Skip to main content

“தமிழகத்தை தேடித்தேடி ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுத்தார் பிரதமர்..” - அண்ணாமலை! 

Published on 14/02/2022 | Edited on 14/02/2022

 

"The Prime Minister gave the smart city to Tamil Nadu .." - Annamalai!

 

தமிழ்நாடு முழுவதும் உள்ள நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பிரச்சாரம் களைகட்டியுள்ளது. அந்த வகையில், திருச்சியில் பாஜக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சி தமிழ்நாடு மாநிலத் தலைவர் அண்ணாமலை பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 

 

அப்பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, “தமிழக திமுக ஆட்சி 8 மாதம் முடிந்திருக்கிறது. 80 ஆண்டு காலம் எப்படி ஒரு  மனிதர் ஆட்சி செய்தால் சலிப்பு கோபம் வருமோ அது எட்டு மாதத்தில் வந்திருக்கிறது. பொங்கல் பரிசு தொகுப்பில் 120 கோடி ரூபாய் கமிஷன் அடித்திருக்கிறார்கள். தமிழகத்தைத் தேடித்தேடி பிரதமர் ஸ்மார்ட் சிட்டி திட்டம் கொடுத்தார். எந்த வேலையும் நடந்த மாதிரி தெரியவில்லை.

 

பாஜகவின் நீட் ஆதரவுக்கு எதிராக பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு போட்டு உள்ளனர். தமிழகத்திற்கு வேறு எந்த மருத்துவக் கல்லூரியை தனியாருக்கு கொடுக்காமல் அரசு மருத்துவக்கல்லூரிக்கு என 11 மருத்துவக் கல்லூரியை தமிழகத்திற்கு பிரதமர் கொடுத்து உள்ளார். திமுக எதைக் கையில் எடுத்தாலும் இரண்டு வாரம் மட்டும் தான் பேசுவார்கள். நீட் தேர்வு மூலம் தான் பல பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பு பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

 

பாரதம் 75 என்ற தலைப்பில் வடிவமைக்கப்பட்ட ஊர்தி நிராகரிக்க காரணம்; திமுகவின் கையாலாகாத தனத்தால் ஊர்தி நிராகரிப்பு செய்யப்பட்டது. கதை திரைக்கதை வசனத்தில் தான் இந்த ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. திமுகவின் தலைவர் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரச்சார களத்திற்கு வருவதற்கு பயப்படுகிறார். இதுவரை சரித்திரத்தில் முதலமைச்சர், வெளியில் வந்து ஓட்டு கேட்காத முதல் தேர்தல் இது தான். ராகுல் காந்தி சொன்ன நேரம் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது” என்று பேசினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.