Skip to main content

'மோடி மூன்றாவது முறை பிரதமர் ஆவார்' - பாஜக துணை தலைவர் பேட்டி

Published on 08/06/2023 | Edited on 08/06/2023

 

nn

 

பிரதமர் நரேந்திர மோடி அடுத்த ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பிரதமர் ஆவார் என்று பாஜக துணைத் தலைவர் எஸ்.கனகசபாபதி நம்பிக்கை தெரிவித்தார்.

 

மோடி அரசின் 9 ஆண்டு சாதனை விளக்க செய்தியாளர் சந்திப்பு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. அப்போது அவர் கூறியதாவது, "எதிர்க்கட்சிகள் இடையே ஒற்றுமை இல்லை. ராகுல் காந்தி பல்வேறு இடங்களில் பல்வேறு விதமாக பேசுகிறார். வெளிநாடுகளில் நமது நாட்டுக்கு எதிராகவே பேசுகிறார். பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து கர்நாடகாவில் வெற்றி பெற்றார். அவரை பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கியது நீதிமன்றம் தான். அவரது பேச்சை மக்கள் நம்ப தயாராக இல்லை. கர்நாடகாவில் பெண்களுக்கு இலவச பயணம் என்று கூறினார்கள். அது வறுமைக் கோட்டில் இருக்கும் பெண்களுக்கா அனைத்து பெண்களுக்கா என்று தெளிவுபடுத்தப்படவில்லை.

 

மாதந்தோறும் 200 யூனிட் இலவசம் மின்சாரம் என்றார்கள். இன்று யூனிட் கட்டணம் ரூபாய் 2.65 உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அவரது வாக்குறுதிகளை மக்கள் நம்பத் தயாராக இல்லை. பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் தனிநபர் வருமானம், தேசிய மொத்த உற்பத்தி உயர்ந்துள்ளது. கருப்பு பணம் குறைந்துள்ளது. வெளிநாடுகளில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது. பிரதமர் எங்கே சென்றாலும் தமிழை உயர்த்திப் பேசுகிறார். நாடாளுமன்றத்தில் தமிழரின் பெருமையை உயர்த்த செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. நமது பண்டைய கலாச்சாரம், பாரம்பரியம் போற்றப்படுகிறது. அயோத்தி ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. காசி கோவில் புனரமைக்கப்பட்டுள்ளது.

 

உலகில் நடைபெறும் மொத்த டிஜிட்டல் பரிவர்த்தனையில் 40% இந்தியாவில் நடைபெறுகிறது. தொழில்நுட்ப வளர்ச்சியில் இந்தியா உயர்ந்துள்ளது. தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்தியாவை காப்போம் என்கிறார். ஆனால் ஊழல் நிறைந்த திராவிட மாடல் ஆட்சியில் இருந்து நாங்கள் தமிழகத்தை காப்போம் என்கிறோம். சமீபத்தில் கூட 25 பேர் விஷச் சாராயம் அருந்தி இறந்துவிட்டனர். ஆனால் முதலமைச்சர் துறை அமைச்சரிடம் அதுபற்றி விளக்கம் கேட்கவில்லை. மாறாக துறை அமைச்சர் சம்பந்தப்பட்டவர்கள் வீட்டில் வருமான வரித்துறை சோதனையை கண்டிக்கிறார். தமிழகத்தில் கஞ்சா கலாச்சாரம் பெருகிவிட்டது. நேற்று முன்தினம் கூட விஷ்ணு பிரியா என்ற மாணவி தந்தையின் மது பழக்கத்தை கண்டித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். பள்ளி, கல்லூரி அருகே கஞ்சா கிடைக்கிறது. சட்டவிரோத மதுபானக் கடைகள் இயங்குகின்றன. மேகதாது அணை திட்டத்தை தமிழக பாஜக எதிர்க்கிறது" இவ்வாறு அவர் கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.