Skip to main content

NLC-யில் கடும் விபத்துகள் ஏற்படாமல் தடுக்க வேண்டும்: நெய்வேலி எம்.எல்.ஏ. சபா ராஜேந்திரன் வலியுறுத்தல்!

Published on 03/07/2020 | Edited on 03/07/2020

 

neyveli


நெய்வேலி என்.எல்.சி. இரண்டாவது அனல்மின் நிலையத்தில் பாய்லர் வெடித்து ஆறு பேர் இறந்தது குறித்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார் நெய்வேலி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. ராஜேந்திரன்.

 

அதில், "என்.எல்.சி. நிறுவனம் ஆண்டுதோறும் பல ஆயிரம் கோடி லாபம் ஈட்டும் வகையில் அனைத்துத் தொழிலாளர்களும் அதிகாரிகளும் அர்ப்பணிப்புடன் பணி செய்து வருகிறார்கள்.

 

ஆனால், நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல்மின் நிலையப் பகுதிகளில் பராமரிப்புப் பணிகளை என்.எல்.சி. நிர்வாகம் சரிவர செய்வதில்லை. பொருளாதார வளர்ச்சி லாபம் எந்த அளவுக்கு முக்கியம் என்று கருதுகிறதோ அதைவிட தொழிலாளர்கள் உயிர் முக்கியம் என்பதை என்.எல்.சி. நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

 

லாபம் ஈட்டுவதில் செலுத்தும் அக்கறையை மனித உயிரழப்பு ஏற்படாமல் பாதுகாக்க வேண்டும் என்பதிலும் காட்ட வேண்டும். தொழிலக பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் பராமரிப்புப் பணிகளைத் தரமான முறையிலும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளவேண்டும்.

 

neyveli

 

என்.எல்.சி. விபத்தில்லா நிறுவனம் என்று நிலையை உருவாக்க வேண்டும். இந்தக் கோர விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலையும் ஒரு கோடி ரூபாய் நஷ்ட ஈடும் வழங்க வேண்டும். காயமடைந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 50 லட்சம் வழங்க வேண்டும் என்றும் சபா ராஜேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணி அளவில் நெய்வேலி விருந்தினர் மாளிகையில் அரசுத் தரப்பில் சேர்மன் ராகேஷ் குமார், மனிதவளத் துறை இயக்குனர் விக்ரமன், திட்ட இயக்குனர் நாகேஸ்வரராவ், மின் துறை இயக்குனர் ஷாஜி ஜான், செயல் இயக்குனர் சதீஷ் பாபு ஆகியோர் பங்கேற்றனர்.

 

பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தி.மு.க. எம்.பி. ரமேஷ், எம்.எல்.ஏ.-க்கள் கணேசன், சபா ராஜேந்திரன், துரை சரவணன், அ.தி.மு.க. எம்.எல்.ஏ .கலைச்செல்வன் மற்றும் பா.ம.க., த.வா.க., வி.சி.கட்சி நிர்வாகிகள் மற்றும் தொ.மு.ச., சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உட்பட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

http://onelink.to/nknapp

 

இந்தப் பேச்சுவார்த்தையின்போது சேர்மன் ராகேஷ் குமார் கூறுகையில், என்.எல்.சி. இரண்டாம் அனல் மின் நிலையத்தில் நடந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலையும், தலா 30 லட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்கப்படும். காயமடைந்தவர்கள் குடும்பத்தினருக்கு 5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

 

இதனைப் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற அனைவரும் ஏற்றுக்கொண்டதால் சுமுக உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நெய்வேலி நகரில் வணிகர் சங்கத்தின் சார்பாக கடையடைப்பு நடத்தப்படும் என்று அறிவித்துள்ளனர்.

 

என்.எல்.சி. நிர்வாகம் இதுபோன்ற விபத்துகள் உயிரிழப்புகள் ஏற்படும்போது வேலை கொடுப்பதாலும் இழப்பீடு வழங்குவதாலும் மட்டும் நிரந்தரத் தீர்வை எட்டி விடமுடியாது.

 

தொழிலாளர்களின் உயிருக்கு உத்தரவாதம் தரும் வகையில் தரமான தளவாடங்கள் பொருத்தப்பட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் நிர்வாகப் பணிகளை வழங்கக்கூடாது. திறமையான வல்லுனர்களைப் பணிக்கு அமர்த்த வேண்டும். தொழிலாளர்களை நிர்வகிக்கும், வேலை வாங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போதுதான் உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என்கிறார்கள் தொழிலாளர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

வெள்ளியங்கிரி மலை ஏறிய இளைஞருக்கு நேர்ந்த துயரம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tragedy befell the young man who climbed the Velliangiri mountain

கோவை மாவட்டத்தில் உள்ள வெள்ளியங்கிரி மலையில் பக்தர்கள் மட்டுமல்லாது டிரக்கிங் ஆர்வம் உள்ளவர்களும் மலையேறி அங்குள்ள சிவன் கோவிலில் வழிபாடு செய்வது வழக்கம். மலையேறும் பக்தர்கள் எண்ணிக்கை அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது அண்டை மாநிலங்களில் இருந்தும் மலையேற்ற அனுபவத்தைப் பெறுவதற்காகவும், சிவ லிங்கத்தை தரிசனம் செய்யவும் வெள்ளியங்கிரி மலைக்குச் செல்கின்றனர்.

