Skip to main content

ஆர்.எஸ்.பாரதி கைதுக்கு இதுதான் காரணம்... ஈஸ்வரன்

Published on 23/05/2020 | Edited on 23/05/2020

 

rs bharathi er eswaran


கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டதற்குக் கண்டனம் தெரிவித்துள்ளார். 
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கரோனா தொற்று நோய் பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பாற்ற அனைத்துத் தரப்பும் பெரும் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நிவாரணப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டிருக்கிறார்கள். 
 


இந்த நேரத்தில் பழைய காரணங்களைச் சொல்லி தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியைக் கைது செய்திருப்பது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும். கண்டிக்கப்பட வேண்டிய செயல். ஆர்.எஸ்.பாரதி அரசாங்கத்தில் நடக்கின்ற குற்றம் குறைகளை எடுத்துச் சொல்லி தொடர்ந்து வழக்கு போட்டு வருவது தான் கைதுக்கான காரணம். 
 

ஜனநாயகத்தில் கேள்வி கேட்கின்ற எதிர்க்கட்சிக்குப் பதில் சொல்ல வேண்டியது ஆளுங்கட்சியினுடைய கடமை. இதைப்போன்ற பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது ஜனநாயகம் ஆகாது. கரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு, தான் செய்ததுதான் சரி என்ற நிலைப்பாட்டில் இருப்பது சரியாக இருக்காது. எதிர்க்கட்சிகளாக இருந்தாலும், சமூக ஆர்வலர்களாக  இருந்தாலும் ஆலோசனைகளைச் சொல்லும் போது அதை ஆக்கப்பூர்வமாக எடுத்துக்கொண்டு செயல்படுத்த முன்வர வேண்டும். 
 


இதுபோன்ற பழிவாங்கும் கைது நடவடிக்கைகள் தொடர்ந்தால் மக்கள் மத்தியில் அமைதியின்மை ஏற்படும். தி.மு.க.வின் சிறப்பான செயல்பாடுகள் தினசரி செய்திகளாக வருவதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் அதைத் திசை திருப்புவதற்கான முயற்சியாகவே இந்தக் கைதைப் பார்க்கின்றோம். தமிழக அரசு இதுபோன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்தாமல் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் முழு கவனத்தையும் செலுத்த வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Next Story

அமைச்சர் காரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
Election Air Force Test in Ministerial Car

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் பரப்புரையில் இறங்கிய நிலையில், மறுபுறம் தேர்தல் பறக்கும் படையினர் பல்வேறு இடங்களில் அதிரடி சோதனைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அரியலூர் அஸ்தினாபுரம் பகுதியில் வந்த அமைச்சர் சிவசங்கரின் காரை மடக்கி தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர். இதேபோல் நேற்றைய தினம் நீலகிரியில் திமுகவின் நாடாளுமன்ற வேட்பாளர் ஆ. ராசாவின் காரில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.