Skip to main content

விழுப்புரம் மரக்காணம் ஊராட்சியில் பதவி போட்டி! 

Published on 25/10/2021 | Edited on 25/10/2021

 

Post contest in Villupuram Marakkanam panchayat!

 

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான மஸ்தானின் பகுதியில் உள்ள மரக்காணம் ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று சேர்மன் பதவியை பெற இருந்தது. இதில் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், பழனி, தயாளன், ஆகிய மூன்று பேர் சேர்மன் பதவிக்கு முட்டி மோதினார்கள். அமைச்சர் மஸ்தான், தயாளனை சேர்மனாக பதவியை ஏற்குமாறு அறிவித்தார். 

 

ஆனால், கண்ணன் அதை ஏற்கவில்லை. ‘கட்சியின் மூத்த நிர்வாகி நான்; எனக்கு ஒன்றியக் குழு உறுப்பினர்களின் ஆதரவு அதிக அளவில் உள்ளது. எனவே எனக்குத்தான் சேர்மன் பதவியை அளிக்க வேண்டும்’ என்று கூறியதோடு போட்டியிலும் இறங்கினார். சில ஒன்றியக் குழு உறுப்பினர்களை அழைத்து சென்று தனது கஸ்டடியில் வைத்திருந்தார் கண்ணன். 

 

கடந்த 22ஆம் தேதி ஒன்றிய அலுவலகத்தில் சேர்மன் தேர்வு செய்யும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது கண்ணன் ஆதரவாளர்கள் யாருக்கு ஆதரவு அதிகம் என்பதை போட்டியின் மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்று போர்க்கொடி தூக்கினார்கள். அதனை அமைச்சர் மஸ்தான் மறுத்துள்ளார். இதனால் தயாளன் ஆதரவாளர்களுக்கும் கண்ணன் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டது. அந்த சூழ்நிலையால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. அதே சமயம் சேர்மன் தேர்தலை அதிகாரிகள் ஒத்திவைத்தனர்.

 

மாவட்டச் செயலாளர் அறிவித்த சேர்மன் வேட்பாளரை எதிர்த்து போர்க்கொடி தூக்கிய காரணத்தினால் மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், மரக்காணம் நகர செயலாளர் பாரத் குமார் ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டதாகக் கூறி கட்சித் தலைமை அவர்களைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக நீக்கி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. 

 

இந்தநிலையில், நேற்று மாலை மரக்காணத்தில் அமைச்சர் மஸ்தான் தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் கட்சியில் கிழக்கு ஒன்றிய செயலாளர் தயாளன் சேர்மனாகவும், மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி துணை சேர்மனாகவும் தேர்வு செய்ய உள்ளதாக மாவட்டச் செயலாளரும் அமைச்சருமான மஸ்தான் அறிவித்துள்ளார். இந்த சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏ புகழேந்தி காலமானார்!

Published on 06/04/2024 | Edited on 06/04/2024
Vikravandi DMK MLA Pugalenthi passed away!

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதியில் தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ வாக பொறுப்பு வகித்து வந்தவர் புகழேந்தி (71). இந்த நிலையில், விழுப்புரம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் துரை. ரவிக்குமார், கடலூர் காங்கிரஸ் வேட்பாளர் விஷ்ணு பிரசாத் ஆகியோரை ஆதரித்து விழுப்புரம் விக்கிரவாண்டி வி.சாலையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று (05-04-24) இரவு வந்திருந்தார். 

இந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக நேற்று முன் தினம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி வந்திருந்தார். அப்போது, புகழேந்திக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டதால் அவர் உடனடியாக, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், இன்று (06-04-24) காலை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தி.மு.க எம்.எல்.ஏ புகழேந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விக்கிரவாண்டி திமுக எம்.எல்.ஏவான புகழேந்தி, விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருந்தவர். புகழேந்தி மறைந்த செய்தியை அறிந்து மருத்துவமனை முன்பு திமுக தொண்டர்கள் பெரும் திரளாக கூடியுள்ளனர். மேலும், அமைச்சர் பொன்முடி மருத்துவமனைக்கு வந்து, மறைந்த புகழேந்திக்கு அஞ்சலி செலுத்தினார். 

Next Story

இளம் பெண்ணிற்குத் தாலி கட்டிவிட்டு இளைஞர் தற்கொலை; சிக்கிய உருக்கமான கடிதம்!

Published on 05/04/2024 | Edited on 05/04/2024
young man lost their life by tying a thali to a woman

விழுப்புரம் திருவெண்ணெய்நல்லூர் அருகே வசிப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் விழுப்புரத்தில் உள்ள ஒரு வங்கியில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வருகிறார். இதனிடையே 26 வயது இளம்பெண் ஒருவரும் ராதாகிருஷ்ணனும் 10 ஆண்டுகளுக்கு மேலாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. அவர் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ராதாகிருஷ்ணனிடம் கூறி இருக்கிறார். அதற்கு ராதாகிருஷ்ணன் தனது தாயார் இறந்து சில மாதங்களே ஆகிறது. அதனால் ஒரு வருடம் கழித்து திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி இருக்கிறார்.

இந்த நிலையில்தான் அந்த பெண் நேற்று முன் தினம் விழுப்புரம் மகளிர் காவல்நிலையத்தில் ராதாகிருஷ்ணனை தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு புகார் கொடுத்துள்ளார்.அதன் பெயரில் போலீசார் ராதாகிருஷ்ணன் மற்றும் இளம்பெண் இருவர் வீட்டாரிடம் பேசி  சமாதானம் செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மாலை போலீஸ் நிலையம் அருகே உள்ள கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும் அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்துள்ளது. இதையடுத்து, இருவரும் பெண் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இரவு சிறிது நேரம் தங்கியிருந்த ராதாகிருஷ்ணன் பெண்ணிடம்  தனது வீட்டிற்கு சென்று விட்டு காலையில் வந்து உன்னை கூட்டிச்செல்கிறேன் என்று தெரிவித்துவிட்டு சென்றிருக்கிறார். இந்த நிலையில்தான் ராதாகிருஷ்ணன் காலையில் தனது விட்டில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராதாகிருஷ்ணனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அதன்  பிறகு விசாரணை செய்த போலீசாரிடம் ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், “என்னை மன்னித்து விடுங்கள் என்னை வற்புறுத்தி எனக்கு விருப்பம் இல்லாமல் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இந்த திருமணத்தை செய்து வைத்துள்ளார்கள். இது எனக்கு பிடிக்கவில்லை. என்னையும் என் குடும்பத்தாரையும் கொன்று விடுவேன் என மிரட்டினார்கள். எனது மரணத்திற்கு அவர்கள் தான் காரணம் எனக்கு விருப்பம் இல்லாத வாழ்கையை  எப்படி வாழ முடியும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது மகனின்  மரணத்திற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸில் புகார் அளிக்க, 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.