Skip to main content

தி.மு.க.வில் இணைந்த 300க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் (படங்கள்)

Published on 11/02/2021 | Edited on 11/02/2021

 

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று (11.2.2021), காலை, அண்ணா அறிவாலயத்தில், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன் - கழக சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின் ஆகியோர் ஏற்பாட்டில், ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்ட இணைச் செயலாளர் எஸ்.கார்த்திகேயன் தலைமையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட துணைச் செயலாளர் ஏ.சலீம்பாஷா, மாவட்ட வழக்கறிஞர் அணிச் செயலாளர் ஆர்.கோவிந்தராஜ், மாவட்ட விவசாய அணிச் செயலாளர் ஜே.விஜயகுமார், மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் எம்.சுபலட்சுமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரஜினிநாகராஜ், காவேரிபட்டிணம் ஒன்றிய இணைச் செயலாளர் ஏகேஜி.மணிகண்டன், காவேரிபட்டினம் நகர இணைச் செயலாளர் கே.காமராஜ், காவேரிபட்டினம் நகர இணைச் செயலாளர் பாரதிராஜா, கிருஷ்ணகிரி ஒன்றிய இணைச் செயலாளர் மோரனள்ளி, கிருஷ்ணகிரி நகர வர்த்தக அணிச் செயலாளர் ரியாஸ், ஊத்தங்கரை ஒன்றியச் செயலாளர் பழனி, பர்கூர் ஒன்றிய இணைச் செயலாளர் எச்.நிசார், ஒன்றிய துணைச் செயலாளர் ஏ.மார்க்கண்டேயன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர் எஸ்.ரியாஸ்கான், மத்தூர் ஒன்றியத்தைச் சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர்கள் வி.சீனிவாசன், வி.வடிவேலன், செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.கண்ணதாசன், எஸ்.சௌந்தர், விவசாய அணிச் செயலாளர் எம்.டி.என்.சின்னதம்பி, இளைஞர் அணி துணைச் செயலாளர் எம்.சரவணன், மகளிர் அணி இணைச் செயலாளர் ஆர்.மணிமாலா, துணைச் செயலாளர் வளர்மதி, செயற்குழு உறுப்பினர்கள் பேபி, தேவி உள்ளிட்ட 150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்களும்; 

 

தருமபுரி மாவட்டம், மாவட்ட இணைச் செயலாளர் பி.செந்தில்குமார் தலைமையில் அரூர் ஒன்றியச் செயலாளர் ரஜினிமாறன், மாவட்ட வர்த்தக அணி இணைச் செயலாளர் எஸ்.பாபு, மாவட்ட துணைச் செயலாளர் ஜி.ரஜினிகாந்த், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் பி.பானுமதி பெருமாள், மாவட்ட தகவல் தொழில்நுட்ப இணைச் செயலாளர் எம்.குமரபிரபு, வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பெருமாள், அரூர் ஒன்றிய இணைச் செயலாளர் ஏ.அல்லிமுத்து, அரூர் ஒன்றிய துணைச் செயலாளர்கள் எஸ்.கந்தவேல், குபேந்திரன், அரூர் ஒன்றிய இளைஞர் அணி இணைச் செயலாளர் எம்.கலையரசன், ஒன்றிய இளைஞர் அணி துணைச் செயலாளர்கள் ஹரிராம்,பிரபு, ஒன்றிய செயற்குழு உறுப்பினர்கள் சாதிக்பாட்ஷா, எம்.சரவணன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் சரவணன், ஒன்றிய விவசாய அணி இணைச் செயலாளர் குபேந்திரன், ஒன்றிய விவசாய துணைச் செயலாளர் ராஜேந்திரன், நகர பொறுப்பாளர்கள் செட்டி (எ) செந்தில், குமார், நகர செயற்குழு ஜி.வெங்கட்ராமன், நகர இளைஞர் அணி செயலாளர் டி.அஜித்குமார், நகர பொறுப்பாளர் பி.தளபதி, ஒன்றிய மகளிர் அணிச் செயலாளர் சாந்தி, ஒன்றிய மகளிர் அணி துணைச் செயலாளர் வேடியம்மாள் உள்ளிட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த  150க்கும் மேற்பட்ட ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் என 300க்கும் மேற்பட்டோர் தி.மு.க.வில் இணைந்தனர். 

 

அப்போது முதன்மைச் செயலாளர் கே.என். நேரு எம்.எல்.ஏ., துணைப் பொதுச்செயலாளர் ஆ.இராசா எம்.பி., தருமபுரி மாவட்டக் கழகப் பொறுப்பாளர் தடங்கம் பெ.சுப்ரமணி எம்.எல்.ஏ., சிறுபான்மை நலஉரிமை பிரிவு இணைச் செயலாளர் ஏ.ஜோசப் ஸ்டாலின், மாநில விவசாய அணி துணைத் தலைவர் தே.மதியழகன், ஆகியோர் உடனிருந்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.