Skip to main content

'ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பி.எஸ்...' இரண்டாவது வீடியோ வெளியீடு...!

Published on 25/01/2021 | Edited on 25/01/2021

 

OPS released hid Second advertisement  video


முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.க்கும் இடையே வீடியோ விளம்பங்கள் போட்டி போட்டுக்கொண்டு உருவாகிக்கொண்டு இருக்கிறது.

 

சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் வர இருப்பதால் முதன்முதலில் ஈ.பி.எஸ். பேப்பர் விளம்பரமும், வீடியோ விளம்பரமும் கொடுத்தார். அதைத் தொடர்ந்து ஓ.பி.எஸ். பேப்பர் விளம்பரமும் வீடியோ விளம்பரமும் செய்தார். இதில், முன்னாள் முதல்வர்களான பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்றோர் படங்களுடன் ஈ.பி.எஸ். படத்தையும் போட்டு விளம்பரம் செய்திருந்தார். ஆனால், ஈ.பி.எஸ். தனது எந்த ஒரு பேப்பர் விளம்பரத்திலும் வீடியோ விளம்பரத்திலும் ஓ.பி.எஸ். படத்தைப் போடவில்லை. இதனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் அதிருப்தியில் இருந்துவந்தனர். அதன் எதிரொலியாகத்தான் ஓ.பி.எஸ். முதன்முதலில் ‘மண்ணையும் மக்களையும் வணங்குகிறேன்’ என்று  ஒரு வீடியோ தயாரித்து, அது வாட்ஸ்அப், ஃபேஸ்புக் பக்கங்களில் வைரலாக பரவிவந்தது.  

 

அதில், ஈ.பி.எஸ். படத்தையும்போட்டு, 10 ஆண்டுகளில் 100 ஆண்டு சாதனைகள் என்று முன்னாள் முதல்வர்களுடன் ஈ.பி.எஸ். படத்தையும்போட்டு வாக்களிக்குமாறு இரட்டை விரலை காட்டி, இரட்டை இலையும் காண்பித்தார் ஓ.பி.எஸ். அப்படி இருந்தும்கூட, ஈ.பி.எஸ். அடுத்தடுத்து கொடுத்துவரும் வீடியோ விளம்பரங்களில் ஓ.பி.எஸ். படத்தை தொடர்ந்து புறக்கணித்து வருகிறார். இதனால், ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தொடர்ந்து மனம் நொந்துபோய்வந்தனர்.

 

இந்த நிலையில்தான், ஓ.பி.எஸ்.-ன் இரண்டாவது வீடியோ வாட்ஸ்சப். ஃபேஸ்புக்கில் பரவி வருகிறது.  அதில், ‘ஜல்லிக்கட்டு உலகத் தமிழர்களின் உரிமைக் குரல், நாடு கேட்ட தீர்ப்பையே வாங்கித்தந்த பெருமையே, தை பிறந்த நாளிலேயே தைரியம் பிறந்ததே. இந்த மண்ணும், மக்களும், கதிரும், காளையும் எங்க ஜல்லிக்கட்டு நாயகனுக்கு நன்றி சொல்கிறது’ என்றும், இந்த 10 ஆண்டில் 100 ஆண்டு சாதனைகள் என இப்படிவரும் அந்த வீடியோ விளம்பரத்தில் ஜெ.வுடன்  ஓ.பி.எஸ். அதன்பின் பிரதமர் மோடி, ஈ.பி.எஸ். இருக்கிற மாதிரியும் ஓ.பி.எஸ்.-ன் இரண்டாவது வீடியோவும் வெளிவந்திருக்கிறது.

 

அந்த அளவுக்கு ஈ.பி.எஸ். தன்னை மதிக்காவிட்டாலும் ஈ.பி.எஸ். படத்தைக் காட்டி ஓ.பி.எஸ். விளம்பரம் செய்துவருவது அவரது பெருந்தன்மையைக் காட்டுகிறது என்று அனைத்து தரப்பு மக்களும் ஒருபுறம் பேசி வருகிறார்கள்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

5 ஓ.பி.எஸ்.கள் விவகாரம்; எடப்பாடியின் அசர வைத்த பதில்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
5 OPS issue; Edappadi's shocked response

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

இந்நிலையில், மதுரையில் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி. உதயகுமார் மற்றும் மதுரை அதிமுக நாடாளுமன்ற வேட்பாளர் டாக்டர் சரவணன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, 'மதுரையில் அதிமுகதான் அமோக வெற்றி பெறும். அதிமுக கூட்டணிக்கு மக்கள் மத்தியில் மிகப்பெரிய செல்வாக்கு இருக்கிறது. இதனால் எங்கள் கூட்டணி மிகப்பெரிய வெற்றியை பெரும். அதேபோல் விளவங்கோடு இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெறும்'' என்றார்.

