Skip to main content

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை! -மு.தமிமுன்அன்சாரி வரவேற்பு!

Published on 03/09/2020 | Edited on 03/09/2020
tamimmun ansari

 

 

பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகள் தடை செய்திருப்பதை வரவேற்கிறோம் என கூறியுள்ளார் நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான மு.தமிமுன் அன்சாரி.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நமது நாட்டின் வளரும் தலைமுறையினரின் எதிர்கால நலன் கருதி பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டு செயலிகளை தடை செய்ய வேண்டும் என கடந்த 01.07.2020 அன்று மஜக சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தோம். நேற்று அவற்றை மத்திய் அரசு தடை செய்திருப்பதை வரவேற்கிறோம்.

 

பொழுதுபோக்கு என்ற பெயரில் குழந்தைகளையும், சிறுவர், சிறுமிகளையும் உளவியல் ரீதியாக அடிமைப்படுத்தி, அவர்களை தவறான திசையில் இந்த செயலிகள் வழிநடத்தின. இப்போது இதற்கு முற்றுப்புள்ளி வைத்திருப்பதுடன், இது போன்ற அம்சங்களுடன் வேறு புதிய செயலிகளை வரவிடாமல் தடுப்பதும் மத்திய அரசின் கடமையாகும்.

 

இதற்கு மாற்றாக கைப்பந்து, கால்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து, கபடி போன்ற கள விளையாட்டுகளையும், நீச்சல் அடித்தல், சைக்கிள் ஓட்டுதல், கேரம் பலகை, விளையாடுதல் போன்ற இதர விளையாட்டுகளையும் தங்கள் பிள்ளைகளுக்கு ஊக்குவிக்க பெற்றோர்கள் முயல வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சந்திரமுகி போல சூகுனா கதாபாத்திரமாக மாறிய இளைஞர்; ராணிப்பேட்டையில் பரபரப்பு

Published on 04/10/2023 | Edited on 04/10/2023

 

 A youth who became a Sukuna character like Chandramukhi; Bustle in Ranipet

 

செல்போன் கேம்களில் மூழ்கி, அதனால் மனம் சிதைந்த கல்லூரி மாணவன் ஒருவன் வெறி பிடித்ததை போல் நடந்து கொண்ட சம்பவம் ராணிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்துள்ளது காலிவாரி கண்டிகை. இப்பகுதியைச் சேர்ந்த 18 வயது கல்லூரி மாணவர் ஒருவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு பொறியியல் படித்து வந்துள்ளார். இந்நிலையில் வீட்டிற்கு வந்த அந்த கல்லூரி மாணவர் தனி அறையில் புகுந்துகொண்டு செல்போனில் கேம் விளையாடுவதையும் அனிமேஷன் தொடர்களை பார்ப்பதையும்  வாடிக்கையாக கொண்டிருந்துள்ளார்.

 

நேற்று வரை நன்றாக இருந்த மாணவர் திடீரென செல்போன் கேமை அதிகமாக விளையாடியதால் வெறிபிடித்த நபர் போல் மாறியுள்ளார். வீட்டில் உள்ளவர்களையும் அவதூறாக பேசும் அளவிற்கு சென்றுள்ளார். 'ஏன் இப்படி பேசுகிறாய்' என கேட்க வருபவர்களை தாக்கவும் முயன்றுள்ளார். இதனால் மிரண்டுபோன இளைஞரின் தாய் அவரது கைகளை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் கட்டி அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார். மருத்துவமனையில் இருப்பவர்களையும் மிரட்டும் தொனியில் பேசியதால் உடனடியாக மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் மனநல மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதன்படி அவர் கை, கால்கள் கட்டப்பட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். மேலும் இது தொடர்பான விசாரணையில் அந்த மாணவர் ஜப்பான் அனிமேஷன் தொடர்களில் வரும் சூகுனா என்ற கதாபாத்திரம் மீது கொண்ட ஈர்ப்பால் அந்த கதாபாத்திரம் போலவே மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

 

 

 

Next Story

இந்தியாவில் மீண்டும் பப்ஜி!!

Published on 19/05/2023 | Edited on 19/05/2023

 

Pubg is back in India

 

பிரபல மொபைல் கேம் 'பப்ஜி' இந்தியாவில் மீண்டும் வரவிருக்கிறது. 

 

தென்கொரிய நாட்டின் பப்ஜி மொபைல் விளையாட்டு செயலி உலக அளவில் பிரபலமானது. இச்செயலியை இந்தியாவில் வெளியிடும் மற்றும் நிர்வகிக்கும் உரிமையை சீன நிறுவனமான டென்சென்ட் நிறுவனத்திற்கு பப்ஜி நிறுவனம் வழங்கியிருந்தது. 

 

இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையின் நலன் கருதி இந்திய அரசு பப்ஜி உள்ளிட்ட 118 சீன செயலிகளுக்கு கடந்த 2022ம் ஆண்டு தடை விதித்தது. குறிப்பாக பப்ஜி விளையாட்டில் ஈடுபட்ட பலர் மன அழுத்தத்துக்கு ஆளாகி தற்கொலை செய்ததால் இந்த விளையாட்டு கடந்த ஆண்டு இந்திய அரசால் இந்தியாவில் தடை செய்யப்பட்டது. 

 

இந்நிலையில், இந்தியாவில் உள்ள சட்டங்களுக்கு ஏற்றவாறு பப்ஜி விளையாட்டை மாற்றி அமைத்து மீண்டும் இந்தியாவில் பப்ஜி விளையாட்டு வருகிறது. இது குறித்து மத்திய தொழில்முனைவோர், திறன் மேம்பாடு, மின்னணுவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், தற்போது மூன்று மாத சோதனை அடிப்படையில் இந்த விளையாட்டுக்கு அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.