Skip to main content

கட்டணக் கொள்ளையில் இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி: வேல்முருகன் குற்றச்சாட்டு!

Published on 10/12/2020 | Edited on 10/12/2020
  velmurugan

 

கட்டணக் கொள்ளையில் இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி ஈடுபட்டுள்ளது, எனவே இராஜ முத்தையா மருத்துவகல்லூரியை அரசுடைமையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் கூறியுள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்திருந்த இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரியை, கடலூர் மாவட்டத்தின் அரசு மருத்துவக்கல்லூரியாக தமிழக அரசு அறிவித்திருந்தது. இதனை கடந்த 2019-2020 ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற நிதி உரையில் துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார். அதன்படி, இராஜ முத்தையா மருத்துவக்கல்லூரி, தற்போது அரசு மருத்துவக்கல்லூரியாக செயல்பட்டு வருகிறது.

 

அதன் அடிப்படையில்,  அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள கட்டணமாக ரூ.13,600 மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக கடந்த கல்வியாண்டியில் ரூ.400,000 வசூலித்து, பகல் கொள்ளையில் ஈடுபட்டது கல்லூரி நிர்வாகம்.  தற்போது அதை விட கூடுதலாக ரூ.5,44,370 - யை வசூலிக்க கல்லூரி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இக்கட்டணம் என்பது, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துக்கல்லூரியில் வசூலிக்கப்படும் தொகையை விட கூடுதலானது.

 

இராஜ முத்தையா மருத்துவகல்லூரி, அரசு மருத்துவகல்லூரியாக அறிவிக்கப்பட்டுள்ளதால், கட்டணம் 13,600 மட்டுமே கல்லூரி நிர்வாகம் வசூலிக்கும் என மாணவர்களும், பெற்றோர்களும் எதிர்பார்த்திருந்து காத்திருந்தனர். ஆனால், நடப்பாண்டின் கட்டணமாக ரூ.5,44,370, சென்ற ஆண்டு நிலுவைத்தொகை ரூ.1,47,370 மற்றும் விடுதி கட்டணம் ரூ.80,000 என மொத்தம் ரூ.7,80,000-யை உடனடியாக செலுத்தக்கோரி கல்லூரி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

கல்வி கற்க வரும் மாணவர்களை, பணம் கொழிக்கும் மரமாக கருதி வரும் கல்லூரி நிர்வாகத்தின் நடவடிக்கையானது  வன்மையாக கண்டிக்கதக்கது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக வேலையின்றி வீட்டில் முடங்கி கிடந்தவர்கள், எப்படி ரூ.7,80,000 கட்டணத்தை கட்டணத்தை கட்ட முடியும் என்று தமிழக அரசு சிந்தித்து பார்க்காதது மிகவும் வேதனையளிக்கிறது.

 

எனவே இராஜ முத்தையா மருத்துவகல்லூரியை அரசுடைமையாக்கி கொண்டதற்கான அரசாணையை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மேலும், கல்லூரி நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையும் திரும்ப பெற வேண்டும் எனவும் . இவ்விவகாரத்தில் தமிழக அரசும், கல்லூரி நிர்வாகமும் அலட்சியம் காட்டும் பட்சத்தில், மாணவர்களையும், பெற்றோர்களையும் , மக்களையும் அணி  திரட்டி தமிழக வாழ்வுரிமைக் கட்சி போராட்டத்தில் ஈடுபடும் என தெரிவித்துக்கொள்கிறேன் என கூறியுள்ளார். 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.