Skip to main content

‘என் பேச்சை கேக்கல அவர்கிட்டயே பதவியை கேளுங்க..’ துரைமுருகனின் பதிலால் ஸ்டாலின் அதிர்ச்சி!

Published on 19/10/2021 | Edited on 19/10/2021

 

 Stalin was shocked by Thuraimurugan's reply.

 

ஒன்பது மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது திமுக. மாவட்ட சேர்மன், வைஸ்சேர்மன், 74 ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர், துணைத் தலைவருக்கான தேர்தல் வரும் 22ஆம் தேதி நடைபெறவுள்ளது. 9 மாவட்ட சேர்மன், வைஸ்சேர்மன், 73 ஒன்றியங்களின் தலைவர், துணைத்தலைவர் பதவிகளுக்குப் போட்டியே இல்லாத நிலை ஏற்படவுள்ளது. இந்நிலையில் சில ஒன்றியங்களில் பெரும் தோல்வியைச் சந்தித்த அதிமுகவுக்குச் சாதகமாக திமுக கவுன்சிலர்களை வாக்களிக்கவைத்து ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர் தேர்தலில் அதிமுகவை வெற்றி பெறவைக்க திமுக நிர்வாகிகளே முயல்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு திமுக தலைவரும், முதலமைச்சருமான ஸ்டாலினிடம் புகாராகச் சென்றுள்ளதாகக் கூறுகிறார்கள் திமுக நிர்வாகிகள் சிலர்.

 

திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 வார்டுகள் உள்ளன. இதில் ஆளும்கட்சியான திமுக 11, அதிமுக 4, பாமக 2, சுயேச்சை 1. சேர்மன் தேர்தலில் வெற்றிக்குத் தேவையான இடங்களை விடக் கூடுதலாகவே திமுகவிடம் உள்ளன. இந்த ஒன்றியத்தின் சேர்மன் பதவி பொது பெண்கள் என வைக்கப்பட்டுள்ளது. சேர்மன் பதவியில் தனது மருமகள் காயத்திரியை நிறுத்தி வெற்றி பெறவைக்க முயற்சி செய்கிறார் மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏவுமான தேவராஜ். இதற்குத்தான் கடுமையான எதிர்ப்பு எழுந்து திமுக கவுன்சிலர்களை அதிமுகவுக்கு வாக்களிக்கவைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் திமுக நிர்வாகிகள் சிலர் என்கிற தகவல் கிடைத்து. உண்மை என்ன என விசாரித்தோம்.

 

ஆலங்காயம் ஒன்றியக்குழு தலைவர் பதவியைக் குறிவைத்து மாவட்டச் செயலாளரும், ஜோலார்பேட்டை எம்.எல்.ஏவுமான தேவராஜ், கட்சி நிர்வாகிகள் சிலரை ஓரம் கட்டினார். அதில் முக்கியமானவர் அவைத்தலைவர் முனிவேல். தேவராஜின் நெருங்கிய நண்பர். முனிவேல் தனது மனைவியை சேர்மனாக்க ஒன்றியக்குழு கவுன்சிலருக்கு சீட் கேட்டார். முனிவேலுக்கு மாவட்ட கவுன்சிலர் சீட் தந்து அவரை ஓரம்கட்டினார். மாவட்ட கவுன்சிலருக்கு வெற்றிபெற்ற முனிவேல்தான், ஆலங்காயம் சேர்மன் தேர்தலில் அதிமுக வெற்றிபெற திமுக கவுன்சிலர்கள் மூலம் காய்நகர்த்துகிறார். இவருக்குப் பின்னால் பொதுச்செயலாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் உள்ளார். என்னைப் பழிவாங்கக் கட்சியைத் தோற்கடிப்பவர்களுக்கு துணைபோகிறாரென முதலமைச்சரிடம் புகார் சொல்லிவிட்டுவந்தார் என்கிறார்கள்.

 

