Skip to main content

''அப்போவே எடப்பாடி கிட்ட சொன்னேன்... என் பேச்சை அவர் கேட்கல''-ராஜேந்திர பாலாஜி பேச்சு!

Published on 24/09/2022 | Edited on 25/09/2022

 

"Then I said to Edappadi... He won't listen to me" - Rajendra Balaji speech!

 

தமிழகத்தில் என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது என முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியுள்ளார்.

 

விருதுநகரில் நடைபெற்ற அதிமுக கட்சி கூட்டத்தில் பேசிய தமிழக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ''திமுக ஆட்சியில் இன்று ரொம்ப அகம்பாவம் நடந்து கொண்டிருக்கிறது. யாராவது எதிர்த்து பேசினால் புடிச்சு உள்ள போடு... என்ன ராஜபக்சே ஆட்சியா நடக்கிறது இங்கே. எல்லோரையும் மிரட்டி பார்க்க முடியுமா? எல்லாரையும் மிரட்டினால் படிஞ்சுருவாங்களா? என்ன செய்திட முடியும் உன்னால. எத்தனை நாள் புடிச்சு உள்ள வச்சுற முடியும். இதற்காக பயப்பட கூடியவன் அண்ணா திமுக தொண்டன் கிடையாது. மிட்டா மிராசுதாரர்களை பார்த்து, ஆலை அதிபர்களை பார்த்து அதிமுகவை எம்ஜிஆர் ஆரம்பிக்கவில்லை. ஒட்டிய வயிறோடு, கிழிந்த சட்டையோடு உழைக்கின்ற வர்க்கம் இருக்கிறானே உழைப்பாளி, பாட்டாளி, விவசாயி அவனுடைய வாழ்க்கைத்தரம் உயர்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக.

 

இந்த மேடையில் சொல்கிறேன் மெடிக்கல் காலேஜ் கொண்டு வந்தேன், ஆர்ட்ஸ் காலேஜ் கொண்டு வந்தேன், அருப்புக்கோட்டையில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ், சிவகாசியில் ஒரு ஆர்டிஓ ஆபீஸ் கொண்டு வந்தேன், வெம்பகோட்டையில் ஒரு தாலுகா ஆபிஸ், சாத்தூரில் ஒரு கோட்டாட்சியர் அலுவலகம், வத்திராகுடியிருப்பில் ஒரு வட்டாட்சியர் அலுவலகம். இப்படி எவ்வளவு கொண்டு வந்தோம். நீங்கள் கொண்டு வந்த எதையாவது ஒன்று சொல்லுங்கள். எல்லா ரோடும் நாங்க தான் போட்டோம். விருதுநகரில் ஜிஹெச் ஹாஸ்பிடல் நான் தான் பூமி பூஜை போட்டேன். நாங்க பார்த்து பார்த்து கட்டினோம். அதற்கெல்லாம் வெள்ளை அடிச்சு கல்வெட்டு வச்சிருக்காங்க. எடப்பாடியார் கிட்ட தேர்தலுக்கு இரண்டு மாதத்துக்கு முன்னாடியே சொன்னேன் 11 மெடிக்கல் காலேஜ்காக பில்டிங் எல்லாம் நாம கட்டி இருக்கோம். அதையெல்லாம் நாம் திறந்து வைத்துவிடுவோம் என்று, ஆனால் அவர் என் பேச்சை கேட்கல. பாலாஜி நாமதான் ஆட்சிக்கு வர போறோம். வந்ததுக்கு பின்னாடி எல்லா இடத்திலும் மீண்டும் அங்கேயே பங்க்ஷன் வச்சு பொதுமக்கள் முன்னாடி திறந்து வைப்போம் என்றார். எனக்கு அப்பவே ஒரு சந்தேகம் 10 வருஷம் ஆட்சியில் இருக்கிறோம் பொதுமக்கள் எதாவது மாற்றத்தை விரும்பினால் போச்சு என. ஆனால் நானே தோற்பேன் என்று எனக்கு தெரியாது. என்னை தோக்கடிப்பதற்காக திமுக ஒரு டீமை சென்னையில் இருந்தே கொண்டு வந்துடுச்சு. நான் என்ன செய்ய... மிகப்பெரிய டீமையே போட்டு விட்டாங்க. மாற்றம் வேண்டும் என்று மக்கள் நினைத்தார்கள் ஆனால் இப்பொழுது ஏமாற்றப்பட்டு நிற்கிறார்கள். நீட் தேர்வவை ஒழித்து விட்டார்களா? முதல் கையெழுத்து போடுவதற்கு பேனா இல்லையா? எழுதாத பேனா, மையில்லாத பேனாவிற்கு 80 கோடி ஒதுக்குகிறீர்கள் அதற்கு மத்திய அரசிடம் போய் போராடி அனுமதி வாங்குறீங்களே முதலில் நீட் தேர்வு விலக்கிற்கு அனுமதி வாங்குங்க'' என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.