Skip to main content

டாஸ்மாக்கை மூடியதால் பேராபத்தில் தமிழகம்? ஆக்ஷன் எடுக்கத் தயாரான எடப்பாடி... அதிர வைத்த காரணம்!

Published on 06/04/2020 | Edited on 06/04/2020

ஊரடங்கு உத்தரவால் டாஸ்மாக்கை மூடிய பிறகு, வேறுவித ஆபத்து தமிழகத்தைச் சூழ்ந்து கொண்டு இருப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பற்றி விசாரித்த போது,சென்னையைச் சுற்றிப் பல இடங்களில் கள்ளச்சாராயம் சப்ளை செய்யப்படுவதாகச் சொல்லப்படுகிறது. தென்மாவட்டங்கள் வரை தற்போது அது பரவியிருப்பதாகக் கூறுகின்றனர். பெரும் பாலும் ஆங்காங்கே இருக்கும் ஆளும்கட்சிப் பிரமுகர்கள் இந்தப் பிஸ்னஸில் வரிந்து கட்டிக்கொண்டு இருப்பதாகக் கூறுகின்றனர்.சில இடங்களில் போலி மதுபானத் தொழிற்சாலைகளும் விறுவிறுப்பாக நடத்தப்படுகிறது. உயிருக்கு உலை வைக்கக் கூடிய ’ரெக்டிஃபைடு மெத்தனால்’ என்னும் ஸ்பிரிட்டை தண்ணீர் கலந்து, அப்படியே கள்ளச்சாராயமாக விற்பதாகவும் கூறுகின்றனர்.
 

admk


 

மேலும் சென்னையிலும் இந்த ரெக்டிஃபைடு மெத்தனால் குடிமகன்களைத் தள்ளாட வைத்து கொண்டிருக்கிறது என்கின்றனர். இப்படிப்பட்ட டேஞ்சரஸ் சரக்குகள் காய்கறி மற்றும் பால் வண்டிகள் மூலம் விநியோகிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இந்த வியபாரத்ததைத் தடுக்க முனைந்த விவகாரத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரை, சாராயக் கும்பல் துப்பாக்கியால் சுட்ட சம்பவமும் அதிர வைத்துள்ளது. பல இடங்களிலும் ஆளுந்தரப்பினர்தான் சரக்கு சப்ளை செய்வதாகப் புகார் எழுந்துள்ளது.இது தொடர்பான ரிப்போர்ட் டி.ஜி.பி. திரிபாதி டேபிளில் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த விஷயத்தை அறிந்த அவர் சாராய சப்ளையைக் கட்டுப்படுத்த லோக்கல் சப்ளை பார்ட்டிகள் யாரையாவது என்கவுண்டர் பண்ணி, சாராயக் கும்பல்களுக்கு ஷாக் ட்ரீட்மெண்ட் கொடுக்கலாமா என்கின்ற ஆலோசனையில் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகக் காக்கிகள் வட்டாரத்தில் முணுமுணுக்கப்படுகிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.