Skip to main content

“ஓபிஎஸ் வசதியாக மறந்துவிட்டார்” - அமைச்சர் ஆர். காந்தி குற்றச்சாட்டு

Published on 29/01/2023 | Edited on 29/01/2023

 

Minister R. Gandhi's response to OPS comment

 

பொங்கலுக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது குறித்து அதிமுக ஆட்சியில் நடந்ததை ஓபிஎஸ் மறந்தது கண்டனத்திற்கு உரியது என அமைச்சர் ஆர்.காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

 

பொங்கல் திருநாளை ஒட்டி மக்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கவில்லை என முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்திருந்தார். இது குறித்து அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், “பொங்கல் பண்டிகை முடிந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வேட்டி சேலை வழங்கப்படுமா என்கிற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டுள்ளது. இதை தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமை உணர்வும் அரசுக்கு உள்ளது. எனவே முதல்வர் உடனடியாக இதில் தலையிட்டு இந்த ஆண்டுக்கான இலவச வேட்டி சேலைகளை ரேஷன் கடைகள் வழியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வரும் காலங்களில் பொங்கல் பண்டிகைக்கு முன்பே வேட்டி சேலைகள் பொது மக்களுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” எனக் கூறியிருந்தார்.

 

இந்நிலையில் இதுகுறித்து  கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி சேலை வழங்குவது தொடர்பாக 488 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.  1.77 கோடி சேலைகள் 1.77 கோடி வேட்டிகள் உற்பத்தி செய்ய பட்டியல் பெறப்பட்டு அதன் அடிப்படையில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு உற்பத்தி திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 

 

கோ-ஆஃப்டெக்ஸ் மற்றும் கைத்தறி வளர்ச்சி கழக நிறுவனங்கள் முகமை நிறுவனங்களாக நியமிக்கப்பட்டு கடந்த ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முதல் கொள்முதல் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு முன்பே கடந்த ஒன்பதாம் தேதி அன்று சென்னை மயிலாப்பூர் சத்யா நகரில் பயனாளிகளுக்கு வேட்டி சேலை வழங்கும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். இந்த பணி பிப்ரவரி மாதத்தில் நிறைவு பெறும். அதிமுக ஆட்சியில் 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பல மாதங்கள் கழித்து இலவச வேட்டி சேலைகள் மக்களுக்கு வழங்கப்பட்டது.

 

இவ்வாறு, பொங்கல் பண்டிகைக்கு பின்னர் பல மாதங்கள் கழித்து அ.இ.அ.தி.மு.க ஆட்சியில் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டதை ஏனோ ஓ.பன்னீர்செல்வம் வசதியாக மறந்துவிட்டார். வேட்டி சேலை விநியோக திட்டம் இவ்வாறு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருப்பதை பொறுக்க முடியாமல் உண்மைக்கு மாறான தகவலை அறிக்கையாக வெளியிடுவது கண்டனத்திற்குரியது.” எனத் தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.