Skip to main content

கட்சி அலுவலகத்தின் முன் தொண்டர்கள் போராட்டம்; நெருக்கடியில் பாஜக தலைமை!

Published on 29/03/2023 | Edited on 29/03/2023

 

Party workers protest in front of BJP office; Leadership in crisis!

 

லஞ்சம் பெற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பாஜக சட்டமன்ற உறுப்பினர் விருபாக்‌ஷப்பாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு அளிக்கக் கூடாது என பாஜக தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

கர்நாடக மாநிலத்தில் உள்ள சன்னகிரி தொகுதி பாஜக எம்.எல்.ஏ விருபாக்‌ஷப்பா, அரசின் சோப்பு மற்றும் டிடர்ஜெண்ட் நிறுவனத்தின் தலைவராக உள்ளார். 3 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு ஒதுக்க ரூ. 81 லட்சத்தை விருபாக்‌ஷப்பாவின் மகன் பிரஷாந்த் லஞ்சமாகக் கேட்டுள்ளார். அதற்காக முதற்கட்டமாக ரூ. 40 லட்சத்தை லஞ்சமாகப் பெற்ற போது லோக் ஆயுக்தா அதிகாரிகள் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ. 6 கோடி பணமும் சிக்கியது. இதைத் தொடர்ந்து விருபாக்‌ஷப்பா மற்றும் அவரது மகன் பிரஷாந்தை லோக் ஆயுக்தா அதிகாரிகள் கைது செய்து லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

 

இந்நிலையில் சன்னகிரி தொகுதி பாஜக தொண்டர்கள் நூற்றுக்கும் அதிகமானோர் பெங்களூருவில் உள்ள பாஜக கட்சி அலுவலகத்தின் முன் தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். விரைவில் நடைபெறவுள்ள கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் லஞ்சம் பெற்ற விவகாரத்தில் சிக்கியுள்ள விருபாக்‌ஷப்பாவிற்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பளிக்கக் கூடாது எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்சியின் தலைமை இது குறித்து தங்களது முடிவை அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

 

போராட்டத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். பாஜக தொண்டர்களே அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக கட்சி அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபடுவது கர்நாடக பாஜக தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மும்முரமாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவு; பிரதமர் வைத்த வேண்டுக்கோள்

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
PM Modi asks everyone to vote

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  

இந்த நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “2024 மக்களவைத் தேர்தல் இன்று தொடங்குகிறது!  21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், இந்தத் தொகுதிகளில் வாக்களிக்கும் அனைவரும் சாதனை அளவை எட்டும் வகையில் தங்களது வாக்குரிமையை  பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

தேர்தல் எதிரொலி; தமிழக எல்லையில் தீவிர சோதனை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Election Echoes; Intensive check on the border of Tamil Nadu

2024 ஆம் ஆண்டிற்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகத்திலும், புதுச்சேரியிலும்  நாளை நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் காரணமாக வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள் கொண்டு செல்வதைத் தடுக்க தமிழக, கர்நாடக எல்லையான காரப்பள்ளம் சோதனை சாவடியில் துப்பாக்கி ஏந்திய போலீசாரும், தேர்தல் பறக்கும் படை அலுவலர்களும் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழகம் செல்லும் வாகனங்களிலும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன் பின்னர்தான் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் சுற்றுலா பேருந்துகள் சொகுசு கார்கள் உள்ளிட்டவற்றை தீவிர சோதனைக்குப் பிறகு வாகன என் பெயர் போன்ற தகவல்களைச் சேகரித்த பின் தமிழகத்தில் நுழைய அனுமதிக்கின்றனர். இதனால் மாநில எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.