Skip to main content

கட்சிக்காரன் உயிர் முக்கியமில்ல..! காசுதான் முக்கியமா? - தி.மு.க பகுதி செயலாளரை கேட்கும் தொண்டன்!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

ddd

 

சென்னை மயிலை 124ஆம் வட்ட தி.மு.க செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தன் சொந்தத் தம்பியாகிய தன்னிடமிருந்தும் சகோதரிகளிடம் இருந்தும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை ஏமாற்றி அபகரித்து, தான் வகிக்கும் பதவியைக் காட்டி அனைவரையும் பயமுறுத்தியும் ஆட்களைக் கொண்டு அச்சுறுத்தியும் வருவதாக கிருஷ்ணமூர்த்தி தம்பி உமாமகேஸ்வரன் புகார் கூறியுள்ளார். 

 

இதுகுறித்து அவர் சென்னை நீலாங்கரை காவல்நிலையத்தில் அளித்துள்ள புகாரில், பல கோடிக்கு மேல் உள்ள சொத்தை விற்றுவிட்டு யாருக்கும் தராமல் தானே எடுத்துக்கொண்டார். அவரது தம்பியாகிய நான், எனக்குச் சேர வேண்டிய பங்கினைக் கேட்கும்போது அடியாட்களுடன் வந்து என்னை, என் மனைவி உமா மகேஸ்வரி, என் மாமனார் ஆகியோரை மிகக் கடுமையாகத் தாக்கினர். இதனால் படுகாயம் அடைந்தோம். பிறகு, வீட்டில் உள்ள பொருட்களையும் களவாடிச் சென்றனர் எனக் கூறியுள்ளார். 

 

மேலும், அவர் திமுக பகுதி செயலாளருக்கு ஆடியோ ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த ஆடியோவில், "எங்களோட பிரச்சனையை மனிதாபிமானத்தோடு புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு பணம் முக்கியமா? பணம் உள்ளவர்களுக்கு மட்டும் நல்ல வாழ்க்கை இருக்கணும். நாங்களெல்லாம் நாசமா போகணுமா? இன்னைக்கு நாங்க செத்தாக் கூட எதுவும் பண்ணமாட்டீங்க. உங்களுக்கு தேவை பணம் இருக்கிறவன் கட்சியில இருக்கணும். கட்சிக்காக குடும்பம் குடும்பமாக ஓட்டு போடுறவங்க தெருவுல நிக்கணும்.  

 

கூட பொறந்தவன்னு கூட பாக்காம 20, 30 பேரை வைச்சு அடிக்குறாங்க. ஃஎப்.ஐ.ஆர் பதிவாகியிருக்கு. கட்சிக்காரங்க என்ற முறையில ஏதாவது ஒரு உதவி செஞ்சிருக்கீங்களா. அவர் (அண்ணன்) கூட உறவாக இருக்கீங்க. எதுக்காக இருக்கீங்க. 

 

பகுதி செயலாளர் யார்? தலைவர்ன்னா நீங்க. உங்களுக்கு கீழ இருக்கிறவங்க தவறு செய்யுறாங்க. தனது சொந்த தம்பியையே சொத்துக்காக தாக்குகிறார்கள். அதற்குத் துணை போறீங்க. எல்லாமே பணத்துக்காக. நீங்களும் பணத்தை வாங்கிக்கிட்டுத்தான் பண்ணுறீங்களா? எங்களோட காயத்துக்கும், எங்களோட நிலைமைக்கும் நீங்களும் காரணமுன்னு சொல்லாம சொல்றீங்க. அவ்வளவுதானே. 

 

ddd

 

உங்ககிட்ட நேரடியாக வந்துகூட சொல்ல முடியலன்னா. அங்கேயும் என்னையும், என் மனைவி, குழந்தைகளை ஆள் வைத்து அடிப்பார்கள். எங்கள் உயிருக்கு கேரண்டி கிடையாது. எந்த தைரியத்துல உங்க ஆஃபீசுக்கு வர முடியும். ஃபோனில் பேசுவது மரியாதைக்குறைவுன்னு நினைச்சீங்கன்னா, நேரில் வர்றேன். பாதுகாப்பு தருவீங்களா?

