Skip to main content

வாக்கு கேட்டு வருபவர்களை விரட்டுவது பண்பாடல்ல... தமிமுன் அன்சாரி

Published on 30/03/2019 | Edited on 30/03/2019

 

மதுரை பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் ராஜ்ய சத்யன். இவர் மதுரை வடக்கு தொகுதி அதிமுக எம்எல்ஏவான ராஜன் செல்லப்பாவின் மகன். ராஜ்ய சத்யனுக்கு ஆதரவாக வாக்கு சேகரிக்க அமைச்சர் செல்லூர் ராஜுடன் ராஜன்செல்லப்பா புதூர் சங்கர் நகரில் உள்ள முஸ்லீம் ஜமாத் பள்ளி வாசல் முன்பு வெள்ளிக்கிழமை மதியம் சென்றனர். 
 

அப்போது தொழுமை முடித்துக்கொண்டு வந்தவர்கள், நீங்கள் அதிமுகவுக்காக மட்டும் வாக்கு சேகரிக்க வந்திருந்தால் உள்ளே வரலாம். பாஜகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளனர்.
 

Sellur K. Raju


 

அதற்கு செல்லூர் ராஜு, பாஜகவினர் யாரும் வரவில்லை. நாங்கள் மட்டுமே வந்துள்ளோம் என்று கூறியுள்ளார். இதனை ஏற்காத அவர்கள், அமைச்சரையும் எம்எல்ஏவையும் பள்ளிவாசலுக்குள் அனுமதிக்காமல் வெளியேற்றினர். 
 

பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுகவுக்கு மதுரை முழுவதும் வாக்கு அளிக்க மாட்டோம் என்று முடிவு செய்துள்ளோம் என்று பள்ளிவாசலின் நிர்வாக குழு உறுப்பினர் அப்பாஸ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
 

இதுதொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்எல்ஏவுமான தமிமுன் அன்சாரி கூறுகையில், 
 

இந்தியாவின் மிகப்பெரும் ஜனநாயக திருவிழாவாக நாடாளுமன்ற தேர்தல் நடக்கிறது. இதில் கருத்து வேறுபாடுகள், கொள்கை மாறுபாடுகள், கள சிக்கல்கள் இவற்றுக்கிடையே, வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கிறார்கள். இது சட்டம் அவர்களுக்கு தந்திருக்கும் உரிமையாகும்.
 

இந்நிலையில் எங்கள் இடத்துக்கு அல்லது  எங்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில்  வாக்கு கேட்டு வரக்கூடாது என தடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை. அப்படி, வருபவர்களை விரட்டி விடும் செயலும் உகந்ததல்ல.

THAMIMUN ANSARI



இது போன்று வட இந்தியாவில் வெவ்வேறு சமூக வேட்பாளர்களை, மாற்று கருத்துடையவர்களை எங்கள் செல்வாக்குள்ள பகுதிகளுக்கு நுழைய விட மாட்டோம் என கூறும் சங்பரிவார வகையறாக்களுக்கும், இதற்கும் வித்தியாசம் இல்லாமல் போய் விடும். இது  வீண் விமர்சனங்கள் புறப்பட வழி வகுத்து விடும்.
 

அந்தந்த ஊர்களில் தேர்தலுக்கு பிறகு ஒருவரையொருவர் முகம் பார்க்க வேண்டி வரும் என்பதை மறந்து விடக் கூடாது. வீண் பகைமை உருவாகவும், நிரந்தர பிளவு உருவாகவும் வழி வகுத்து விடக் கூடாது. ஆவேசமும், கோப உணர்ச்சியும் அறிவையும், பண்பாட்டையும் சிதைத்து விடக் கூடாது. 
 

எனவே, கொள்கை எதிரிகள் அல்லது கொள்கை ரீதியாக அணி மாறியவர்கள் என யாராகினும், வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் வந்து வாக்கு கேட்பதை தடுக்காதீர்கள். அது ஜனநாயக விரோத செயலாகி விடும்.

 

மாறாக, அவர்களிடம் நமது கோரிக்கைகளை, விருப்பங்களை தெரிவியுங்கள். அல்லது உங்கள் உணர்வுகளை வாக்குகளின் மூலம் வெளிப்படுத்துங்கள்.
 

 தேர்தல் அரசியலை கடந்து கிராமங்கள், நகரங்கள், பெரு நகரங்கள் எங்கும் சமூக நல்லிணக்கத்தை கட்டி காக்கும் சமூக கடமை அனைவருக்கும் இருக்கிறது. அதை மறந்து விடக் கூடாது.
 

 இதனை ஊர் தலைவர்கள், அறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் கவனத்தில் எடுத்து , பொறுப்புணர்வுடன் பக்குவமாக இவற்றை எதிர்கொள்ளுமாறு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் அறிவுறுத்துகிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரையில் தான் லைட் எரிகிறது - பூத் முகவர்கள் தர்ணா

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 booth agents struggle light on the lotus will light up no matter what button is pressed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர். தமிழ்நாட்டில் மதியம் 1 மணி நிலவரப்படி 40.05 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த நிலையில் வாக்கு இயந்திரத்தில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் லைட் எரிவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வியாசர்பாடி எம்.கே.பி. நகர் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளியின் 150வது வாக்குச்சாவடியில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரைக்கு லைட் எரிவதாக புகார் எழுந்துள்ளது. இதனைத் தொடர்ந்து திமுக, அதிமுக பூத் முகவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் தேர்தல் நடத்தும் அலுவலகர்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

Next Story

வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு; மணிப்பூரில் மீண்டும் பதற்றம்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Firing has taken place in polling station of Manipur Parliamentary Constituency

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அதன்படி மணிப்பூர் மாநிலத்தில் உள்ள இன்னர் மணிப்பூர் மற்றும் அவுட்டர் மணிப்பூர் ஆகிய இரண்டு நாடாளுமன்ற தொகுதிகள் உள்ள நிலையில் அதில் இன்னர் மணிப்பூர் தொகுதிக்கும் மட்டும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.  மற்றொரு தொகுதியான அவுட்டர் மணிப்பூருக்கு வரும் 26 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இன்னர் மணிப்பூர்  நாடாளுமன்ற  தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் அங்கோம்சா பிமல் மற்றும் பாஜக சார்பில் பசந்த குமார் சிங் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு துவங்கி நடைபெற்று வந்த நிலையில், மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி ஒன்றில் திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்துள்ளது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.  ஆனால் அதற்குள் மணிப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது அடையாளம் தெரியாத நபரால் மொய்ராங் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.