Skip to main content

ஓ.பி.எஸ். பிறந்தநாள் கொண்டாட்டம்.. கடும் போக்குவரத்து நெரிசல்.. முகம் சுளித்த பொதுமக்கள்..

Published on 15/01/2021 | Edited on 15/01/2021

 


தமிழக துணை முதல்வர் ஓ.பி.எஸ்-ன் பிறந்த நாளை முன்னிட்டு தேனியில் அவரது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினர் கொண்டாடினர்.

 


ஜனவரி 14ஆம் தேதி ஓ.பி.எஸ்.-ன் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டு தனது 70வது பிறந்த நாளை ஓ.பி.எஸ். கொண்டாடினார். அதிகாலை தன் தாயாரிடம் ஆசி வாங்கிய ஓ.பி.எஸ். அதைத் தொடர்ந்து குடும்பத்தாரின் வாழ்த்துகளை பெற்றார்.
 


பெரியகுளத்தில்  உள்ள அக்கரகாரம் பகுதியில் இருக்கும் ஓ.பி.எஸ். வீடு பகுதி முழுவதும் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் பெரும் திரளாக ஓ.பி.எஸ்.காக காத்திருந்தனர். வீட்டை விட்டு  வெளியே வந்த ஓ.பி.எஸ். பொறுப்பாளர்களையும் தொண்டர்களையும் பார்த்து இருகரம் கூப்பி வணங்கினார். அதைக் கண்டு உற்சாகமடைந்த தொண்டர்கள், ‘மக்களின் முதல்வர் ஓ.பி.எஸ்., வருங்கால முதல்வர் ஓ.பி.எஸ்.’ என்று கோஷம் போட்டனர்.

 


கட்சிப் பொறுப்பாளர்கள் மாலை, சால்வைகளை கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து தெரிவித்தார். அதுபோல் அதிகாலையிலேயே  பிரதமர் மோடி ஓ.பி.எஸ்.-க்கு பிறந்தநாள் வாழ்த்து கடிதம் அனுப்பியிருந்தார். மேலும், மதியம் 12 மணிக்கு தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஓ.பி.எஸ்.-க்கு நேரடியாகவே வாழ்த்து தெரிவித்தார். அதுபோல் பா.ஜ.க.வின் தேசிய தலைவர்  ஜெ.பி.நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  உள்பட  பல பா.ஜ.க. தலைவர்களும் ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து தெரிவித்தனர். 

 


தமிழக அமைச்சர்கள் உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் முன்னாள் அமைச்சரான நத்தம் விஸ்வநாதன். முனுசாமி  உள்பட கட்சிப் பொறுப்பாளர்கள் பலரும் ஓ.பி.எஸ்.க்கு நேரில்வந்து பூங்கொத்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததுடன் மட்டுமல்லாமல், சாமி சிலைகள் உள்பட நினைவு பரிசுகளை வழங்கினார்கள். இதில் சென்னையிலிருந்துவந்த கட்சி பொறுப்பாளர் சிலர் 6 அடி உயரமுள்ள வெள்ளியினாலான வேல்-ஐ ஓ.பி.எஸ்.க்கு பிறந்த நாள் பரிசாக கொடுத்தனர். 

 

தேனி மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்றத் தொகுதியில் உள்ள கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் வழக்கத்தைவிட பெருந்திரளாக கலந்துகொண்டு ஓ.பி.எஸ்.க்கு வாழ்த்து தெரிவித்தனர். இதனால் பெரியகுளம் நகரத்தில் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதனால் டென்ஷன் அடைந்த பயணிகள் பேருந்தைவிட்டு இறங்கி நடை பயணமாகச் சென்றனர். அதேபோல், ஓ.பி.எஸ். தம்பி ஓ.ராஜா, பெரியகுளத்தில் உள்ள காளியம்மன் கோவிலில்  அன்னதானம் வழங்கினார். 

 

மாவட்டத்தில் உள்ள போடி, தேனி, கம்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஓ.பி.எஸ்.காக கட்சிப் பொறுப்பாளர்கள் அன்னதானமும் வழங்கினார்கள். மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் கட்சி பொறுப்பாளர்களும் தொண்டர்களும் அங்கங்கே பேனர்களை  வைத்து வாழ்த்து தெரிவித்தனர். அதில், பெரும்பாலான பேனர்களில் முதல்வர் இ.பி.எஸின் படம் சிறிதாகவும், ஓ.பி.எஸ். படம் பெரிதாகவும் இருந்தன. பல பேனர்களில் இ.பி.எஸ். படம் இல்லாமல், ஓ.பி.எஸ். படம் மட்டுமே போட்டுவைத்து வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதோடு ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வாங்கிக் கொடுத்ததின் பேரில் ‘ஜல்லிக்கட்டு தந்தவரே’ என்று ஓ.பி.எஸ்-ஐ புகழ்ந்து அரண்மனை, புதூர்சுப்பு உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பல இடங்களில் பேனர்களை வைத்திருந்தனர்.

 


தேனி பாராளுமன்ற உறுப்பினரும் மூத்த மகனுமான ரவீந்திரநாத் குமாரும், இளைய மகனான ஜெயபிரதீப்பும் ஓ.பி.எஸ்-ன் பிறந்த நாளை முன்னிட்டு மரக் கன்றுகளைப் பல பகுதிகளில் நட்டனர். எந்த வருடமும் இல்லாமல் இந்த வருடம் ஓ.பி.எஸ்.-ன் பிறந்தநாள் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டு இருப்பதைக் கண்டு எதிர்க்கட்சியினரே அரண்டு போய்விட்டனர்.


