Skip to main content

அன்புமணி வெற்றிக்காக தருமபுரியில் முகாமிட்டுள்ள ராமதாஸ்

Published on 15/04/2019 | Edited on 15/04/2019

 

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடந்த மார்ச் மாதம் 20ஆம் தேதி  விழுப்புரம் தொகுதியில் பிரச்சாரம் தொடங்கினார். தொடர்ந்து 27 நாட்களாக தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். தருமபுரியில் போட்டியிடும் தனது மகன் அன்புமணி ராமதாஸ்க்காக கடந்த சில நாட்களாக தருமபுரி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களைச் சந்தித்து திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

 

Dharmapuri ramadoss


தொலைதூரங்களில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் ராமதாஸ், அங்குள்ள மக்களைச் சந்தித்து பேசுகிறார். ராமதாஸ் காரில் உள்ள லைட் போடப்பட்டு, அந்த ஒளியில் தான் இந்தக் கூட்டம் நடத்தப்படுகிறது. அப்போது ராமதாஸ், அங்கு கூடியிருக்கும் மக்களிடம் அவர்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்கிறார். பின்னர் அக்குறைகளை களையவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கிறார். அதை ஏற்றுக்கொண்டு மக்கள் ஆதரவளிப்பதாக நம்பிக்கை கொடுக்கின்றனர்.

 

ராமதாஸ் பங்கேற்கும் திண்ணைப் பரப்புரைக் கூட்டங்கள் மிகவும் வித்தியாசமான முறையில் அமைந்துள்ளன. அந்தக் கூட்டங்களில் அவர் அதிகம் பேசுவதில்லை. மக்கள் தான் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். குறிப்பாக பள்ளி மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் பேசுகின்றனர். தரமான கல்வி, தரமான மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும்; மதுக் கடைகள் மூடப்பட வேண்டும் என்பது தான் பெரும்பான்மையானவர்களின் கோரிக்கையாக உள்ளது. அவர்களின் கோரிக்கைகள் தான் பாமக கொள்கை என்று ராமதாஸ் கூறும் போது அங்குள்ள மக்கள் அனைவரும் கைத்தட்டி ஆதரவு தெரிவிக்கின்றனர்.

 

தருமபுரி தொகுதியில் வரகூர், இபிகொல்லஹள்ளி ஆகிய ஊராட்சிகளைச் சேர்ந்த பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களை ராமதாஸ் நேற்று சந்தித்து திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். அதன் தொடர்ச்சியாக இன்று பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களில் திண்ணைப் பிரச்சாரம் செய்யவுள்ளார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பேரறிஞர் அண்ணா - கலைஞர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Chief Minister honors Anna - kalaignar Memorial

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. இதனையொட்டி நேற்று தேர்தல் பிரச்சாரத்திற்கான கடைசி நாள் என்பதால் அனைத்துக் கட்சிகளும் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் இறங்கின. திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை பெசன்ட் நகரிலும், அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி சேலத்திலும், நாம் தமிழர் கட்சியின் சீமான் சென்னையிலும், விசிகவின் திருமாவளவன் சிதம்பரத்திலும், பாமகவின் அன்புமணி ராமதாஸ் தர்மபுரியிலும் இறுதிக்கட்ட பிரச்சாரம் செய்தனர்.

இதன் ஒரு பகுதியாக தென் சென்னையில் திமுக சார்பில் போட்டியிடும் தமிழச்சி தங்கப்பாண்டியன் மற்றும் மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் ஆகியோரை ஆதரித்து பெசன்ட் நகரில் நேற்று (17.04.2024) மாலை 4 மணியளவில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரச்சாரம் செய்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தல் பரப்புரை ஓய்ந்ததால் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.