Skip to main content

"நாங்கள் உழைக்கிறோம்; நல்ல காலம் பிறக்கும்!" - விவசாயிகள் கூட்டத்தில் 'மாஸ்' காட்டிய ராகுல்!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

Rahul Gandhi speech at karur


ஈரோடு, கோயம்புத்தூர் மற்றும் கரூர் ஆகிய பகுதிகளில் 3 நாள் சுற்றுப் பயணமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார் ராகுல் காந்தி. 


கடந்த சனிக்கிழமை கோயம்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், ஞாயிற்றுக் கிழமை ஈரோடு உள்ளிட்ட பகுதிகளிலும் பிரச்சாரம் செய்தார். இந்நிலையில், திங்கட்கிழமையான இன்று (25.01.2020) காலை சரியாக 11.30 மணிக்கு கரூர் நுழைந்தவர், சின்னதாராபுரம் பகுதியில் அளிக்கபட்ட பிரம்மாண்ட வரவேற்பு பெற்றுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு கரூர் நகரப் பகுதியில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

 

அதன்பின், விவசாயிகளோடு கலந்துரையாடும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சுமார் ஒரு மணிநேரம் உரையாற்றிய ராகுல் காந்தி, "மத்திய பா.ஜ.க. அரசு தொடர்ந்து விவசாயிகளுக்கு கொடுமை இழைத்துவருகிறது. விவசாயத்தையும் விவசாயிகளையும் அழிப்பதற்கான எல்லா முயற்சிகளையும் இந்த அரசு தொடர்ந்து செய்து வருகிறது” எனக் குற்றம் சாட்டினார். 

 

விவசாயிகள் பலர், தொடர்ந்து விவசாயத் தொழிலில் தாங்கள் சந்தித்து வரக்கூடிய மோசமான நிலையை ராகுல் காந்தியிடம் எடுத்துக் கூறினார்கள். அனைத்தையும் கேட்டுக்கொண்ட அவர், “மோடியின் ஆட்சிக் காலத்தில் விவசாயமும், விவசாயிகளின் வாழ்வும் மிகக் கொடூரமாக மாறிக்கொண்டிருக்கிறது. டெல்லியில் ஆட்சி செய்து கொண்டிருக்கக் கூடிய பா.ஜ.க., விவசாயத்தின் அடிப்படையையும் விவசாயத்தையும்  தகர்க்கக்கூடிய கொள்கை முடிவை எடுத்துக் கொண்டிருக்கிறது.

 

நான், இன்று உங்களைச் சந்திப்பதின் நோக்கம் விவசாயத்திலும் விவசாயிகளுக்கும் உள்ள பிரச்சனையை, நான் முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். மேலும் டெல்லியில் தற்போது நடந்து கொண்டிருக்கக் கூடிய விவசாயிகளின் போராட்டமும், அதில் உள்ள கஷ்டத்தையும் உங்களோடு நான் பகிர்ந்து கொள்ளப் போகிறேன்” என்றார்.  

 

பெண் விவசாயி வெண்ணிலா, “எவ்வளவு உழைப்பைப் போட்டாலும் இறுதியில் எங்களுக்குக் கிடைக்கக்கூடிய வருமானம் என்பது மிகவும் சொற்பமாகவே இருக்கிறது” என்றார். அதற்குப் பதில்கூறிய ராகுல்காந்தி, “விவசாயிகளுக்கு முழுமையான செய்திகள் வந்துசேர்வது இல்லை. ஏனென்றால் மத்தியில் இருக்கக்கூடிய அரசு, விவசாயிகளிடத்தில் உரிய செய்திகளைக் கொண்டுவந்து சேர்க்கத் தயாராக இல்லை. அதை மறைக்க முயல்கிறார்கள். விவசாயிகள் ஆகிய நீங்கள் தமிழிலேயே என்னோடு பேசலாம்; ஆங்கிலம் தேவை இல்லை” என்று கூறினார்.

 

வேளாண் குறித்துப் பேசிய விவசாயியைப் பாராட்டிய ராகுல், மத்திய வேளாண் மந்திரியை விட நீங்கள் சிறந்த மந்திரியாக இருப்பீர்கள் என்று பாராட்டினார். மேலும் அவர், “மத்திய அரசு இயற்றிய அந்த வேளாண் சட்டத்தில், மண்டியை ஒழிக்கவேண்டும் என்பதுதான் முதல் சட்டம். இரண்டாவது கண்டிப்பாக ஒப்பந்தத்தைப் போட்டுக்கொண்டு நீங்கள் என்ன விலைக்கு ஒப்பந்தம் போட்டு இருக்கிறீர்களோ அந்த ஒப்பந்தத்தின்படி அந்த நிறுவனம் பணம் செலுத்தவில்லை என்றால் உங்களால் நீதிமன்றம் செல்ல முடியாது. மூன்றாவது சட்டம், பணம் இருப்பவர்கள் மொத்த பொருளையும் வாங்கி பதுக்கி வைத்துக் கொள்ளலாம். 