 

கிருஷ்ணமூர்த்தி எதிரி கிடையாதுன்னா. உங்கள மாதிரி மேல இருக்கிறவங்க கொடுக்குற இடம்தாண்ணா. கிருஷ்ணமூர்த்தி எங்கப் பணத்தையும், எங்கள் உரிமையும் வாங்கிக் வைத்திருக்கிறார். இதனை வாங்கித்தர வேண்டிய இடத்தில் நீதித்துறை இருக்கிறது. ஆனால் காவல்துறைக்கு காசுகொடுத்து இவ்வளவு ஆட்டம் போடுகிறார். உங்களுக்கும் காசு கொடுத்து உங்கள் வாயையும் அடைக்கிறார். நீங்கள் எல்லோரும் அவருக்குத் துணை போவீங்க, நாங்க மட்டும் கட்சிக்கு ஓட்டுப்போட்டு காலம் காலமாக ஏமாந்து போகணும். நீங்க மேல மேல போகணும். நாங்க நஷ்டப்படணும். 

 

Ad

 

எம்.எல்.ஏ சீட்டு வேணுமுன்னு கேட்கிறீங்க. ஒரு கட்சிக்காரனை காப்பாத்த முடியல, அப்புறம் எப்படி பொதுமக்களோட பிரச்சனையைத் தீர்ப்பீங்க. நான் இதுவரை உங்களை மரியாதை குறைவா பேசியிருப்பேனா, ஃபேஸ்புக்கில் பாருங்கள் எதுவானாலும் நான் உங்களுக்கு லைக் போடுவேன். விட்டுக்கொடுத்திருப்பேனா. பாராட்டுவேன். நீங்கள் எம்எல்ஏவா வர வேண்டும் என்று பாராட்டியிருக்கிறேன். காசு பணம் வேண்டும் என்பதற்காக எங்களைப்போன்ற விசுவாசிகளை தூக்கிப்போடுறீங்க. துரோகிகளைக் கூட வைச்சிருக்கீங்க.

 

நீங்க பகுதி செயலாளர், கிருஷ்ணமூர்த்தி வட்டச் செயலாளர். அவர் பணத்தை ஏமாற்றி வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நியாயம்தான் ஜெயிக்கும், பணம் ஜெயிக்கும் என்று நினைக்காதீர்கள். பணம் ஒரு நாள் கரையும். கிருஷ்ணமூர்த்தி ஒரு நாள் உங்களுக்கு எதிராகவே திரும்புவார். எங்களைக் காயப்படுத்தி ரசிக்கிறிங்கள்ள, எல்லாத்துக்கும் அனுபவிப்பீங்க" என ஆடியோவில் கதறுகிறார்...

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

நாயைக் குளிப்பாட்ட சென்ற அக்கா, தம்பிக்கு நேர்ந்த துயரம்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Both sister and brother drowned in lake while going to bathe their dog

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கொத்தகோட்டை, புளியந்தோப்பு வட்டம் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளிகள் முருகன்- மாலதி தம்பதியினர். ஜோதிலிங்கம் (10) ஜோதிகா (8), ஜோதிஷ் (7) ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அதே பகுதியில் ஒரு குடிசை வீட்டில் வசித்து வந்த நிலையில்  கொத்தகோட்டை அரசு துவக்கப்பள்ளியில் படித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் பள்ளி விடுமுறை என்பதால் ஜோதிகா மற்றும் ஜோதிஷ் ஆகிய இருவரும் வீட்டின் அருகே உள்ள எறாகுட்டை ஏரியில் தங்களது வீட்டில் வளர்த்து வந்த நாயை குளிப்பாட்ட கொண்டு சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக  ஏரியில் தவறி விழுந்து அக்கா ஜோதிகா(8) தம்பி ஜோதிஸ் (7) ஆகிய இருவரும் நீரில் மூழ்கியுள்ளனர். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் சிலர்  நீரில் மூழ்கிய இருவரையும் நீண்ட நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த வாணியம்பாடி கிராமிய போலிசார் ஏரியில் மூழ்கி உயிரிழந்த இரண்டு சிறுவர்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

இது தொடர்பாக உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில்: தாங்கள் இருவரும் மூன்று குழந்தைகளுடன் குடிசை வீட்டில் வசித்து கூலி வேலை செய்து வருகிறோம். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு அந்த குடிசை வீட்டையும் பக்கத்து வீட்டுக்காரர் எரித்து விட்டார். அப்போது வீட்டில் இருந்த குழந்தைகளின் சாதி சான்று மற்றும் ஆதார் அட்டை உள்ளிட்ட பல்வேறு ஆவணங்கள் எரிந்து விட்டது. துறை சார்ந்த அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது வரை குடிசை வீடும் இல்லாமல் ஆங்காங்கே வீதியிலும், கோயில் இடங்களிலும் மூன்று குழந்தைகளை வைத்து வசித்து வருவதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.