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழகத்தில் பா.ஜ.க., அதன் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

Published on 21/03/2024 | Edited on 21/03/2024
Announcement of constituencies contested by BJP and its allies in TN

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி, தொகுதிப் பங்கீடு எனத் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்தவகையில் பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளரும், கட்சியின் தலைமையிடத்து பொறுப்பாளருமான அருண் சிங் 3 ஆம் கட்டமாக தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகளுக்கான பா.ஜ.க.வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (21.03.2024) வெளியிட்டிருந்தார். அதன்படி சென்னை தெற்கு - முன்னாள் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், மத்திய சென்னை - வினோஜ் பி.செல்வம், கிருஷ்ணகிரி - சி. நரசிம்மன், நீலகிரி - எல்.முருகன், திருநெல்வேலி - நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரி - பொன். ராதாகிருஷ்ணன், வேலூர் - புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், பெரம்பலூர் - இந்திய ஜனநாயக கட்சியின் பாரிவேந்தர் ஆகியோர் தாமரைச் சின்னத்தில் போட்டியிட உள்ளனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் பா.ஜ.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி யுள்ளது. அதன்படி திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 19 தொகுதிகளில் பா.ஜ.க. நேரடியாக போட்டியிடுகிறது. அதே சமயம் தாமரை சின்னத்தில் புதிய நீதிக்கட்சி வேலூர் தொகுதியிலும், இந்திய ஜனநாயக கட்சி பெரம்பலூர் தொகுதியிலும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் சிவகங்கை தொகுதியிலும், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் தென்காசி தொகுதியிலும், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு இராமநாதபுரம் தொகுதியிலும் போட்டியிட உள்ளன.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் பிரசர் குக்கர் சின்னத்தில் திருச்சி மற்றும் தேனி ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட உள்ளது. தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சைக்கிள் சின்னத்தில் ஈரோடு, ஸ்ரீபெரும்புதூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. பட்டாளி மக்கள் கட்சி காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 10 தொகுதிகளில் போட்டியிட உள்ளது.

Next Story

இரட்டை இலை சின்னம் வழக்கு; சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Madras High Court action decision on double leaf symbol case

அ.தி.மு.க.வில் ஒற்றைத் தலைமை பிரச்சனை பூதாகரமாகி ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். ஆகிய இருவரும் நீதிமன்றத்திலும் தேர்தல் ஆணையத்திலும் முறையிட்ட நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராகத் தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஏப்ரல் 20 ஆம் தேதி (20.04.2023) அங்கீகரித்தது. இதன் மூலம் இரட்டை இலை சின்னம் எடப்பாடி பழனிசாமி வசம் என்பது உறுதியானது. 

அதே சமயம் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களைப் பயன்படுத்தி வந்தார். இதனால் அ.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுகிறது. எனவே அ.தி.மு.க.வின் கொடிகள், பெயர், லெட்டர் பேடு, சின்னங்களை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதிக்கக் கோரி எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி சதீஷ்குமார், ‘எத்தனை முறைதான் ஒரே ஒரு விவகாரத்திற்காக நீதிமன்றத்தின் கதவை தட்டுகிறீர்கள்’ என ஓ.பி.எஸ். தரப்புக்கு கண்டனம் தெரிவித்ததோடு, அ.தி.மு.க.வின் கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பி.எஸ். பயன்படுத்த இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி அளித்த இந்த இடைக்காலத் தடையை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது ஷஃபிக் அமர்வு முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. 

அப்போது ஓ. பன்னீர்செல்வம் தரப்பில், “பொதுக்குழு தொடர்பான பிரதான சிவில் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே எந்த தடையும் விதிக்கக் கூடாது” என வாதிடப்பட்டது. இதனையடுத்து ஓ.பி.எஸ். தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதில், அ.தி.மு.க. கொடி, பெயர், சின்னம், லெட்டர் பேட் உள்ளிட்டவற்றை ஓ. பன்னீர்செல்வம் பயன்படுத்த தடை விதித்தது செல்லும் எனவும், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கி இருந்தது. மேலும் சம்பந்தப்பட்ட நீதிபதியை அணுகி நிவாரணம் பெற ஓ. பன்னீர்செல்வத்திற்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு நீதிபதி சதீஷ்குமார் முன்பு கடந்த 4 ஆம் தேதி (04.03.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய நாராயணன் ஆஜராகி வாதிடுகையில், “அ.தி.மு.க.வில் உறுப்பினராக இல்லாத ஓ.பன்னீர்செல்வம் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் இன்னமும் தன்னை அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் எனக் குறிப்பிட்டுள்ளார். அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவியே கிடையாது. அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத ஒருவர் இன்னமும் தன்னை ஒருங்கிணைப்பாளராக கூறி வருகிறார். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கட்சிக்கு சம்பந்தம் இல்லாத ஒருவர் கட்சி நடவடிக்கையில் தலையிடுவது தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்தும்” எனத் தெரிவித்திருந்தார். இவ்வாறு எடப்பாடி பழனிசாமியின் தரப்பு வாதம் நிறைவடைந்தது.

இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (18-03-24) விசாரணைக்கு வந்தது. அப்போது, உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், ‘அதிமுக இரட்டை இலை சின்னம், கொடியை பயன்படுத்த ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து அதிரடி தீர்ப்பளித்தார். இரட்டை இலை சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை ஓ.பன்னீர்செல்வம் பயன்படுத்த ஏற்கனவே இடைக்கால தடை விதித்திருந்த நிலையில், தற்போது நிரந்தர தடை விதித்திருப்பது ஓ.பி.எஸ் ஆதரவாளர்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.