அப்பொழுது செய்தியாளர் ஒருவர், 'ஒரு பன்னீர்செல்வத்தை தோற்கடிக்க ஐந்து பன்னீர் செல்வங்கள் தேர்தலில் போட்டியிட்டு உள்ளார்களே' என்ற கேள்விக்கு, ''என்னங்க இது சுதந்திர நாடுங்க. பன்னீர்செல்வமும் ஒன்றுதான், நானும் ஒன்றுதான் இங்கு நிற்கின்ற வேட்பாளர் ஒன்றுதான், நீங்களும் ஒன்றுதான். எல்லாரும் சமம்தான். இது மிகப்பெரிய ஜனநாயக நாடு. இதில் இவர் பெரியவர் அவர் பெரியவர் என்று அல்ல. மக்கள் யார் பெரியவராக நினைக்கிறார்களோ அவர்கள் தான் பெரியவர். அங்கு 5 ஓ. பன்னீர் செல்வம் நிற்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அப்பொழுது அவர்களெல்லாம் தகுதி இல்லாதவர்களா? அந்த வேட்பாளர்களுக்கு தகுதி இருக்கிறது என்று தேர்தலில் நிற்கிறார்கள்'' என்றார்.

ஓபிஎஸ்-ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவு. எடப்பாடி பழனிசாமி நான் எடுத்த முடிவு அல்ல. தனிப்பட்ட முறையில் திட்டமிட்டு சிலவற்றை கற்பனையாக வெளியிடுவது தவறு. ஒட்டுமொத்தமாக அதிமுக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், 2 கோடி தொண்டர்கள் எடுத்த முடிவுப்படி தான் நான் செயல்படுகிறேன். திமுக மாதிரி வெளியில் வீர வசனம் பேசவில்லை. நாங்கள் பிரதமரை எதிர்க்கிறோம் என்று வெளியில் வீர வசனம் பேசுகிறார்கள் கறுப்பு குடை பிடித்தால் அவர் கோபித்துக் கொள்வார் என்று வெள்ளைக் குடை பிடிக்கிறார்கள். அப்படிப்பட்ட தலைவர் தான் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். ஓடோடி போய் தமிழ்நாட்டில் திட்டங்களை துவக்கி வைக்க மோடியை அழைக்கிறார் முதல்வர். அங்கு சரணாகதி இங்கு வீர வசனம். இதுதான் திமுகவின் இரட்டை வேடம்'' என்றார்.

Next Story

பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி; திருச்சியில் தயாராகும் பொதுக்கூட்ட ஏற்பாடு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
Edappadi who started the campaign; Organized public meeting in Trichy

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த நாடாளுமன்றத் தேர்தலின் வாக்குப்பதிவு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

இன்று சேலத்தில் அதிமுகவின் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதேநேரம் இன்று திருச்சியில் அதிமுக பரப்புரை பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதிமுகவின் முதல் பரப்புரை கூட்டம் என்பதால், திருச்சி வண்ணாங்கோவில் பகுதியில் மிக பிரம்மாண்டமான மேடை அமைக்கப்பட்டு இருக்கிறது.

பல்லாயிரக்கணக்கானோர் அமரும் வகையில் இருக்கையில் அமைக்கப்பட்டிருக்கின்றன. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று மதியம், 1.30 மணியளவில் சேலத்தில் இருந்து காரில் புறப்படும் எடப்பாடி பழனிச்சாமி மதியம், 3.30 மணியளவில் திருச்சியை வந்தடைகிறார். திருச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். அதன்பிறகு மாலை, 4.40 மணி அளவில் வண்ணாங்கோயில் பரப்புரை கூட்ட திடலுக்கு வருகிறார்.

கூட்டத்தில் பங்கேற்று விட்டு, இன்றிரவு, 8 மணிக்கு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார். திருச்சியில் நடைபெறும் பிரம்மாண்ட பரப்புரை பொதுக்கூட்டத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிடும் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை சேர்ந்த, 40 வேட்பாளர்களையும் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் செய்யவுள்ளார்.

இந்த மேடையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, எஸ்டிபிஐ கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய தமிழகம் கட்சித் தலைவர்  கிருஷ்ணசாமி உள்ளிட்ட தோழமைக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.