Skip to main content

தமிழகத்தை மோடியிடம் இருந்து காப்பாற்ற, திமுக கூட்டணி வெற்றிபெறவேண்டும்; வைகோ

Published on 05/04/2019 | Edited on 05/04/2019

தமிழகத்தில் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான பிரச்சார களம் சூடுபறக்கிறது. அரசியல்கட்சிகளின் தலைவர்கள் தங்களின் ஆதரவு வேட்பாளர்களுக்கு வாக்குவேட்டை நடத்திவருகின்றனர்.

 

vaiko

 

அந்தவகையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளரான  ராமலிங்கத்திற்கு கும்பகோணத்தில் வாக்கு கேட்டு பேசினார். அதனை தொடர்ந்து நாகை  நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர்  செல்வராஜுக்கும்,  திருவாரூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் கலைவாணனுக்கும் ஓட்டு கேட்டு திருவாரூரில் பேசினார்.
 

"திராவிடர்களின் திருநகரங்கள் மூன்று, வெண்தாடி வேந்தர் பெரியார் பிறந்த ஈரோடு, பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம், முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த இந்த திருவாரூர் ஆகிய மூன்றும். கடந்த சட்டமன்றத்தேர்தலில்  தமிழகத்தையே திகைக்கவைக்க கூடிய அளவில் அதிகவாக்கு வித்தியாசத்தில் கலைஞரை வெற்றி பெற வைத்தது இந்த திருவாரூர் மக்கள். ஆனால், கலைஞர் தற்போது நம்மோடு இல்லை அண்ணாவோடு அவருக்குப் பக்கத்தில் உறங்கிக் கொண்டிருக்கிறார். அதே நேரத்தில் அவரது சொந்த மண்ணில் இன்று நாம் பிரச்சாரம் செய்கிறோம். அவருக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் இருக்குமானால் திருவாரூரில் உதய சூரியனை மீண்டும் உதிக்கச் செய்வதுதான்.
 

கலைஞரின் மாநில சுயாட்சியை நிலைநாட்டிட, மத்தியில் மோடி ஆட்சியை வீட்டுக்கு அனுப்பிட காங்கிரஸ் பேரியக்கம் மத்தியில் ஆட்சி கட்டிலில் அமர்ந்திட, மீண்டும் திமுக வெற்றி பெற வேண்டும். ஊருக்கே சோறு போட்ட டெல்டா மாவட்டம் இன்று பாலைவனமாக மாற்றுவதற்கான திட்டத்தை மோடி அரசு நேரடியாகவே எடுத்துள்ளது. ரூ. 5,912 கோடி நிதி ஒதுக்கீடு செய்து மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கியதோடு, அதற்கான சுற்றுச்சூழல் அனுமதியையும் வழங்கிவிட்டது. ஒரு சொட்டு தண்ணீர்கூட மேட்டூருக்கு வரக்கூடாது என்பதுதான் மோடி அரசின் அந்த திட்டம்.  தண்ணீர் இல்லாமல் போனால் இந்த நிலங்கள் பாழ்பட்டு பாலைவனமாக போகும். இந்த நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்க அதானிகளையும், அம்பானிகளையும், வேதாந்தா நிறுவனங்களையும், அனுப்புவார்கள், அவர்கள் வாங்குவது விளைவிப்பதற்காக அல்ல கீழே இருக்கும் இயற்கை வளங்களை சுரண்டவதற்காக.
 

இந்தியாவில் 80 லட்சம் பேர் வேலைவாய்ப்பு இல்லாமல் படித்த பட்டதாரிகளாக இருக்கிறார்கள். ஆனால்ம, மோடி ஆட்சிக்கு வரும்போது இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு தருவேன் என உலக மகா பொய் சொல்லிவிட்டு ஐந்தாண்டு ஆட்சியை முடித்துவிட்டார். ஆனால், 2,000 பேருக்கு கூட வேலை கொடுக்கவில்லை மோடி அரசு. ஒவ்வொருவர் வங்கிக் கணக்கிலும் ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்வோம் என்றனர், அதற்காக அக்கவுண்ட் ஓபன் செய்ய சென்றால் 5,100 ரூபாய் இல்லையென்றால் அவதாரம் போட வைத்தனர், இப்படியே 10,320 கோடியை வசூலித்தனர். சிறு வணிகர்களின் வாழ்க்கையை ஜி.எஸ்.டி. மூலம் அழித்துவிட்டு, அதற்கு பதிலாக வெளிநாடுகளில் உள்ள பெரு குடும்பங்களையும், பெருவணிகர்களையும் இந்தியாவிற்கு வருவதற்கு வாசலை திறந்து வைத்திருக்கிறது. கார்ப்பரேட்டுகளின் ஏஜென்ட் ஆகவே இருக்கிறது.
 

