Skip to main content

''எடப்பாடி, அவராகப் பார்த்து இதனை நிறுத்திக்கொள்ள வேண்டும்''-அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி!

Published on 26/09/2021 | Edited on 26/09/2021

 

minister thangam thennarasu press meet

 

தமிழகத்தில் விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு தொடர்ந்து பேசி வருகிறார். அதில், திமுக அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, சம்பிரதாயத்திற்கு இரண்டு... மூன்று... அறிவிப்புகளை மட்டும் வெளியிட்டிருக்கிறார்கள். அதேபோல் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டுள்ளது எனக் குற்றச்சாட்டு வைத்திருந்தார்.

 

இதற்குத் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிலளிக்கும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “திமுக அளித்த 505 வாக்குறுதிகளில் 222 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. திமுக ஆட்சி பொறுப்பேற்று 4 மாதமே ஆன நிலையில் பெரும்பாலான வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் சொன்னது மட்டுமின்றி சொல்லாததையும் செய்துகொடுத்துள்ளது திமுக அரசு'' எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் தற்போது தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், ''அவர்கள் ஆட்சியில் அவர்கள் என்னனென்ன தகிடுதத்தங்களை எல்லாமே செய்திருக்கிறார்களோ...  பாம்பின் கால் பாம்பறியும் என்பதைப்போல தாங்கள் செய்த தவறுகளை எல்லாம் இவர்களும் செய்வார்கள் என்று அவராக ஒரு கற்பனை உலகத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார். அப்படிப்பட்ட அவசியமே எங்களுக்குத் தேவையில்லை. மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின்பால் இருக்கிறார்கள். நான்கு மாதத்திலேயே தமிழ்நாடு முதல்வர் செய்திருக்கக்கூடிய சாதனைகள், அவர் நிறைவேற்றியிருக்கக்கூடிய வாக்குறுதிகள், அவர் எடுத்து வைத்திருக்கக்கூடிய திட்டங்களினால் மக்கள் மிகுந்த நம்பிக்கையும், மிகுந்த ஆதரவு தருகிறார்கள். எனவே யாருடைய பெட்டியையும் யாரும் மாற்றவில்லை. மக்களின் ஏகோபித்த ஆதரவோடு திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணியில் இருக்கக்கூடிய கட்சிகள் உள்ளாட்சித் தேர்தலில் மகத்தான ஆதரவைப் பெற்று வெற்றி பெறுவோம்.

 

minister thangam thennarasu press meet

 

திமுக அரசுக்கு எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை எனப் பொய் கூறி வருகிறார் எடப்பாடி பழனிசாமி. வேண்டுமென்றே இப்படி பொய் கூறி திசை திருப்பி வருகிறார். 2011 லிருந்து 2021 ஆம் ஆண்டு வரை சொல்லியதை அதிமுக அரசு நிறைவேற்றவில்லை. தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த தமிழக முதல்வர் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். அனைவருக்கும் தெரியும், டி.ஜி.பி நான்கைந்து மாவட்டங்களில் அவரே நேரடியாகச் சென்று அங்கிருக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் பேசி குற்றங்களைத் தடுப்பதற்கும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை மீது தகுந்த நடவடிக்கைகளை சட்டப்படி எடுப்பதற்கான நடவடிக்கைகளையும்  செய்து வருகிறார். 

 

எடப்பாடி பழனிசாமி அவதூறுகள் பேசுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இதனால் அவரே அவரை தாழ்த்திக் கொண்டு வருகிறார். தமிழக மக்களை ஏமாளிகளாக்கும் முயற்சியில் எடப்பாடி பழனிசாமி ஈடுபட்டு வருகிறார். அதை அவராகப் பார்த்து நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் எங்களுடைய நிலைப்பாடு. இப்படி அவர் தொடர்ந்து சொல்வாரே என்று சொன்னால் அவர் சொல்வதற்கான தக்க பதிலடிகள் அவ்வப்போது தரப்படும்'' என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.