உண்மை அதுவல்ல. தேவராஜ் மருமகளை சேர்மனாக்க வேண்டும் என்பதற்காகவே கொத்தக்கோட்டை ஒன்றியக்குழு வார்டுக்கு தனது மகனான திமுக பொறியாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பிரபாகரனை கவுன்சிலர் தேர்தலுக்கு நிறுத்தியிருக்கலாம். மகன் வெற்றி பெற்றால் சேர்மனாக முடியாது என்பதால் அந்த வார்டில் திருமணமாகி சில மாதங்களேயான பிரபாகரன் மனைவி காயத்ரியை நிறுத்தினார். அதே வார்டில் அதிமுகவில் ஜெய்சங்கர் என்பவர் நிற்பதாக இருந்தது. அந்த பகுதியில் பிரபலமான செல்வாக்குமிக்க கட்சிக்காரர், அவர் நின்றிருந்தால் தேவராஜ் மருமகள் தோற்பதற்கு வாய்ப்புண்டு என்பதால் அவரை தேர்தலில் நிற்கவிடாமல் தடுக்க முன்னாள் அமைச்சர் வீரமணி வீட்டில் ரெய்டு நடந்தபோது செய்தியாளர்கள் தாக்கப்பட்ட புகாரில் ஜெய்சங்கர் பெயரையும் நுழைத்தனர். இதனால் தலைமறைவான ஜெய்சங்கர், தனது மனைவியைத் தேர்தலில் நிறுத்த மனு செய்தார். அந்த மனுவை நேரம் முடிந்து தாக்கல் செய்த மனுவென ரத்து செய்யவைத்தார் தேவராஜ். தேர்தலில் திமுகவுக்குப் பெரிய வெற்றி, சேர்மன் பதவி திமுகவுக்கு என்பது 100 சதவீதம் உறுதியாகிவிட்டது. தனது மருமகள்தான் சேர்மன் என்பதில் உறுதியாகி அவரது பெயரை சேர்மன் வேட்பாளராக அறிவிக்க மா.செ என்கிற முறையில் தலைமைக்குப் பரிந்துரை செய்ய முடிவு செய்தார்.

 

இந்நிலையில் சேர்மன் பதவிக்கான போட்டியில் திமுக நிர்வாகியும், அமைச்சர் துரைமுருகன் ஆதரவாளருமான பாரி தனது மனைவி சங்கீதாவை சேர்மனாக்க வேண்டும், எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்கிறேன் என துரைமுருகனிடம் சென்று கேட்டார். நிர்வாகிகள் சிலர், தேவராஜ் மாவட்டச் செயலாளர், எம்.எல்.ஏ. அவரது மருமகள் சேர்மன் என்றால் என்ன அர்த்தம். சேர்மன் பதவியை விட்டுத்தரச்சொல்லுங்க எனக்கேட்டனர். துரைமுருகனோ, என் பேச்சை தேவராஜ் கேட்பதில்லை. மா.செ அவர்தான் அவர்தான் பட்டியல் தரனும் அவர்கிட்டயே பதவி கேளுங்கள் சொன்னார். அவர்களும் வந்து தேவராஜ்யிடம் சேர்மன் பதவி கேட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இவர் கடுமையாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதை அவர்கள் மீண்டும் துரைமுருகனிடம் கூறியுள்ளனர். இந்த விகாரத்தில் தலைவர் தான் முடிவெடுக்கவேண்டும் என்றுள்ளார். அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்ட நிலையில் விவகாரத்தை தெரிந்துகொண்டு, தான் கட்சியினருக்குச் செய்த உள்ளடி, மருமகளை சேர்மனாக்கும் விவகாரத்தை மறைத்து உட்கட்சி எதிர்ப்புகளைச் சமாளிக்கத் தலைவரிடம் பொதுச்செயலாளர் மீது புகார் சொல்ல முடியாது என்பதால் அவரது மகன் வேலூர் எம்.பியான கதிர்ஆனந்த், அதிமுக வெற்றி பெறத் துணைபோகிறவர்களுக்கு ஆதரவாக என் மாவட்டத்தில் செயல்படுகிறார் எனப் பொய்யான தகவலைக் கூறியுள்ளதாகத் தெரிகிறது என்கிறார்கள்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அதிமுகவின் பொய் பிரச்சாரம் மக்களிடம் எடுபடாது'-ஐ.பி.செந்தில்குமார் பேச்சு

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'AIADMK's false propaganda will not be accepted by the people' - IP Senthilkumar's speech

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தீவிரப் படுத்தியுள்ளன.

இந்நிலையில், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்றத் தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் திண்டுக்கல் பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். பிரச்சாரத்திற்கு ரெட்டியார்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய பெருந்தலைவருமான சிவகுருசாமி தலைமை தாங்கினார். திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் வழக்கறிஞர் காமாட்சி ஒன்றிய குழு உறுப்பினர் தமிழ்ச்செல்வி முத்துகிருஷ்ணன், ரெட்டியார்சத்திரம் ஒன்றிய சிபிஎம் செயலாளர் சக்திவேல் வரவேற்றுப் பேசினார்.

நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பேசுகையில், ''மலைவாழ் மக்களுக்கு திமுக அரசு துரோகம் செய்தது போல் பொய்யான பிரச்சாரத்தை அதிமுகவினர், பாஜகவினர் பரப்பி வருகின்றனர். இது முற்றிலும் மோசடியான பிரச்சாரம் இது பொதுமக்கள் மத்தியில் எடுபடாது. கடந்த ஆண்டு 5.8.22 ஆம் தேதி அன்று, நமது திமுக பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி அவர்கள் ஆடலூர் மற்றும் பன்றி மலைப் பகுதியில் வசிக்கும் பொலையர் இன மக்களைப் பழங்குடியின மக்களாக மாற்றி அவர்களுக்கான உரியச் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று மத்திய பழங்குடியின துறை அமைச்சர் அர்ஜீன் முன்டாவிடம் கோரிக்கை மனு கொடுத்துள்ளார்.

இதோ அந்தக் கோரிக்கை மனு என்று மனுவைத் தூக்கி காண்பித்து பிரச்சாரம் செய்தார். எதையும் ஆதாரத்துடன்தான் நாங்கள் பேசுவோம். ஆத்தூர் தொகுதியின் செல்லப் பிள்ளையாக இருக்கும் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆடலூர் ஊராட்சிக்கு மட்டும் எண்ணற்ற நலத்திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இங்குள்ள மக்கள் மருத்துவ வசதிக்காக தாண்டிக்குடி, கொடைக்கானல் செல்ல வேண்டிய நிலையை மாற்றி ஆடலூருக்கும் பன்றி மலைக்கும் இடையே மிகப்பெரிய மருத்துவமனையைக் கொண்டு வந்துள்ளார். தேர்தல் முடிந்த பின்பு மருத்துவமனை திறக்கப்படும். ஆம்புலன்ஸ் வசதியுடன் மலையில் உள்ள எந்தக் கிராம மக்களும் இங்கு வந்து சிகிச்சை பெறலாம், விரைவில் மலைக் கிராமத்தில் வசிக்கும் பெண்களும் இலவசமாகப் பேருந்தில் பயணம் செய்ய தமிழக முதல்வர் முக.ஸ்டாலின் விரைவில் உத்தரவிட உள்ளார். அதன்பின்னர் நீங்கள்(பெண்கள்) திண்டுக்கல்லுக்கு இலவசமாகப் பயணம் செய்யலாம்'' என்று கூறினார்.

Next Story

'திமுக காங்கிரஸ் ஆட்சிக்கால சாதனை பட்டியலைச் சொல்லவா?'-தீவிர  பரப்புரையில் மு.க.ஸ்டாலின் 

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
'kalaingar himself calls him Balam Balu'- M.K.Stalin in intense lobbying

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத்  தீவிரபடுத்தியுள்ளன.

இந்நிலையில் காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ''பாஜக எதிர்ப்பில் இபிஎஸ் உறுதியாக இல்லை. எடப்பாடி பழனிச்சமியால் பாஜகவை ஒருபோதும் எதிர்க்க முடியாது. இந்தியா கூட்டணிக்கான ஆதரவு அலை இந்தியா முழுவதும் வீசுகிறது. மக்களோடு இருந்து மக்களுக்காக பணியாற்றக் கூடியவர்கள் என்ற நம்பிக்கை எழந்துள்ளது. திமுக காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஒன்றியத்தில் எத்தனை சாதனைகளை செய்திருக்கிறோம் பெரிய பட்டியலே இருக்கிறது.

உதாரணத்திற்கு நம்ம டி.ஆர்.பாலு, மூன்று துறைகளில் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்த பொழுது செஞ்ச சாதனைகளை மட்டும் சொல்லவா? ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த பொழுது தமிழ்நாட்டுக்கு மட்டும் 22,78 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய திட்டங்களைக் கொண்டு வந்தார். சுற்றுச்சூழல் வனத்துறை அமைச்சராக தேசிய பல்கலைக்கழக உயிரின வளங்கள் ஆணையத்தை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்தார். கப்பல் தரைவழி போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறையில் இருந்த பொழுது 56,644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு கொண்டு வந்தார். இது மட்டுமா கிண்டி கத்திப்பாரா  மேம்பாலம், மாடி பாலம், தமிழ்நாட்டு தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டுமே 335 பாலங்களைக் கட்டி சாதனை பண்ணி இருக்கிறார். அதனால்தான் கலைஞரே பாலம் பாலு என்று அழைத்தார். இதேபோன்ற சாதனைகளை செய்வதற்காகவே ஒன்றியத்தில் நமது கூட்டணி ஆட்சியில் இருக்கும். அதற்காகத்தான் இந்த எலக்சனின் ஹீரோவாக தேர்தல் அறிக்கையை திமுகவும் காங்கிசும் வெளியிட்டு இருக்கிறோம். திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள சமூக நீதி அம்சங்கள் காங்கிரஸ் கட்சியினுடைய தேர்தல் அறிக்கையில் எதிரொலித்திருக்கிறது'' என்றார்.