 அதேவேளையில் விஜய் மல்லையா ரூ. 9 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார். கர்லின் கம்பெனி ஓனர் ரூ. 9 ஆயிரத்து 500 கோடியை ஆந்திர வங்கியில் ஏமாற்றிவிட்டு தப்பி விட்டார். இப்படி 23 பேர் ரூ. 90 ஆயிரம் கோடியை ஏமாற்றிவிட்டு வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் ரூ. 5 லட்சம் கோடி கடன்களையும் தள்ளுபடி செய்திருக்கிறது மோடி அரசு. இது அவர்களின் லட்சனம் என்றால், மாநில அரசோ மத்திய அரசுக்கு காலில் விழும் அரசாக இருக்கிறது. மத ஒற்றுமை உள்ள தமிழகத்தில் மத வெறியை தூண்ட  மோடி அரசு துடிக்கிறது.
 

1948 ஜனவரி 30-ஆம் தேதியை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்துவிடாது. இந்து வெறியர்கள் காந்தியை சுட்டு படுகொலை செய்யப்பட்ட நாள். அந்த நிமிடத்தில் திராவிட தலைவர்களான பெரியார் முதல் அண்ணா வரை பரிதாபப் பட்டார்கள், கோபப்பட்டார்கள், அதே காந்தியை 70 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2 மாதத்திற்கு முன்பு நரேந்திர மோடியின் ஆதரவில் ஆட்சி நடந்துகொண்டிருக்கும் உ.பி.யில் காந்தி பொம்மையை வெற்று துப்பாக்கியால் சுட்டு ரத்தம் சொட்ட சொட்ட வழிவது போல் வெறியை காட்டுகின்றனர். உலகம் முழுவதும் கோட்சேவின் சிலை வைப்போம் என்கிறார்கள்.
 

ஆனால் எங்களை மத துரோகிகள் என்றும், இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் பேசுகிறார்கள், நாங்கள் ஒற்றுமையை காப்பவர்கள், அதற்காக கலைஞரும் நாங்களும் செய்த சாதனைகள் ஏராளம். ஓடாத தேரை ஓட வைத்தவர் கலைஞர். அந்த வகையில் நாங்கள் எம்மதத்தையும் மதிப்பவர்கள்.
 

 கஜா புயல் பாதித்தபோது மோடி வரவில்லை, வருத்தம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் நிமிடத்திற்கு நிமிடம் ஏதாவது ஒரு நாட்டில் சென்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார். தமிழகத்தை வேரறுக்க மோடி துடிக்கிறார், அந்த நிலை மாற வேண்டுமானால் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் வெற்றி பெற வேண்டும்" என்று தனக்கே உரிய பாணியில் வாக்கு சேகரித்தார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேமுதிக ஒன்றிய செயலாளரை தாக்கிய அதிமுக ஒன்றிய செயலாளர்!

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
AIADMK union secretary attacked DMK union secretary in Karur!

கரூர் மாவட்டத்தில் தேமுதிக  ஒன்றிய செயலாளரை கூட்டணியில் உள்ள அதிமுக ஒன்றிய செயலாளர் தாக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் மாவட்டம் கடவூர் தேமுதிக தெற்கு ஒன்றிய  செயலாளரும் முன்னாள் கவுன்சிலருமான ஆல்வின் என்பவர் பாலவிடுதி காவல் நிலையம் அருகே தன் கட்சி நிர்வாகிகளுடன் பேசிக்கொண்டு இருக்கையில் அவ்வழியே வந்த அதிமுகவைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேண்டுமென்றே ஆல்வின் இடம் வாய் தகராறு செய்துள்ளார்.

