Skip to main content

போதை இளைஞர்கள் தாக்கியதில் ஊர்க்காவல் படைவீரருக்கு கை முறிவு! 3 பேர் கைது!  

Published on 17/06/2020 | Edited on 17/06/2020
Puducherry


புதுச்சேரியில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதையடுத்து இரவு நேரங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு போக்குவரத்து உதவி ஆய்வாளர் பிரதீபன் மற்றும் ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன், நெல்சன் ஆகியோர் போக்குவரத்தை நெறிப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர். 


அப்போது முகக்கவசம் அணியாமலும், கஞ்சா மற்றும் மதுபோதையிலும் ஒரே வாகனத்தில் வந்த மூன்று இளைஞர்கள் வாகன ஓட்டிகளுடன் சிக்னலில் நின்றனர். அவர்கள் முகக்கவசம் அணியாமல் இருந்ததால் வாகனத்தை விட்டு கீழே இறங்கும்படி ஊர்க்காவல் படைவீரர்கள் ரவிச்சந்திரன் மற்றும் நெல்சன் கூறியுள்ளனர்.


அவர்கள் கீழே இறங்காமல் தகராறு செய்ததுடன் ஊர்க்காவல் படை வீரர்களை தள்ளிவிட்டுச் சென்றுள்ளனர்.


இந்நிலையில் அந்தப் பகுதியில் பணியிலிருந்த கோரிமேடு போலீசார் அவர்களைப் பிடித்து தன்வந்திரி நகர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று  விசாரணை நடத்தினர். 


விசாரணையில் அவர்கள் திலாஸ்பேட்டை கருணாஜோதி நகரைச் சேர்ந்த அறிவழகனின் மகன் கௌதம்(22), சிவசங்கர் என்பவரின் மகன் தமிழரசன்(19), தேவராஜ் என்பவரின் மகன் முகேஷ்(20) என்பது தெரியவந்தது.


அதையடுத்து ரவிச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில் 4 பிரிவுகளின் கீழ் அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 


போதை இளைஞர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலில் ரவிச்சந்திரனின் வலது கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. மற்றொரு ஊர்க்காவல்படை வீரரான நெல்சனும் காயமடைந்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Next Story

லிஸ்டில் உள்ள 737 பேர்; இன்றே கடைசி நாள்

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
737 people on the list; Today is the last day

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கிய நிலையில், 27 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யக் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று கடைசி நாளாகும். தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உட்பட 102 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. நாளை வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடத் தமிழ்நாட்டில் இதுவரை 737 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். 39 தொகுதிகளில் இதுவரை ஆண்கள் 628 பேரும், பெண்கள் 109 பேரும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.