/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_77.jpg)
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் வாக்கு எண்ணிக்கை பல்வேறு பரபரப்புகளைக் கடந்து இன்று நடைபெற்று வருகிறது.தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர்ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஏறத்தாழ 58ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
இந்நிலையில், 13 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ். இளங்கோவன் 96,596 வாக்குகள் பெற்று தொடர்ச்சியாக முன்னிலையில் உள்ளார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 38,392 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளார். ஈவிகேஎஸ். இளங்கோவன் மற்றும் தென்னரசுவிற்கு இடையேயான வாக்குகள் வித்தியாசம் 58 ஆயிரத்து 204 வாக்குகளாக இருப்பதால் இளங்கோவன் வெற்றி உறுதியாகி உள்ளது.
காலையிலேயே அதிருப்தியில் அதிமுக வேட்பாளர் தென்னரசு வாக்கு எண்ணும் மையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.13 ஆவது சுற்று முடிவில் நாம் தமிழர் வேட்பாளர் மேனகா 7,984 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தில் உள்ளார். தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 949 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)