடைபிடிக்கிறார் என்றால், அரசியல் சாசனத்தை மாற்றுவோம் என பேசி வரும் பாஜக தலைவர்கள் எப்படி தப்பிக்க முடிகிறது? அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? நாட்டின் சுதந்திரப் போராட்டத்தில் எந்தப் பங்கையும் வகிக்காத ஆர்.எஸ்.எஸ் திட்டத்தை செயல்படுத்த பா.ஜ.க களமிறங்கியது. நாட்டில் ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தை காப்பாற்ற தற்போது நடைபெறும் தேர்தல்கள் முக்கியமானவை. நாம் தோல்வியுற்றால், நமது வருங்கால சந்ததியினர் பாதிக்கப்படுவார்கள்.

எங்கள் கூட்டணியில் போட்டியிடும் தேஜஸ்வி யாதவ், நிதிஷ்குமாரின் துரோகத்தை பலமுறை கூறி புலம்பியுள்ளார். நான் அதை ஒரு நல்ல அதிர்ஷ்டம் என்று சொல்கிறேன். பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ்ஸை விட நிதிஷ் குமார் போன்றவர்கள் ஆபத்தானவர்கள். நிதிஷ் குமாரிடம் கொள்கைகள் இல்லை. அவர் அதிகாரத்திற்காக மட்டுமே கவலைப்படுகிறார்” என்று கூறினார். 

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.