Skip to main content

செவ்வாய்க்கிழமை முதல் அனைத்துக் கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும்: நாராயணசாமி அறிவிப்பு

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

puducherry

 

புதுச்சேரி மாநில தேசிய பேரிடர் ஆணைய கூட்டம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்றது.

 

கூட்டத்திற்குப் பின் முதல்வர் நாராயணசாமி வெளியிட்ட வீடியோ பதிவில், "வரும் செவ்வாய்கிழமை முதல் அனைத்துக் கடைகளும் 2 மணி வரை மட்டுமே திறந்திருக்கும். பெட்ரோல் பங்குகளும் 2 மணி வரை மட்டுமே திறக்கப்படும். கடற்கரை சாலை வரும் 10 நாட்களுக்கு மூடப்படும். மதுபானக் கடைகள் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.  

 

தமிழகத்தில் ஊரடங்கிற்குப் பின்பு புதுச்சேரிக்குள் அண்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவு வருவது தெரிகின்றது. அதனால் அவர்கள் தங்களைச் சோதித்துப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதனால் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறிய தினந்தோறும் அதிகளவு இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, ஜிப்மர் மருத்துவமனையில் சோதனை செய்யப்படுகின்றது.

 

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் covid care centre துவங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள் அதிகளவு தேவைப்படுவதால் அவர்களின் இடங்கள் நிரப்படவேண்டும். மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை. முகக் கவசம் அணியாமல் வெளியே நடமாடினால் 100 ரூபாயிலிருந்து 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.  

 

அனைத்துக் கடைகளும் காலை 6 மணிமுதல் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்கும். பெட்ரோல்  பங்குகளும் 2 மணிவரை மட்டுமே திறக்கப்படும். கடற்கரைச் சாலையில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதால் 10 நாட்களுக்கு மூடப்படும். மதுக்கடைகளும் 2 மணிவரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்படும்.

 

தொழிற்சாலைகள் இயங்க 3 மணிவரை அனுமதி அளிக்கப்படும். வேலை செய்வோர் வீடு செல்லநேரம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயப் பணிகள், அத்தியாவசியப் பொருட்கள் செல்லும் வாகனங்கள் மத்திய அரசின் உத்தரவின் படி செயல்படும். பெரிய காய்கறி மார்க்கெட் புதிய பேருந்து நிலையத்தில் செயல்படும். 
 

http://onelink.to/nknapp


கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய வீடு வீடாகச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்யப்படும்" என அவர் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.