Skip to main content

கமலை சந்திக்கிறாரா சீமான்..?

Published on 27/02/2021 | Edited on 27/02/2021

 

Sasikala meets seeman will seeman join with kamalhasan

 

நாம் தமிழர் கட்சி துவங்கியதிலிருந்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டுவருகிறது. ஒவ்வொரு தேர்தலிலும் சீமான், வேட்பாளர்களை அறிவித்து, தீவிர பிரச்சாரத்திலும் ஈடுபட்டுவருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலிலும் இந்தப் பணிகளை மேற்கொண்டுவருகிறார். இதற்கிடையில் கட்சி துவங்கிய கமல்ஹாசனும் நாடாளுமன்றத்தில் தனித்து போட்டியிட்டார். அப்போது சீமான், “ஒரு தமிழனாக கட்சி துவங்கிய கமலை நான் வரவேற்கிறேன்” எனத் தெரிவித்தார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கமல்ஹாசனுடன் சீமான் கட்சி கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியானது. 

 

இந்தநிலையில் அதிமுகவில் சில குழப்பங்கள் ஏற்பட்டது. சசிகலா சிறையிலிருந்து விடுதலையாகி சென்னையில் இருந்துவருகிறார். மேலும் கடந்த 24ஆம் தேதி ஜெயலலிதாவின் பிறந்தநாளின்போது அவருக்கு மரியாதை செய்துவிட்டு, ச.ம.க. தலைவர் சரத்குமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர் உள்ளிட்டோர்களைச் சந்தித்தார். அதேபோல் அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானையும் சந்தித்தார். அப்போது, “நீங்களும் திமுக வரக்கூடாது என எதிர்க்கிறீர்கள். எங்களோட நிலைபாடும் திமுக வரக்கூடாது என்பதுதான். அதைவிட முக்கியம், இந்த ஐந்து வருடமாக எடப்பாடியார் ஆட்சியில் இருக்கிறார், அவரும் ஒன்னும் பெரிசா, ஜெயலலிதா இருந்த மாதிரி செய்யல எனும் அதிருப்தி இருக்கு. திமுகவை எதிர்க்கிறீர்கள் அதேபோல் அதிமுகவையும் நீங்கள் எதிர்க்க வேண்டும். அதற்கான முயற்சிகளை நீங்கள் எடுக்க வேண்டும்” என சீமானிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. இதேபோன்று சரத்குமாரிடமும் சொன்னதாகவும் கூறப்படுகிறது. 

 

அதேபோல், அதிமுக கூட்டணியில் சரத்குமார் இருப்பதாக சொல்லப்பட்டுவந்த நிலையில், திடீரென ஐ.ஜே.கே. கட்சியுடன் கூட்டணி அமைத்தார். அதனை தொடர்ந்து கமலையும் சந்தித்துள்ளார். கமல்ஹாசன் சரத்குமார் கூட்டணி அமையுமா என்பது விரைவில் தெரியவரும் என அக்கட்சியினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையில் சீமானும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது கமலுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தநிலையில், இப்போதும் அதற்கான முயற்சிகளும் பேச்சுவார்த்தைகளும் நடைபெறுவதாக அக்கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. 

 

கமலுடன் சீமான் இணைந்து பயணிப்பதற்கும் வாய்ப்பு இருக்கிறது. காரணம் கடந்த சில மாதங்களாக கமலுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துவந்திருந்த பழ.கருப்பையாவும் மக்கள் நீதி மய்யத்தில் இணைந்துவிட்டார். அவர் உட்பட அனைவருமே, ஒன்றிணைந்த ஒரு மாற்றத்தை கொண்டுவரவேண்டும் என சொல்லிவருகின்றனர். அதேவேளையில் தமிழகத்தில் திமுகவையும் அதிமுகவையும் எதிர்க்க நம்மைப் போன்ற சின்ன கட்சிகள் எல்லாம் இணையவேண்டும் என அவரும் சொல்லுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றது. சீமானும் இந்தக் கூட்டணியில் இணைவார் என அக்கட்சியின் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. சசிகலா எடுத்த முயற்சிகளில் சரத்குமார் ஒரு பாதைக்கு வந்துவிட்டார். அடுத்தது சீமானும் சசிகலா சொன்ன பாதையை தேர்வு செய்வார் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.   

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை' - போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Naam Tamilar Party candidate arrested for protesting

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் பிற்பகல் 3 மணி நிலவரப்படி சராசரியாக 50 சதவீதத்திற்கும் மேலாக வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்நிலையில் மத்திய சென்னையில் பல்லவன் இல்லத்தின் அருகே உள்ள 165 வது பூத்தில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்கு செலுத்தினால் லைட் எரியவில்லை என புகார் எழுந்தது. தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திகேயன் வாக்குச்சாவடியில் பார்வையிட்டார். இது தொடர்பாக புகாரையும் எழுப்பினார். ஆனால் அவர் வாக்குச்சாவடியில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் நாம் தமிழர் கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகேயன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். வாக்குச்சாவடியில் சர்ச்சை நீடித்த  நிலையில் திருவல்லிக்கேணி காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர் வாக்குச்சாவடிக்கு வருகை தந்துள்ளனர்.

