Skip to main content

"போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க தனி ஆணையத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர்" - அமைச்சர் பொன்முடி

Published on 15/05/2023 | Edited on 15/05/2023

 

minister ponmudi talks about illegal liquor incident marakkanam chengalpattu 

 

மரக்காணம், செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்த பத்துக்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மரக்காணம் அருகே உள்ள எக்கியர் குப்பத்தில் மட்டும் இதுவரை 9 பேர் இறந்துள்ளனர். இதில் பாதிக்கப்பட்டு 15க்கும் மேற்பட்டவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூற அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.எல்.ஏக்கள் புகழேந்தி, லட்சுமணன் மாவட்ட ஆட்சியர் பழனி, வடக்கு மண்டல ஐ.ஜி கண்ணன், எஸ்.பி ஸ்ரீநாதா மற்றும் காவல்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சென்றனர்.

 

சிகிச்சை பெற்று வந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறிய அமைச்சர்கள் மருத்துவமனையை விட்டு வெளியே வந்ததும், அமைச்சர் பொன்முடி பத்திரிகை மற்றும் ஊடகத்தினரிடம் பேசும் போது, "குட்கா, கஞ்சா, கள்ளச்சாராயம் போன்ற போதைப் பொருட்கள் தமிழ்நாட்டில் அதிகரிக்கக் காரணம் கடந்த பத்து ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுகதான். இதைக் கட்டுப்படுத்த அவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் கட்சிக்காரர்களை ஊக்கப்படுத்தி விற்பனை செய்ய வைத்ததே அவர்கள் தான்.

 

கடந்த இரண்டு ஆண்டுக் கால ஆட்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்  கள்ளச்சாராயம், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருட்களை கட்டுப்படுத்த மற்றும் தடுக்க சிறப்பான நடவடிக்கை எடுத்து வருகிறார். போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க காவல்துறையில் தனி ஆணையத்தை உருவாக்கியுள்ளார் முதல்வர் ஸ்டாலின். கடந்த ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் மீது குட்கா வழக்கு பதிவு செய்யப்பட்டு 10 எம்.எல்.ஏக்கள் மீது சட்டசபையில் நடவடிக்கை எடுத்தது கடந்த கால ஆட்சியில் தான். கள்ளச்சாராயம் விற்பனை பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு எந்த தகுதியும் அருகதையும் கிடையாது.

 

கடந்த ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் தான் டாஸ்மாக் மூலம் அரசே மது விற்பனை செய்யும் என அறிவித்து நடைமுறைப்படுத்தினார்கள். அதற்கு சட்டசபையில் நான் எதிர்ப்பு தெரிவித்தேன். இதற்காக என் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டது. இப்படி தமிழகத்தில் சீர்கேடுகள் அதிகரிக்கக் காரணமானது அதிமுக ஆட்சி தான்" என்று குற்றம் சாட்டினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

வரிசையில் நின்று வாக்கினை செலுத்தினார் முதல்வர் ஸ்டாலின்!

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
Chief Minister Stalin stood in line and cast his vote!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு  பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்துவருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.  அதன்படி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது மனைவியுடன் வந்த முதல்வர் ஸ்டாலின் வரிசையில் காத்திருந்து தனது ஜனநாயக கடமையாற்றினார். அவரைத் தொடர்ந்து அவரது மனைவி துர்கா ஸ்டாலினும் தனது வாக்கினை செலுத்தினார்.