Skip to main content

தேர்தல் குறித்த கேள்வி: “நன்றி, வணக்கம்” என்று நழுவிய நயினார் நாகேந்திரன்

Published on 22/03/2023 | Edited on 22/03/2023

 

Question of election; "Thank you, hello," said Nayanar Nagendran

 

திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து 30 லட்சம் ரூபாய்க்கு திருமண மண்டபம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இந்நிகழ்வில் பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் கலந்து கொண்டார். 

 

விழா முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழ்நாடு பட்ஜெட்டில் கிள்ளிகுளத்தில் மட்டும் 15 கோடி மதிப்பீட்டில் திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார்கள். திமுக கொண்டு வந்த திட்டங்கள் நல்ல திட்டங்கள் தான். ஆனால் எண்ணிக்கை குறைவாக உள்ளது. தென் மாவட்டங்களை பொறுத்தவரை குறிப்பாக குமரி மாவட்டம் என்பது முழுவதும் நஞ்சையாகவும் தென்னையாகவும் இருக்கும் மாவட்டம். நாஞ்சில் நாடு எனச் சொல்வார்கள். அதேபோல் திருநெல்வேலி, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களிலும் நஞ்சை அதிக அளவில் உள்ளது. இப்பகுதிகளில் நெல் ஆராய்ச்சி மையம் ஏற்கனவே இருந்து, இப்பொழுது இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இதைக் குறித்தும் சட்டமன்றத்தில் நிச்சயமாக பேசுவோம். 

 

திருநெல்வேலி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று நீண்ட நாட்களுக்கு முன்பே நான் சொல்லியுள்ளேன். முதலமைச்சரை இதற்கு முன் சந்திக்கும் போது, வட மாவட்டங்களில் நல்ல மழைப்பொழிவு உள்ளது. தென் மாவட்டங்களில் வறட்சி காணப்படுகிறது எனச் சொன்னேன். இந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசும் போது இதுகுறித்து கண்டிப்பாகப் பேசுவேன். தாமிரபரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்படும் என ஏற்கனவே சொல்லி இருந்தார்கள். மற்ற ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று சொன்னார்கள். ஆனால், அது இன்னும் செயல்படுத்தப்படவில்லை. 

 

அதிமுக தமிழ்நாட்டில் மிகப்பெரிய கட்சி. அதனுடன் தான் கூட்டணியில் உள்ளோம். இந்திய அளவில் பெரிய கட்சி, உலகளவில் அதிக எம்.எல்.ஏக்கள், அதிக எம்.பி.க்கள் கொண்ட கட்சி பாஜக. இரு கட்சிகளுக்குள்ளும் தலைமையில் எந்த மாற்றமும் இல்லை. கீழ்மட்டத்தில் உள்ள சிலர் இம்மாதிரியான செயல்களில் ஈடுபடுகின்றனர். பெரிய கட்சி என்கிற போது இம்மாதிரியான சிக்கல்கள் இருக்கும். அது கூட்டணியை எந்த விதத்திலும் பாதிக்காது. தேர்தலில் வேட்பாளர்கள் அறிவித்த பின் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வேலை பார்க்கும் போது எவ்விதமான கருத்தும் மனமாட்சிமைகளும் நிச்சயம் இருக்காது” என்றார்.

 

தொடர்ந்து செய்தியாளர்கள், வரும் தேர்தலில் வேட்பாளராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதா எனக் கேட்டபொழுது நயினார் நாகேந்திரன் நன்றி வணக்கம் எனக் கூறி நழுவினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும்” - இ.பி.எஸ்.

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
alliance Party Candidates Need To Work More EPS

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் தே.மு.தி.க. சார்பில் விருதுநகரில் போட்டியிடும் விஜய பிரபாகரனை ஆதரித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் இன்று (28.03.2024) பிரச்சார்ம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தமிழக மக்களுக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட கொடை. ஒரு மனிதன் பிறக்கின்றான், வாழ்கின்றான், இறக்கிறான். இந்த இடைப்பட்ட காலத்தில் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறானோ அந்த தலைவர்கள் தான் மக்கள் மனதில் வாழ்வார்கள். அவ்வாறு எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

நம் தலைவர்களுக்கு அரசியல் வாரிசுகள் கிடையாது. எனவே தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தான் பிள்ளைகள். தங்கள் வாழ்நாள் முழுவதும் தம் பிள்ளைகள் வாழ்நாள் முழுவதும் செழிப்பாகவும், வளமாகவும் வாழ வேண்டும் என கருதி இரவு பகல் பாராமல் உழைத்து மறைந்த தலைவர்கள் உருவாக்கிய இயக்கம் அ.தி.மு.க. இது மக்களுக்காகவே துவக்கப்பட்ட இயக்கம். யார் யாரோ இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்கள். யார் எல்லாம் இந்த இயக்கத்தை அழிக்க முற்பட்டார்களோ, அவர்கள் எல்லாம் அடையாளம் காணாமல் போய்விட்டார்கள்.

இந்த தேர்தல் முக்கியமான தேர்தல். நாடாளுமன்ற தேர்தலை பொறுத்த வரையில் கூட்டணி கட்சிகள் எல்லாம் ஒன்றாக இணைந்து இரவு பகல் பாராமல் வாக்கு சேகரித்து லட்சக்கானகான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளரை வெற்றி பெற செய்ய வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு அதிகமாக உழைக்க வேண்டும். அ.தி.மு.க. என்று சொன்னாலே அனைவரையும் மதிக்க கூடிய கட்சி. அதிலும் குறிப்பாக கூட்டணியை நேசிக்க கூடிய கட்சி. அ.தி.மு.க. வேட்பாளரை விட கூட்டணி கட்சி வேட்பாளருக்கு அதிக நேரம் செலவழித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும்” எனத் தெரிவித்தார். 

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.