Skip to main content

பாமக தலைமை மீது அதிருப்தியில் நிர்வாகிகள்... டாஸ்மாக் விவகாரத்தால் அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறுகிறதா பாமக? 

Published on 29/04/2020 | Edited on 30/04/2020

 

pmk



கரோனா வைரஸ் பரவி வரும் நேரத்தில் ஊரடங்கைத் தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும் என்று அடிக்கடி தொடர்புகொள்ளும் பிரதமரிடம் தெரிவித்திருப்பதாக அன்புமணி ராமதாஸ் ட்வீட் செய்திருந்தார். அதுபோல் டாக்டர் ராமதாசும் ஊரடங்கு நேரத்தில் மக்கள் வெளியில் வரக்கூடாது என்று தொடர்ந்து எச்சரித்து வருகிறார். ட்விட்டர் வழியாக கருத்து சொன்னாலும், தைலாபுரத்திலிருந்து இருவரும் வெளியே வரவில்லை என்கின்ற கவலையும், வன்னிய சமூக மக்கள் அதிகமுள்ள வட மாவட்டங்களில் கூட நிவாரண உதவிகளை வழங்க பா.ம.க. முன்வரவில்லை என்கின்ற வருத்தமும், தங்களைக் கூட பெரியய்யாவும் சின்னய்யாவும் விசாரிக்கவில்லை என்கின்ற ஆதங்கமும் பா.ம.க. நிர்வாகிகளிடம் இருக்கிறது. தைலாபுரத் தரப்போ, டாக்டர்களான இருவரும் கரோனாவின் டேஞ்சரசை உணர்ந்ததால்தான் அவங்க ரெண்டுபேரும் தங்கள் பாதுகாப்பைக் கருதி வெளியே வரவில்லை என்று கூறுகின்றனர். அதோடு, பூரண மதுவிலக்கையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பா.ம.க.
 

இந்த நிலையில் கரோனாவால் டாஸ்மாக் கடைகள் இழுத்து மூடப்பட்டதால், கள்ளச் சாராயம்- குக்கர்சாராயம் என்று ஆங்காங்கே காய்ச்சப்பட்டாலும், பெரிய அளவுக்குச் சட்டம் ஒழுங்கு பாதிப்பு வராததைச் சுட்டிகாட்டும் அன்புமணி, இந்த நிலையைத் தொடரச் செய்து, முழுமையான மதுவிலக்கை அமல்படுத்துங்கள் என்று எடப்பாடியிடம் வலியுறுத்திக் கொண்டு இருக்கிறார். தேர்தல் நேரத்தில் அ.தி.மு.க. கூட்டணியைத் தொடர்வதா வேண்டாமா என்பதை இந்த மது விலக்கு விவகாரத்தை வைத்துதான் பா.ம.க. முடிவெடுக்க போவதாகச் சொல்லப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பா.ஜ.க கொடியைத் தீயிட்டு கொளுத்திய பா.ம.க நிர்வாகி; பின்னணி என்ன?

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
What is the background on BJP executive who set fire to BJP flag

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புள்ளநேரி சேர்ந்த மதன்ராஜ் என்பவர் தன்னுடைய முகநூல் பக்கத்தில், இரண்டு வீடியோக்களை பதிவு செய்துள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியதாவது, ‘தான் புள்ளநேரி பகுதியைச் சார்ந்தவன் எனவும் பாட்டாளி மக்கள் கட்சியில் சுமார் 12 வருட காலமாக இருந்து வருகிறேன். மேலும் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை செயலாளராகவும் உள்ளேன்.

இங்கு பஞ்சாயத்தில் உள்ள பா.ம.க நிர்வாகிகளை கலந்து ஆலோசனை செய்யாமல், பா.ஜ.க.வினர் தன்னிச்சையாக செயல்படுகின்றனர். இதன் காரணமாக தன்னுடைய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களுடைய பஞ்சாயத்தில் 65 சதவீதம் பாட்டாளி மக்கள் கட்சியின் ஓட்டு சதவீதம் உள்ளது. ஆனால், பா.ஜ.க.வில் ஓர் இருவர் தான் உள்ளனர்.

பா.ஜ.க நிர்வாகிகள், மரியாதை எப்படி கொடுக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியினரை பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும். எனவே எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்’ எனக்கூறி பா.ஜ.க.வின் கொடியை எரித்து எதிர்ப்பை தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை தனது முகநூலிலும் பதிவு செய்துள்ளார். மேலும் கட்சியினரின் அழுத்தத்தின் காரணமாக சிறிது நேரத்தில் அந்த வீடியோவை டெலீட் செய்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

3 நாள்கள் விடுமுறை; மதுக்கடைகளில் குவிந்த மதுப்பிரியர்கள்!

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Drinkers gathered in bars for holiday due to election

மக்களவைத் தேர்தலையொட்டி 3 நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டதையொட்டி செவ்வாய்க்கிழமை (16-04-24) இரவு மதுக்கடையில் மதுப்பிரியர்களின் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.

மக்களவைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் ஏப்ரல் 17, 18, 19 ஆகிய 3 நாட்கள் அரசு (டாஸ்மாக்) மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாஸ்மாக் கடையுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள், ஏப்ரல் 2 முதல் எப்ரல் 11 வரை (ஏப்ரல் 6 நீங்கலாக) அனைத்து மதுக்கூடங்களும் மூடப்படும். இந்த 3 நாள்களில் மதுபானங்களை விற்பனை செய்தாலோ அல்லது வேறு இடங்களுக்கு மதுபாட்டில்களை கொண்டு சென்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று (16-04-24) இரவுடன் மதுக்கடைகள் 3 நாள்களுக்கு மூடப்படும் என்பதால், திருச்சியில் மதுப்பிரியர்கள் தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில் குவிந்தனர். ஏராளமானோர் கடைகளை முற்றுகையிட்டு 3 நாள்களுக்குத் தேவையான மதுவகைகளை வாங்கிச்சென்றனர். இதனால் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் கூட்டம் நிரம்பி வழிந்தது.