Next Story

“தி.மு.க. அரசு தொடர்ந்து வேண்டாத வேலைகளில் ஈடுபட்டு வருகிறது” - சீமான் பிரச்சாரம்

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
 D.M.K. Govt continues to engage in unnecessary work says Seeman campaign

கடலூர் நாடளுமன்ற தொகுதியில்,  நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் மணிவாசகத்தை ஆதரித்து கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் வடலூரில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “வள்ளலார் 1867ஆம் ஆண்டு ஏற்றி வைத்த அணையா அடுப்பு இன்று வரை பசிப்பிணியை போக்கி வருகிறது. வள்ளலார் சத்திய ஞான சபை பெருவெளியில் 10 லட்சம் முதல் 15 லட்சம் மக்கள் வரை நின்று வழிபட்டு வருகின்றனர். அந்த இடத்தில் திராவிட மாடல் அரசு, தோண்டி சர்வதேச மையம் அமைக்கப் போகிறது. திடீரென தி.மு.க. அரசிற்கு வள்ளலார் மீது என்ன கரிசனம். இதற்கு முன் இவர்கள் ஆட்சி செய்தார்கள்

அப்போதெல்லாம் வள்ளலாரை  தெரியவில்லையா? காரணம் இந்த சர்வதேச மையம் அமைக்க ரூ100 கோடி நிதி ஒதுக்கி, முதல்வர் ஸ்டாலின் மைத்துனர் பொறுப்பாளராக உள்ளார். சர்வதேச மையம் அமைப்பது மகிழ்ச்சி தான். ஆனால், அதனை மக்கள் கூடி வழிபடும் பெருவெளியில் அமைக்கக்கூடாது வேறு இடத்தில்  அமைத்துக் கொள்ளலாம். தேர்தல் நேரத்தில் இதனை ஏன் செய்ய வேண்டும். இன்னும் இரண்டு நாட்கள் பரப்பரை முடிந்தவுடன் இவர்கள் எப்படி தோண்டுகிறார்கள் என பார்ப்போம் .

ஏர்போர்ட் வேண்டாம் அந்த இடத்தில் விவசாயம் செய்ய வேண்டும் என்று கூறினால் ஏர்போர்ட் கட்டுவோம் என கூறுகின்றனர். இயற்கை துறைமுகங்கள் இருக்க செயற்கை துறை முகங்கள் ஏன் எனக் கேட்டால் 1111 ஏக்கரில் செயற்கை துறைமுகம் கட்டுவோம் என கூறுகின்றனர். ஏற்கெனவே வ .உ .சி., காமராஜர் பெயரில் இருக்கும் இரண்டு துறைமுகங்களில் 50 சதவீதம் வேலை இல்லாத போது செயற்கை துறைமுகம் எதற்கு? தொடர்ந்து வேண்டாத வேலைகளில் திராவிட மடல் அரசு ஈடுபட்டு வருகிறது.

சர்வதேச சமயத்தை பெருவழியில் அமைக்க வேண்டாம். அரசில் தொடர்ந்து நீங்களே நீடிக்கப் போவதில்லை. சர்வதேச  மையத்தை  பெருவெளியில் அமைத்தால் மீண்டும் பழையபடி அந்த இடத்தில் மக்கள் வழிபடும் நிலைக்கு கொண்டு வரும் வீண் செலவை எங்களுக்கு வைக்காதீர்கள்.  திருவண்ணாமலையில் சிப்காட் வேண்டாம் என மக்கள் போராட்டம் நடத்தினால் அதை அமைச்சர் எ.வ.வேலு மூலம் மீண்டும் கொண்டுவர முயற்சி செய்கின்றார். தில்லியில் போராடிய விவசாயிகளை மீது துப்பாக்கி சூடு நடத்துகிறது மோடி அரசு.

தமிழகத்தில் போராடும் மக்கள் மீது குண்டர் சட்டத்தை போட்டு அடக்குமுறையை கையாளுகிறது தி.மு.க. அரசு. இந்த இரண்டு அரசுகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. இந்தியாவில் 60 ஆண்டுகளாக காங்கிரஸ் ,பி.ஜே.பி. தான் தொடர்ந்து ஆண்டு வருகிறது. கல்வியில் தரம் உயர்ந்திருக்கிறதா? குடிநீருக்கு வழியுள்ளதா? மருத்துவ கட்டமைப்பு உயர்ந்துள்ளதா? எதுவும் இல்லை. மக்கள் துன்பம், துயரம், பசி, பட்டினி, வேலையில்லா திண்டாட்டம் என தொடர்ந்து வருகிறது.

மாற்றம், முன்னேற்றம் எதுவுமே இல்லை. இது ஒரு மாற்றத்தை கொண்டு வருவதற்கான தேர்தல். நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். கடந்த முறை 39 தொகுதியிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றது. ஏதாவது மாற்றத்தை கொண்டு வந்தார்களா. இந்த தொகுதியில் படித்தவர், ஓய்வு பெற்ற தலைமையாசிரியர், ஆசிரியர் சங்கத் தலைவராக இருந்தவர் மணிவாசகம்  வேட்பாளராக இருக்கிறார். சிந்தித்துப் பார்த்து  அவருக்கு மைக் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்” என்றார்.

நாம் தமிழர் கட்சி தொகுதி தலைவர் ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகி சீனிவாசன், சுமதி உட்பட பலர் கலந்து கொண்டனர்