மொத்தமாக ஏழு மலைத்தொடர்கள் கொண்ட வெள்ளியங்கிரி மலையில் ஏழாவது மலையில் சிவலிங்கம் உள்ளது. அதனைத் தரிசிப்பதற்காகவே பக்தர்கள் கூட்டம் படையெடுக்கிறது. அதுவும் சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட முக்கிய சீசன் காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து மலையேறுவர். இந்நிலையில் வெள்ளியங்கிரி மலையில் ஏறி சாமி தரிசனம் செய்துவிட்டு, கீழே இறங்கியபோது 7 வது மலையில் திருப்பூரை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) என்பவர் கடந்த 18 ஆம் தேதி தவறி விழுந்தார். இதனால் அவரின் கை மற்றும் வயிற்றுப்பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

உடல்நலக் குறைவால் வெள்ளியங்கிரி மலையில் ஏறிய 7 பேர் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் வெள்ளியங்கிரி மலைக்கு சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக் உயர்ந்துள்ளது. முன்னதாக சித்ரா பவுர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் வெள்ளியங்கிரி மலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வெள்ளியங்கிரி மலைக்கு செல்லும் பக்தர்களை ட்ரோன் மூலம் கண்காணிக்க வனத்துறை சார்பில் திட்டமிடப்பட்டுள்ளது எனவும், கோடை வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் காட்டுத் தீயை கண்காணிக்கவும் ட்ரோன்களை பயன்படுத்த வனத்துறை முடிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Next Story

கல்லூரி மாணவி கொலை சம்பவம்; காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக பா.ஜ.க போராட்டம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

கர்நாடகா மாநிலம், தார்வார் மாவட்டம் உப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் நிரஞ்சன் ஹிரேமட். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிரஞ்சன் தார்வார் மாநகராட்சியில் கவுன்சிலராக பொறுப்பு வகித்து வருகிறார். இவரது மகள் நேகா ஹிரேமட் (24). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நேகா பயின்று வந்த அதே கல்லூரியில் பெலகாவி பகுதியைச் சேர்ந்த பயாஜ் (24) என்பரும் படித்து வந்தார். இந்த நிலையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த பயாஜ், இந்து மதத்தைச் சேர்ந்த நேகாவை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். பயாஜ், தனது காதலை நேகாவிடம் கூறிய போது அதை நேகா ஏற்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால், நேகா மீது பயாஜ் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன் தினம் (20-04-24) வழக்கம் போல் நேகா கல்லூரிக்கு வந்துள்ளார். அப்போது அங்கு வந்த பயாஜ், நேகாவிடம் தனது காதலை ஏற்குமாறு தகராறு செய்து வந்துள்ளார். ஆனால், நேகா, அவரது காதலை திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த பயாஜ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, நேகாவை சரமாரியாக குத்தினார். இதி்ல் படுகாயமடைந்த நேகா, ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே வேளையில், கல்லூரி வளாகத்திலேயே மாணவியை குத்தி கொலை செய்துவிட்டு தப்பியோடிய பயாஜை, அங்கிருந்த மாணவர்கள் சுற்றி வளைத்து பிடித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பயாஜ்ஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். காங்கிரஸ் கவுன்சிலரின் மகள், கல்லூரி வளாகத்திலேயே ஒரு தலைக் காதலால் சக மாணவரால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக, நேகாவின் தந்தையும், கவுன்சிலருமான நிரஞ்சன் தெரிவிக்கையில், ‘லவ் ஜிகாத்தால் தான் தனது மகள் கொலை செய்யப்பட்டுள்ளார்’ எனக் குற்றம் சாட்டினார்.

இதற்கிடையில், ஹுப்பள்ளி மாணவி கொலை வழக்கை குற்றப் புலனாய்வுத் துறையிடம் ஒப்படைக்க தனது அரசு முடிவு செய்துள்ளதாகவும், அதை விரைந்து முடிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படும் என்றும் கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார். அதே வேளையில், கொலை செய்யப்பட்ட கல்லூரி மாணவியின் தந்தை காங்கிரஸ் கவுன்சிலருக்கு ஆதரவாக இந்த விவகாரத்தை பா.ஜ.க தனது கையில் எடுத்துள்ளது. இந்த சம்பவத்தை ‘லவ் ஜிஹாத்’ எனக் கூறி நீதி வேண்டும் என பா.ஜ.க.வும் இந்துத்துவ அமைப்புகளும் போராடி முழு கடை அடைப்பு நடத்த பந்த்க்கு அழைப்பு விடுத்துள்ளது.

BJP protest in support of Congress councillor on College student incident in karnataka

அந்த வகையில், பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உயிரிழந்த மாணவியின் பெற்றோரை நேற்று சந்தித்து ஆறுதல் கூறினார். அதை தொடர்ந்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறோம். இந்த கொலை தொடர்பான அரசின் அறிக்கைகள் விசாரணையை சீர்குலைக்கும் வகையில் இருக்கின்றன. திருப்தி அரசியலுக்காக தற்போதைய அரசைக் கர்நாடகா மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” எனத் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் குறித்து கர்நாடகா பா.ஜ.க தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா கூறுகையில், “பா.ஜ.க தொண்டர்கள் தேர்தல் வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு, பந்தில் கலந்து கொள்ளுங்கள். இந்த சம்பவத்தில் அரசாங்கம் அலட்சியமாக நடந்துகொள்கிறது. சிறுபான்மையினரின் ஆதரவே இந்த அரசாங்கத்தின் முன்னுரிமை” என்று கூறி பா.ஜ.கவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.