Skip to main content

தலைமைச் செயலகத்திற்குள் அத்துமீறல்: தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் மீது வழக்குப்பதிவு!

Published on 02/03/2018 | Edited on 02/03/2018
vettrivel


டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல் மீது சென்னை கோட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சென்னையில் நேற்று தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது முறைகேடு புகார் தெரிவித்துள்ளனர். நெடுஞ்சாலை ஒப்பந்த பணிகளில் எடப்பாடி பழனிசாமி உறவினர்களுக்கு தன்னிச்சையாக ஒதுக்கீடு செய்திருப்பதாக தங்க தமிழ்செல்வனும், வெற்றிவேலும் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதனிடையே,  தலைமை செயலகத்துக்குள் செல்ல முயன்ற தங்க தமிழ்செல்வன், வெற்றிவேலை போலீஸ் தடுத்த போது அவர்கள் போலீசாரை மிரட்டி அத்துமீறி நுழைந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் சென்னை கோட்டை காவல்துறையினர் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட டி.டி.வி. தினகரன்..! (படங்கள்)

Published on 19/03/2021 | Edited on 19/03/2021

 

2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு குறைந்த நாட்களே இருக்கின்ற நிலையில், அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அமமுக கட்சித் தலைவர் டி.டி.வி தினகரன், அவரது வேட்பாளர்களை ஆதரித்து தொடர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் வேளச்சேரி தொகுதியின் அமமுக  வேட்பாளர் சந்திர போஸை ஆதரித்து டி.டி.வி. தினகரன் வேளச்சேரி காந்தி சாலையில் பிரச்சாரம் செய்தார். 

 

 

Next Story

சசிகலா தமிழகம் வருகை... அமமுகவினர் உற்சாக வரவேற்பு!! (படங்கள்)

Published on 08/02/2021 | Edited on 08/02/2021

 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை முடிந்து பெங்களூருவிலிருந்து தமிழகம் வரும் சசிகலாவிற்கு வழிநெடுகிலும் 57 இடங்களில் வரவேற்பு கொடுக்க அமமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர். கர்நாடகா - தமிழக எல்லையான ஜூஜூவாடியில் மேளதாளம் முழங்க 5 ஆயிரம் பேர் சசிகலாவை வரவேற்றனர்.

 

அதைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் வழியாக சென்னை அழைத்து வரப்படுகிறார் சசிகலா. சென்னை எல்லையான செம்பரம்பாக்கம் தொடங்கி நசரத்பேட்டை, குமணன்சாவடி, போரூர், கிண்டி கத்திப்பாரா என தியாகராய நகர் வரை 32 இடங்களில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. சசிகலாவை வரவேற்று சென்னையின் பெரும்பாலான இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.