Skip to main content

எஸ்.வி.சேகரை பாஜக ஒரு பொருட்டாக நினைப்பதில்லை; நாம் அவரை பெரிய ஆளாக உருவாக்க வேண்டாம்: காமராஜ் பேட்டி 

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

 

பாஜகவில் உழைத்து வரக்கூடிய தலைவர்கள் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். ஆனால் எஸ்.வி.சேகர் இதுபோல் தட்டு தடுமாறி பேசி வருவது பிஜேபிக்கு ஒரு கரும் புள்ளியாக இருக்கிறது" என்கிறார் அமைச்சர் காமராஜ்.

 

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சி சார்பில் கரோனா விழிப்புணர்வு மருத்துவ முகாம் நடைபெற்றது. அந்த முகாமை துவக்கி வைத்த தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ், அங்கு வந்திருந்த அனைவருக்கும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கரோனா பரிசோதனையையும் துவக்கி வைத்தார். அங்கு மருந்து மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் வழங்கினார்.

 

அதனை தொடர்ந்து கொட்டையூர் கிராமத்தின் சாலையோர வயல்களில் வேலை செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்களுக்கு முக கவசம் வழங்கி வேலை சேய்யும் போதும் முககவசம் அணிந்து கொண்டு வேலை செய்ய பழகுங்கள் என அறிவுரை வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து செய்தியாளர்களை அமைச்சர் காமராஜ், "கரோனா தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் கட்டுக்குள் வந்துகொண்டிருக்கிறது.  திருவாரூர் மாவட்டத்தில் 1,851 பேரில் 1,659 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்று விட்டனர். அதேபோல தமிழகத்தில் 78.55, சென்னையில் 86.45 சதவீதம் பேர் குணமடைந்து வீடு சென்றுள்ளனர்'' என்றவர்.   

 

எஸ்.வி.சேகரின் விவகாரத்திற்கு வந்தார், "எஸ்.வி.சேகர் அதிமுக சார்பில் வேட்பாளராக போட்டியிட்டு ஜெயலலிதா பிரச்சாரம் செய்து இரட்டையிலை சின்னத்தில் வெற்றிபெற வைக்கப்பட்டவர். அன்றைக்கும் கட்சியின் பெயர் அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் அவர் தற்போது கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. அதிமுகவினர் மட்டும் அல்ல தமிழக மக்கள் கூட மன்னிக்கமாட்டார்கள். 

 

அதிமுகவில் இருந்து பிஜேபிக்கு போய்விட்டதாக எஸ்வி சேகர் தெரிவித்தாலும், பிஜேபி கட்சியினர் எஸ்.வி. சேகர் பிஜேபியில் இருப்பதாக சொல்லவில்லை. பிஜேபியில் உழைத்து வரக்கூடிய தலைவர் எத்தனையோ பேர் இருக்கிறார்கள். எஸ்.வி.சேகர் இதுபோல் தட்டு தடுமாறி பேசி வருவது பிஜேபிக்கான  கரும்புள்ளி.

 

புதிய கல்வி கொள்கையில், மத்திய அமைச்சர் இது இந்தி திணிப்பு கிடையாது அந்தந்த மாநிலங்களிலே அவர்கள் விரும்புகிற அளவிள் நடவடிக்கை மேற்கொள்ளலாம் என சொல்லிவிட்டார். எஸ்.வி.சேகர் என்ன மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதியா? அல்லது பிரதமரா, பிஜேபி கட்சி எஸ்.வி.சேகரை ஒரு பொருட்டாகவே ஏற்று கொள்வதாக தெரியவில்லை. ஆக நாம் எஸ்.வி. சேகர் சொல்வதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவேண்டிய அவசியம் கிடையாது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.