Skip to main content

தமிழகத்தில் களமிறங்கும் பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள்!

Published on 20/12/2020 | Edited on 20/12/2020

 

tamilnadu assembly election 2021 bjp and rss leaders

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதால் அடுத்த மாதம் முதல் தமிழகத்தில் பா.ஜ.க. தலைவர்களும், ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் களமிறங்கத் திட்டமிட்டுள்ளனர். தமிழகத்திலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு மத்திய அமைச்சர் வீதம் பா.ஜ.க. அமைச்சர்களின் சுற்றுப் பயண விபரங்களைத் திட்டமிட்டு வருகிறது பா.ஜ.க.வின் தேசிய தலைமை. இதற்கான பயண திட்ட விபரங்கள் 90 சதவீதம் முடிந்திருக்கிறது. அந்த வகையில், இனி வரும் மாதங்களில் தமிழகத்தில் தேசிய அளவிலான பா.ஜ.க. தலைவர்கள் வருகைதான் பரபரப்பாக பேசப்படவிருக்கிறது.

 

பா.ஜ.க. தலைவர்கள் மற்றும் மத்திய அமைச்சர்களின் வருகை ஒரு புறம் இருக்க, பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் தமிழகத்தை குறி வைத்துள்ளனர். அந்த அமைப்பின் தலைவரான மோகன் பகவத் ஜனவரி மாதம் 13- ஆம் தேதி சென்னைக்கு வருகிறார். 

 

சென்னையில் குடிசைவாசிகளுக்கு மத்தியில் பொங்கல் விழாவை நடத்தி அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துக் கொள்ளவிருக்கும் மோகன் பகவத், அந்த நிகழ்ச்சியில், "பா.ஜ.க.வின் ஆட்சியின் நிர்வாகத் திறனையும், தமிழக அரசியல் கட்சிகளால் தமிழகம் எந்தளவுக்கு பின்னோக்கிச் சென்றுள்ளது என்பதையும் விவரித்து பா.ஜ.க.வுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவிருக்கிறார்" என்கிறார்கள் தமிழக பா.ஜ.க.வினர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.