 

எந்த நிறுவனம் வேண்டுமானாலும் எந்த உற்பத்திப் பொருளுக்கு வேண்டுமானாலும் ஒப்பந்தம் போட்டுக் கொள்ள முடியும். அந்த நிறுவனம் என்ன சொல்கிறதோ அதை மட்டுமே கேட்கவேண்டும். இன்று, இந்தச் சட்டத்தால் பல கூலித் தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் பல தொழில்கள்  நசுக்கப்படும்” என்றார். 

 

Rahul Gandhi speech at karur


பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்து ராகுல்காந்தி கேட்டுக்கொண்டிருந்தபோது. கூட்டத்தில் எழுந்து நின்ற விவசாயி ஒருவர், அவர் கையில் வைத்திருந்த பழைய ஐநூறு ரூபாய் நோட்டை ராகுல் காந்தியிடம் காட்டி, இந்த நோட்டு செல்லாது என்று சொல்லிவிட்டனர். தற்போது இந்த நோட்டை மாற்றுவதற்கு வங்கிக்கு எடுத்துச் சென்றால், ‘இது உதவாது பழைய நோட்டு குப்பையில்தான் போடவேண்டும்’ எனச் சொல்கிறார்கள் என்றார். அதற்கு ராகுல் காந்தி, “இந்தச் சகோதரர் வைத்திருக்கும் இந்த 500 ரூபாயை மத்திய அரசு திருடிக் கொண்டது” என்றார்.


வெள்ளைக்காரர்கள் 1885ல் கொண்டுவந்த சட்டத்தின் மூலம் நிலத்தைக் கையகப்படுத்துகிறார்கள். அதன் மூலம் கேஸ் குழாய்ப் பதிப்பது, எரிவாயு குழாய் பதிப்பது, உயர் மின்னழுத்தக் கோபுரங்களை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களைக் கொண்டு மத்திய அரசு தொடர்ந்து விவசாயிகளை வஞ்சித்து வருகிறது. தமிழகத்தில் உள்ள ஏழு மாவட்டங்களில் தொடர்ந்து இதே நிலை நீடிக்கிறது என்று விவசாயி குற்றம் சாட்டியுள்ளார்.
 

cnc

 

2013ல் கொண்டுவந்த நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை இந்த மத்திய அரசு ஒருபோதும் பயன்படுத்தியதில்லை. கடந்த முறை காங்கிரஸ் ஒரு சிறந்த திட்டத்தை தேர்தல் பிரச்சாரத்தில் அறிவித்திருந்தது. 100 நாள் வேலைத்திட்டம் போலவே காங்கிரஸ் ஒரு புதிய திட்டத்தை இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்ற வகையில் கொண்டுவந்தது. அதுவும் வறுமையில் இருக்கக் கூடியவர்களில் கண்டறிந்து, நேரடியாக பணத்தை அவர்களுடைய வங்கிக் கணக்கில் போடுவதன் மூலம் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தின் மிக முக்கியமான நோக்கமே, மாதம் ஆயிரம் ரூபாய் என்று வருடத்துக்கு 12 ஆயிரம் ரூபாய் அவருடைய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். அவர்களுக்கான வேலைவாய்ப்பு 100 நாள் வேலைவாய்ப்பை போலவே அவர்களுக்கும் அந்த வேலை வாய்ப்பு வழங்கப்படும். இந்தத் திட்டத்தை மிகத் தெளிவாக நாங்கள் போட்டிருந்தோம் என்று ராகுல் கூறினார். 

 

விவசாயிகளுக்கான இலவச மின்சாரத்தை ரத்து செய்ய தொடர்ந்து அரசு முயற்சித்து வருகிறது. அதற்கான நடவடிக்கையை காங்கிரஸ் தொடர வேண்டும். நீங்கள் தொடர்ந்து காங்கிரசோடு இணைந்திருங்கள். நல்ல காலம் பிறக்கும் நீங்களும் உழையுங்கள் நாங்களும் உழைக்கிறோம் என்று தன்னுடைய பேச்சை ராகுல்காந்தி முடித்துக் கொண்டார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“காவிரி நீர் வேணுமா... ஈரோட்டில் கூட காவிரி ஓடுது பாருங்க...” - ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பதிலால் எழுந்த விமர்சனம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'Oh Cauvery water...? Even in Erode, see the Cauvery running'- Criticism caused by EVKS Elangovan's response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

ஈரோட்டில் செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் பேசுகையில், ''ஸ்டாலின் தலைமையில் அமைந்திருக்கின்ற கூட்டணி என்பது சாதி மதங்களைக் கடந்த கூட்டணி. மத வெறித்தனத்திற்கு அப்பாற்பட்ட கூட்டணி. மக்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டும், எல்லா மதத்தைச் சார்ந்தவர்களும் ஒன்றாக இருக்க வேண்டும் என்ற ஒரு நல்ல கொள்கைக்காக தான் இந்த கூட்டணி இருக்கிறது.

