Skip to main content

''அப்போவே எடப்பாடி கிட்ட சொன்னேன்... என் பேச்சை அவர் கேட்கல''-ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Published on 24/09/2022 | Edited on 25/09/2022

 

"Then I said to Edappadi... He won't listen to me" - Rajendra Balaji speech!

 

தமிழகத்தில் என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

 

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''திமுக ஆட்சியில் இன்று ரொம்ப அகம்பாவம் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எதிர்த்து பேசினால் புடிச்சு உள்ள போடு... என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது இங்கே. எல்லோரையும் மிரட்டி பார்க்க முடியுமா? எல்லாரையும் மிரட்டினால் படிஞ்சுருவாங்களா? என்ன செய்திட முடியும் உன்னால. எத்தனை நாள் புடிச்சு உள்ள வச்சுற முடியும். இதற்காக பயப்பட கூடியவன் அண்ணா திமுக தொண்டன் கிடையாது. மிட்டா மிராசுதாரர்களை பார்த்து, ஆலை அதிபர்களை பார்த்து அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பிக்கவில்லை. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு உழைக்கின்ற வர்க்கம் இருக்கிறானே உழைப்பாளி, பாட்டாளி, விவசாயி அவனுடைய வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

 

இந்த மேடையில் சொல்கிறேன் மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தேன், ஆர்ட்ஸ் காலேஜ் கொண்டு வந்தேன், அருப்புக்கோட்டையில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ், சிவகாசியில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வந்தேன், வெம்பகோட்டையில் ஒரு தாலுகா ஆபிஸ், சாத்தூரில் ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், வத்திராகுடியிருப்பில் ஒரு வட்டாட்சியர் அலுவலகம். இப்படி எவ்வளவு கொண்டு வந்தோம். நீங்கள் கொண்டு வந்த எதையாவது ஒன்று சொல்லுங்கள். எல்லா ரோடும் நாங்க தான் போட்டோம். விருதுநகரில் ஜிஹெச் ஹாஸ்பிடல் நான் தான் பூமி பூஜை போட்டேன். நாங்க பார்த்து பார்த்து கட்டினோம். அதற்கெல்லாம் வெள்ளை அடிச்சு கல்வெட்டு வச்சிருக்காங்க. எடப்பாடியார் கிட்ட தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்னாடியே சொன்னேன் 11 மெடிக்கல் காலேஜ்காக பில்டிங் எல்லாம் நாம கட்டி இருக்கோம். அதையெல்லாம் நாம் திறந்து வைத்துவிடுவோம் என்று, ஆனால் அவர் என் பேச்சை கேட்கல. பாலாஜி நாமதான் ஆட்சிக்கு வர போறோம். வந்ததுக்கு பின்னாடி எல்லா இடத்திலும் மீண்டும் அங்கேயே பங்க்ஷன் வச்சு பொதுமக்கள் முன்னாடி திறந்து வைப்போம் என்றார். எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் 10 வருஷம் ஆட்சியில் இருக்கிறோம் பொதுமக்கள் எதாவது மாற்றத்தை விரும்பினால் போச்சு என. ஆனால் நானே தோற்பேன் என்று எனக்கு தெரியாது. என்னை தோக்கடிப்பதற்காக திமுக ஒரு டீமை சென்னையில் இருந்தே கொண்டு வந்துடுச்சு. நான் என்ன செய்ய... மிகப்பெரிய டீமையே போட்டு விட்டாங்க. மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இப்பொழுது ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். நீட் தேர்வவை ஒழித்து விட்டார்களா? முதல் கையெழுத்து போடுவதற்கு பேனா இல்லையா? எழுதாத பேனா, மையில்லாத பேனாவிற்கு 80 கோடி ஒதுக்குகிறீர்கள் அதற்கு மத்திய அரசிடம் போய் போராடி அனுமதி வாங்குறீங்களே முதலில் நீட் தேர்வு விலக்கிற்கு அனுமதி வாங்குங்க'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.