இதற்கு ஆல்வின் சாதாரணமாக பதில் அளித்ததையடுத்து ஏற்கனவே தேர்தல் பணப்பட்டுவடாவில் ஏற்பட்ட பகையில் அதிமுக கடவூர் தெற்கு ஒன்றிய செயலாளரும் மாவட்ட கவுன்சிலருமான ரமேஷ் நேரடியாக சம்பவ இடத்திற்கு வந்து காவல் நிலையம் முன்பே கொலை செய்யும் நோக்கோடு ரமேஷ் ஆல்வினை தாக்கி உள்ளார். இதனால் படுகாயம் அடைந்த ரமேஷ் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு தலைமை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இது குறித்து பாதிக்கப்பட்ட ஆல்வின் கூறுகையில், கொலைவெறி தாக்குதல் நடத்திய அதிமுக கவுன்சிலர் ரமேஷை மாவட்ட காவல்துறை கைது செய்திட வேண்டும். அவரை குண்டர் சட்டத்தில் அடைத்திட வேண்டும். அதிமுக, தேமுதிக கூட்டணியில் இருந்தும் அதிமுகவினர்  தாக்குதல் நடத்தி உள்ளனர். இதனால் தான் பெரும் அளவில் மன உளைச்சல் அடைந்ததாகவும் இதற்கு அதிமுக தலைமை பதில் சொல்லியே ஆக வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். தேர்தல் முடிந்ததும் கூட்டணி முடிந்தது போல அதிமுகவினர் தங்கள் வேலையை காட்ட துவங்க உள்ளனர் என பாதிக்கப்பட்டவருடன் வந்த தேமுதிக நிர்வாகிகள் வேதனையுடன் புலம்பினர்.

Next Story

பாஜகவுக்குத் தீயாய் வேலை பார்க்கும் வைகோ சகோதரி மகன்!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Vaiko, who works as an opposite to mdmk, is his sister's son

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில், விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமாருக்காக கிராமப்புறங்களில் தேர்தல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் ஒருவர். அவரை நம்மிடம் சுட்டிக்காட்டிப் பேசிய நண்பர் “இவரோட தாத்தா மடத்துப்பட்டி கோபால் நாயக்கர் அந்தக் காலத்து காங்கிரஸ்காரர். பெருந்தலைவர் காமராஜரிடம் நெருக்கமாக இருந்தவர். அவருடைய பேரன்தான் இந்தக் கார்த்திகேயன். மதிமுகவுல இருந்தவர் 2019-ல் அதிமுகவுல சேர்ந்தார். இப்ப தேசிய நீரோட்டத்துல கலந்துட்டேன்னு பாஜகவுல சேர்ந்திருக்கார். மனுஷன் தீயா வேலை பார்க்கிறாரு. எதுக்கு கட்சி மாறிக்கிட்டே இருக்கீங்கன்னு கேட்டதுக்கு, கொள்கை பிடிக்காமத்தான் மதிமுகவுல இருந்து வெளிய வந்தேன். அப்புறம் அதிமுகவுல கடம்பூர் ராஜு கிட்ட என்னைப் பத்தி தப்பா சொல்லிட்டாங்க. அதனால அதிமுகவுல நீடிக்க முடியலன்னு சொல்லுறாரு. என்ன கொள்கையோ?” என்று சலித்துக்கொண்டார்.

‘தேர்தல் பணி எப்படிப் போகிறது?’ என்று கார்த்திகேயனிடம் கேட்டோம். “என்னோட நெருங்கிய வட்டத்துல.. சொந்தபந்தங்கள் கிட்ட தாமரைக்கு ஆதரவு திரட்டுறேன். இங்கே கிராமங்கள்ல என்னைத் தெரிஞ்சவங்க நிறைய பேர் இருக்காங்க. அவங்கள எல்லாம் பார்க்கிறேன். பாஜக வேட்பாளர்கள் வெற்றிக்கு அணில் மாதிரி உதவிக்கிட்டிருக்கேன். விருதுநகர், தென்காசின்னு ரெண்டு பார்லிமென்ட் தொகுதிக்கும் நான் வேலை பார்க்கிறேன்.” என்றார்.

பாஜக தலைமை கார்த்திகேயனைக் கட்சிக்குள் இழுத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ-வுடைய சகோதரி 
சரோஜாவின் மகன் என்ற அடையாளம் இவருக்கு உண்டு.