மற்ற கூட்டணிகளை எடுத்துக் கொண்டால் குறிப்பாக பாஜக கூட்டணியில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி, அதிமுக தலைமையில் இருக்கின்ற கூட்டணியாக இருந்தாலும் சரி அவர்கள் கொள்கைக்காக ஒன்று சேரவில்லை. சில கோடி ரூபாய் பேரம் பேசி பெறுவதற்காக அந்த கூட்டணியில் இருக்கிறார்கள்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு சொட்டு தண்ணீர் கூட தரமாட்டேன் என்று சொல்கின்ற காங்கிரசுக்கு பத்து சீட்டுகள் கொடுத்தது நியாயமா என சீமான் கேள்வி எழுப்பி உள்ளாரே' எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த இளங்கோவன், ''இல்லை காங்கிரசினுடைய கொள்கையே ஒரு சொட்டு நீர் கூட கொடுக்கக் கூடாது என்பதுதான். மக்கள் குடிப்பதால் கெட்டுப் போயிருக்கிறார்கள். மக்களுடைய சிந்தை மாறி போயிருக்கிறது. அதனால் காங்கிரசை பொறுத்தவரை எங்களுடைய மகாத்மா காந்தியினுடைய கொள்கையே ஒரு சொட்டு மது தண்ணீர் கூட மக்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதுதான்'' என்றார்.

உடனே செய்தியாளர் 'காவிரி தண்ணீர்' என சொல்ல, ''காவிரி தண்ணீரா... காவிரி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. ஈரோட்டில் இருக்கின்ற காவிரி ஆற்றை பார்த்தீர்கள் என்றால் கூட, இன்னைக்கு பாருங்கள் இருக்கின்ற பாறை எல்லாம் மறைக்கும் அளவிற்கு தண்ணீர் போய்க் கொண்டிருக்கிறது. வேண்டிய அளவிற்கு தண்ணீர் தர கர்நாடகா தயாராக இருந்தாலும் அவர்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்ற காரணத்தால் சில தடங்கல்கள் இருக்கிறது'' என்றார்.

காவிரி நீர் குறித்த கேள்விக்கு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கொடுத்த பதிலுக்கு சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகிறது.

Next Story

“கோட்சே பேரன்களின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும்” - காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் பிரச்சாரம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள கிருஷ்ணன் கோயிலில் நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் தென்காசி பாராளுமன்ற திமுக வேட்பாளர் ராணி ஸ்ரீகுமார் மற்றும் விருதுநகர் பாராளுமன்ற காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை ஆதரித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார உரையாற்றினார்.

இந்தக் கூட்டத்தில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினரும் விருதுநகர் தொகுதியின் காங்கிரஸ் வேட்பாளருமான மாணிக்கம் தாகூர் பேசியபோது, “என்னுடைய பார்வையில், தளபதி மு.க. ஸ்டாலின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து உயர்ந்த நிலைக்கு சென்றபடியே இருக்கிறார். நாளை என்னவாக உயர்வார் என்பதற்குக் காலம் பதில் சொல்லும்.

 Politics of Godse's grandsons must be defeated said Congress candidate Manickam Tagore

ஆனால் அவர் இந்தியாவினுடைய பிரதமராக ராகுல் காந்தி வருவதற்கு முழு ஆதரவு தருவார் என்பது மட்டும் நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஏப்ரல் 19 ஆம் தேதி நடக்கவிருக்கின்ற தேர்தல், இரு கொள்கைகளுக்கான தேர்தல். ஒரு பக்கம் கோட்சேவின் பேரன்களும் அவருடைய கொள்கைகளும். 20 கோடி சிறுபான்மையின மக்களை அடிமைகளாக சிக்க வைக்க வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்.ஸின் கொள்கை. பெரும் பணக்காரர்களாக இருக்கின்ற அதானிக்கு இந்தியாவின் செல்வங்களை அள்ளிக் கொடுக்கத் துடிக்கும் மோடி, அமித்ஷாவின் கொள்கை.

இன்னொரு பக்கம், அனைவருக்கும் சமமான இந்தியாவை உருவாக்க வேண்டுமென்று மகாத்மா காந்தி மற்றும் தந்தை பெரியார் பேரன்களின் இந்தக் கூட்டணி. இந்த இந்தியா கூட்டணி அனைவருக்கும் அனைத்தும் என்ற கொள்கையைக் கொண்ட கூட்டணி. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால், உங்களுடைய ஆதரவு முழுமையாகத் தேவை. இந்தக் கூட்டணி வெல்ல வேண்டுமென்றால் கோட்சே தோற்கடிக்கப்பட வேண்டும். கோட்சேவின் கொள்கை தோற்கடிக்கப்பட வேண்டும். காந்தியா? கோட்சேவா? என்ற நிலையிலே இன்று நிற்கிறோம். மோடியா? ராகுல் காந்தியா? என்ற நிலையிலே நிற்கிறோம். இதிலே தளபதியார் ராகுல் காந்தியோடு நிற்கிறார். அவருடைய ஆசியோடு கை சின்னத்துக்கு வாக்கு தாருங்கள் என்று இரு கரம் கூப்பி வேண்டி விடைபெறுகிறேன்.”  எனப் பேசினார்.