Skip to main content

“இருக்கா? இல்லையா? அண்ணாமலை இதற்கு பதில் சொன்னால் போதும்” - அமைச்சர் செந்தில்பாலாஜி

Published on 20/12/2022 | Edited on 20/12/2022

 

“Is there? Isn't it? Annamalai is enough to answer this" Senthilbalaji

 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தன் கையில் கட்டியிருக்கும் வாட்ச் 3.5 லட்ச ரூபாய் என்று தொடர்ந்து விவாதங்கள் நடைபெறுகின்றன. தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வாட்சுக்கான ரசீதைக் கேட்டு ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதில் அளித்த அண்ணாமலை நடைபயணம் மேற்கொள்ளும்போது சொத்துவிவரம் முழுவதையும் வெளியிடுவேன் எனப் பதிவிட்டிருந்தார்.

 

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி இது குறித்துப் பேசுகையில், “தொடர்ந்து அரசின் மீதும், பல்வேறு துறைகள் மீதும் அவதூறுகளைப் பரப்பி எதற்கெடுத்தாலும் குற்றச்சாட்டுகளை அண்ணாமலை சுமத்தி வருகிறார். குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், கடந்த ஆண்டு மின்சாரத்திற்கான நிலக்கரி 143 டாலருக்கு டெண்டர் கோரப்பட்டு இறக்குமதி செய்யப்பட்டது. 

 

அதுவே ஒன்றிய அரசு 203 டாலர் விலையை நிர்ணயம் செய்து மின்சார வாரியங்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பினார்கள். இந்த டாலர் தான் ரேட். இந்த விலைக்கு நாங்கள் சொல்லக்கூடிய நிறுவனங்களுக்கு நிலக்கரி வழங்குவதற்கான உத்தரவுகளை வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்கள். இதில் யார் குறைவான விலையில் கொள்முதல் செய்துள்ளனர். இந்நிலையில், இந்தாண்டு 133 டாலர் விலை நிர்ணயம் செய்து கொள்முதல் செய்துள்ளோம். 

 

அண்ணாமலை தன் சொத்துப்பட்டியலை பேரணி போகும்போது வெளியிடுவேன் எனச் சொல்வது... ஏற்கனவே அரவக்குறிச்சி தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தபோது அவரின் சொத்துப்பட்டியலும் அதில் இருக்கும். மீண்டும் அதை வெளியிட வேண்டிய அவசியம் என்ன. என் கேள்வி ஒன்றுதான். வாங்கின கடிகாரத்திற்கு பில் இருக்கா? இல்லையா?

 

தேர்தலுக்கு முன்னாடி வாங்கி இருந்தால் பில்லை கணக்கில் காட்டி இருக்க வேண்டும். தேர்தலுக்குப் பின் வாங்கி இருந்தால் பில்லை வெளியிட்டிருக்க வேண்டும். நான் தூய்மையான அரசியல்வாதி; நான் சொல்வதெல்லாம் சரியான கருத்துகள் என்றால், ஒரு நிமிடத்தில் பில்லை வெளியிட்டு விடலாமே” எனக் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.