Skip to main content

சுந்தர்.சி மீது வருத்தத்தில் உள்ள பாஜக நிர்வாகிகள்!

Published on 22/03/2021 | Edited on 22/03/2021

                                                             

sundar.c bjp leaders election campaign

                                   

ஆயிரம் விளக்கு தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் குஷ்புவின் வெற்றிக்காகக் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார் அவரது கணவர் சுந்தர்.சி. ஆனாலும் அவர் மீது ஏகத்துக்கும் அதிருப்தியில் இருக்கிறார்கள் அ.தி.மு.க.மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள்.

 

தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள தேர்தல் பணிக்குழுவைப் பார்வையிட தினமும் காலையில் ஒரு விசிட் அடிக்கிறார் சுந்தர்.சி. பணிக்குழுவில் இருக்கும் நிர்வாகிகளைப் பார்த்து, "மேடம் (குஷ்பு) எவ்வளவு பெரிய ஆர்டிஸ்ட்! அதற்குத் தகுந்த மாதிரி பிரச்சாரத்தை நீங்க முன்னெடுக்க மாட்டேங்கிறிங்க. ஏனோ தானோ என்று இருக்கீங்க. இப்படியிருந்தா எனக்குப் பிடிக்காது" என்று கடிந்து கொள்கிறாராம்.

 

sundar.c bjp leaders election campaign

 

இதனால், பா.ஜ.க. தேர்தல் பணிக்குழுவில் உள்ள நிர்வாகிகள் முகம் சுழிக்கின்றனர். மேலும், குஷ்பு பிரச்சாரம் செய்வதற்கு பெரிய வாகனம் வேண்டும் என சுந்தர்.சி. சொல்லியிருக்கிறார். அதற்கு, "இப்போ இருக்கிற வாகனமே நல்லாதானே இருக்கு. அது வேண்டாம்னா… நீங்க தான் சார் ஏற்பாடு செய்தாகனும். நாங்க எங்கே போறது?" என்றும் சொல்லியுள்ளனர் பா.ஜ.க.வினர். 

 

தாமரையில் குஷ்பு போட்டியிட்டாலும் தாமரை இலையில் ஒட்டாத தண்ணீர் போலத்தான் பா.ஜ.க. தொண்டர்களின் தேர்தல் வேலைகள் இருக்கின்றன. இதற்கிடையே, தொகுதியில் உள்ள பா.ஜ.க.வினர் பெரும்பாலும், துறைமுகம் பகுதியில் போட்டியிடும் வினோஜ்.பி செல்வத்திற்கு வேலை செய்யச் சென்றுவிட்டதாக பா.ஜ.க.வில் பேசப்படுகிறது.


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.