Skip to main content

நாராயணசாமியின் ஆட்சியை விரும்பவில்லையா திமுக?

Published on 22/02/2021 | Edited on 22/02/2021

 

ddd

 

புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டிருக்கிறது! பெரும்பாண்மையை நிரூபிப்பதற்காக இன்று (22.02.2021) கூட்டப்பட்ட புதுவை சட்டப்பேரவையில் உரையாற்றிய முதல்வர் நாராயணசாமி, மத்திய பாஜக மீது கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தினார். இதற்கு  எதிர்க்கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்தன. நம்பிக்கை வாக்கெடுப்பினை எதிர்கொள்ளாமல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுடன் வெளிநடப்பு செய்தார் நாராயணசாமி. இதனால், பெரும்பான்மையை நிரூபிக்காததால் ஆட்சி கவிழ்ந்தது. நாராயணசாமிக்கு எதிராக காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததால்தான் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டார் நாராயணசாமி. 

 

இந்த நிலையில், நேற்று மாலையில் திடீரென திமுக எம்.எல்.ஏ.வெங்கடேசன் தனது பதவியை ராஜினாமா செய்ததுதான் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. திமுக எம்.எல்.ஏ. எதற்கு ராஜினாமா செய்ய வேண்டும்? அவரது ராஜினாமா முடிவு  திமுக தலைமைக்குத் தெரியுமா? என்றெல்லாம் கேள்விகள் எதிரொலித்த நிலையில், "தலைமையிடம் சொல்லிவிட்டுத்தான் ராஜினாமா செய்துள்ளேன்" என்றார் வெங்கடேசன். அவரின் இந்த பதில், காங்கிரசை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. 

 

இந்த நிலையில், திமுக எம்.எல்.ஏ.வின் இந்த ராஜினாமா விவகாரத்தால், நாராயணசாமியை திமுக கைவிட்டுவிட்டதா? என்கிற கேள்வி புதுவை அரசியலில் உற்றுநோக்கப்படுகிறது. குறிப்பாக, "திமுக தலைமையின் அனுமதியோடுதான் வெங்கடேசன் ராஜினாமா செய்தார் என்பது உண்மையெனில், நாராயணசாமியின் ஆட்சியை  திமுகவும் விரும்பவில்லை என எடுத்துக்கொள்ளலாம். திமுக தலைமையிடம் தெரிவிக்காமல் வெங்கடேசன் ராஜினாமா செய்திருந்தால், தங்கள் எம்.எல்.ஏ.க்களைத் தங்கள் பிடியில் வைத்துக்கொள்ள திமுக நினைக்கவில்லை என்று அர்த்தம். 

 

அதேசமயம், தலைமைக்குத் தெரிவிக்காமலே அவர் ராஜினாமா செய்திருப்பதுதான் உண்மையெனில், வெங்கடேசனை இந்நேரம் கட்சியிலிருந்து  திமுக தலைமை நீக்கியிருக்க வேண்டும். ஆனால், அது தற்போது வரை நடக்கவில்லை. அதனால், நாராயணசாமியின் அரசை விரும்பாமல் அவருக்கு மேலும் நெருக்கடி கொடுக்கும்விதமாகவே வெங்கடேசனின் ராஜினாமாவை திமுக எடுத்துக்கொண்டதாக நினைக்க முடிகிறது. மொத்தத்தில் நாராயணசாமியை திமுக கைவிட்டுவிட்டது "என்று ஆதங்கப்படுகிறார்கள் புதுவை காங்கிரஸார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.

Next Story

''40 தொகுதிகளிலும் வெற்றி பிரகாசமாக உள்ளது''- அமைச்சர் துரைமுருகன் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

முன்னதாக அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வேலூர் மாவட்டம் காட்பாடி, காந்தி நகர் தனியார் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள பூத் எண் 155 ல் திமுக பொதுச்செயலாளர், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அவரது மகனும், வேலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் ஆகியோர் குடும்பத்தோடு வந்து வாக்களித்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் அளித்த பேட்டியில், 'காலையிலிருந்து எட்டுத்திக்கும் என்னோடு தொடர்பு கொண்டு பேசிக் கொண்டிருக்கிறார்கள். முதலமைச்சரும் பேசிக்கொண்டிருக்கிறார்.

அரக்கோணம் நாடாளுமன்றத்தில் எப்படி இந்திய கூட்டணிக்கு பிரகாசமாக தெரிகிறதோ அதேபோல் 40 தொகுதிகளிலும் எங்களுக்கு பிரகாசமாக இருப்பதாக கூறியிருக்கிறார்கள். இந்தியா கூட்டணி அமைக்கப்பட்ட பிறகு முதல் கட்ட தேர்தல் தமிழகத்தில் நடைபெறுகிறது. முதல் வெற்றியும் இங்குதான் கிடைக்கும். நிச்சயமாக மத்தியில் ஒரு மாற்றம் இருக்கும் என்பது என்னுடைய கணிப்பு.

மேகதாது கட்டக் கூடாது என்பது கர்நாடகாவின் தயவு அல்ல அது தமிழகத்தின் உரிமை. 25 ஆண்டாக இந்தத் துறையை கவனிக்கிறேன் எனக்கு சாதாரணமான செய்தி சிவக்குமார் புதிதாக வந்ததால் அது அவருக்கு புதிதாக தெரியும். இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கர்நாடகாவிற்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அதே அளவுக்கு தமிழகத்திற்கும் உரிமை உள்ளது. கர்நாடக மக்களை தேர்தல் நேரத்தில் உற்சாகப்படுத்துவதற்காக சிவகுமார் இப்படி பேசுகிறார்.

இன்னமும் மலை கிராமங்களுக்கு ஓட்டு பெட்டிகளை கழுதைகள் மீது கொண்டு செல்வது வருத்தப்பட வேண்டிய செய்திதான். காரணம் இந்தியா ஒரு பெரிய நாடு பல்வேறு மூலை முடுக்குகள் உள்ளது. தேர்தல் ஆணையம் எப்போதும் சரியாக இருக்காது. ஆளும் கட்சிக்கு சாதகமாக தான் இருக்கும். நதிநீர் இணைப்புக்கு  தமிழகம் எப்போதும் தயார். அதை நாங்கள் வரவேற்கிறோம் அதனால் தமிழகத்திற்கும் பயன் உள்ளது. வாக்குச்சீட்டு முறை வேண்டாம். இயந்திர வாக்குப்பதிவு முறையே தேவை. இன்றைய காலகட்டத்தில் இயந்திர வாக்குப்பதிவு முறையே சிறந்ததாக உள்ளது. வாக்குச்சீட்டு முறை தேவையில்லை'' என கூறினார்.