Skip to main content

உயிரை பாதுகாக்க ஒரே ஒரு தடி இருந்தது. அதனை எடப்பாடியும், நானும் வைத்துக்கொண்டு... தங்கமணி பேச்சு...

Published on 27/11/2019 | Edited on 27/11/2019

 

அதிமுக பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி கலந்துகொண்டு பேசினார். 
 

அப்போது, இரண்டு வெற்றிக்குப் பிறகு இந்தக் பொதுக்குழுக் கூட்டம் நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில்தான் அதிமுக என்பதை உறுதி செய்து அதற்கு பிறகு நடக்கும் கூட்டம். ஒரு வாரம்தான், ஒரு மாதம்தான் இந்த ஆட்சி இருக்கும் என்று சொல்லி வந்தார்கள். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு பின்னர் நடக்கும் கூட்டம். நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் அனைவரும் திரும்பி பார்க்கின்றனர். 2021லும் அதிமுக ஆட்சி என்பதை அந்த வெற்றி சொல்கிறது. 

 

minister


 

ஏதோ ஒரு அதிசயத்தில் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்துவிட்டார் என்று சொல்கிறார்கள். இந்த இயக்கத்திற்காக அவர் உழைத்த உழைப்பு என்ன என்பதை கோடிட்டு காட்ட விரும்புகிறேன். திருமங்கலம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. சேலம் புறநகர் மாவட்டத்திற்கும், நாமக்கல் மாவட்டத்திற்கும் பூத்தை ஒதுக்கியிருந்தார் ஜெயலலிதா. இருவரும் ஒன்றாகத்தான் தேர்தல் பணியாற்றினோம். மேலஉரப்பனூர், கீழ்உரப்பனூர், ஊராண்ட உருப்பனூர் பகுதிகளை ஒதுக்கியிருந்தார்கள். நாங்கள் இருவரும் 20 நாட்கள் ஒரு வீட்டில் ஒரே ஒரு அறை எடுத்து தங்கியிருந்து தேர்தல் பணிகளை பார்த்தோம். 
 

அந்த அறையில் பாய்தான் இருக்கும். அந்த பாயில்தான் படுப்போம். பத்து நாள் இருக்கும், திடீரென இரவு இரண்டு மணி இருக்கும், திமுககாரர்கள் சத்தம்போட்டுக் கொண்டு மேலே வருவதை பார்த்த எடப்பாடியார், மணி நாம் உயிரை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்றார். பின்னர் நாங்கள் தவழ்ந்து சென்று ஜன்னல் வழியாக பார்த்தோம். 10 பேர் வந்துகொண்டிருக்கிறார்கள். இருப்பது ஒரே அறை, ஒரே கேட்டுதான் இருக்கிறது. தங்களை பாதுகாக்க என்ன இருக்கிறது என்றால் அந்த அறையில் ஒரே ஒரு தடிதான் இருந்தது. அதனை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தோம். விடிய விடிய உயிரை பணயம் வைத்து அன்றைய தினம் தேர்தல் பணியாற்றியவர்தான் எடப்பாடியார். 


 

ஜெயலலிதாவுக்கு பிறகு இந்த இயக்கத்திற்கு பாதுகாப்பு இருக்குமா. தொண்டர்களுக்கு பாதுகாப்பு இருக்குமா என்று நினைத்தவர்களுக்கு மத்தியில் இன்றைய தினம் நாம் வேட்டியை தைரியமாக கட்டி செல்கிறோம் என்றால் அதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியும்தான். 


 

திடீரென முதலமைச்சரானார். அதிசயம் என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஒரு புறம் எதிரி, இன்னொரு புறம் துரோகி என்பதை சமாளித்து அதற்கு மேலாக இந்த மூன்று ஆண்டு காலத்தில் இந்த ஆட்சியை எப்படியாவது வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று போராட்டங்கள் அதிகமாக நடந்தன. அனைத்தையும் நிர்வாகத் திறமை, ஆளுமை திறமை காரணமாக முறியடித்து காட்டியுள்ளார் எடப்பாடியார். இவ்வாறு பேசினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.