Skip to main content

“குழந்தை திருமணம் நடைபெற்றதை ஆளுநர் ஒப்புக்கொள்வதாகத்தானே அர்த்தம்” - அமைச்சர் பொன்முடி

Published on 10/05/2023 | Edited on 10/05/2023

 

Minister Ponmudi question to the Governor rn ravi on the issue of child marriage  Dikshitars

 

“இரு விரல் சோதனை நடைபெற்றதாக ஆளுநர் கூறினால் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது என்பதை ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம்” என அமைச்சர் பொன்முடி கூறியிருக்கிறார். 

 

சிதம்பரத்தில் திமுகவின் இரண்டு ஆண்டு சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு திமுக நகர செயலாளரும் நகர்மன்றத் தலைவருமான செந்தில்குமார் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்துகொண்டு திமுகவின் இரண்டு ஆண்டு சாதனைகள் குறித்துப் பேசினார்.

 

அவர் பேசும்பொழுது, “மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கக் கூடிய வகையில் ‘நான் முதல்வன்’ திட்டத்தை தமிழக முதல்வர் நடைமுறைப்படுத்தியுள்ளார். அதேபோல் திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகள் 80 சதவீதம் இரண்டு ஆண்டுகளில் நிறைவேற்றப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகள் மகளிருக்கு ஆயிரம் ரூபாய் தரவில்லை என ஒரு பிரச்சனையை தொடர்ந்து எழுப்பி பெண்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி வந்தனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரில் தமிழகத்தில் ஒரு கோடி பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார். அது வரும் செப்டம்பர் 1-ந் தேதியிலிருந்து வழங்கப்படும். இதுபோல எண்ணற்ற திட்டங்களை தமிழக மக்களுக்கு சொன்னதையும் சொல்லாததையும் தமிழக முதல்வர் செய்து வருகிறார்.

 

தமிழக ஆளுநர் தமிழகத்தில் சட்ட ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது என்றும், அதற்கு உதாரணம் சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சதர்ர்களின் குழந்தைகளுக்கு இரட்டை விரல் சோதனை நடைபெற்றதாகவும் கூறியுள்ளார். தமிழக ஆளுநர் இரட்டை விரல் சோதனை நடைபெற்றது என்று ஒப்புக் கொண்டுள்ளார் என்றால் குழந்தை திருமணம் நடைபெற்றுள்ளது என்று அவர் ஒப்புக் கொள்கிறார் என்று தானே அர்த்தம். தமிழக அரசு பிராமணர்களுக்கு எதிரானவர்கள் அல்ல. திமுகவிலும் அதிக பிராமணர்கள் உள்ளார்கள்.

 

சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் தொடர்ந்து குழந்தை திருமணங்களை நடத்தி வருகிறார்கள் என்ற புகார் தமிழக அரசுக்கு வந்ததையொட்டி அதனை தடுக்கும் விதமாக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேபோல் அனைத்து தரப்பிலும் குழந்தை திருமணம் நடைபெற்றதையொட்டி அவர்களுக்கும் இதே போல் குழந்தை திருமண சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், தீட்சிதர்களுக்கு மட்டும் நடந்தால் ஆளுநர் இதுபோன்று பேசுகிறார், கொதித்து எழுகிறார். மற்ற சமூகங்களில் குழந்தை திருமணம் நடவடிக்கைக்கு அவர் வாய் திறக்காதது ஏன்?” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு; ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து!

Published on 25/03/2024 | Edited on 25/03/2024
Class 10 Public Examination Governor R.N. Congratulations Ravi

தமிழ்நாட்டில் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நாளை (26.03.2024) தொடங்கி ஏப்ரல் 8 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 4,107 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள், தனித் தேர்வர்கள், சிறைக் கைதிகள் என மொத்தம் 9.38 லட்சம் பேர் தேர்வு எழுதுகின்றனர். முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்கள் தேர்வு நடைபெறவுள்ளது. செல்போன், உள்ளிட்ட மின்னணு சாதனப் பொருட்களைத் தேர்வு அறைக்குள் கொண்டு செல்லக் கூடாது என்று ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. முறைகேடுகளைத் தவிர்க்க மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பொதுத் தேர்வு தேர்வு முடிவுகள் மே 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.

இதனையொட்டி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், நடிகரும் த.வெ.க வின் தலைவருமான விஜய் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இது குறித்து ஆளுநர் மாளிகையின் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாளை பத்தாம் வகுப்புத் தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள். அன்புள்ள மாணவர்களே, தேர்வுகளை தன்னம்பிக்கையுடன் அணுகுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

தேர்வு மையங்களுக்கு முன்னதாகவே அடைந்து, வினாத்தாள்களை கவனமாகப் படித்துவிட்டு, எளிதான கேள்விகளுக்கு பதிலளிப்பதை முதலில் தொடங்குங்கள். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள். சில கேள்விகள் சவாலாகத் தோன்றினால் பீதி அடைய வேண்டாம். பதில்கள் பெரும்பாலும் மனம் அமைதி அடையும் போது ஞாபகத்துக்கு வரும். அன்பான பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களே, இந்த நேரத்தில் உங்கள் விலைமதிப்பற்ற உணர்ச்சிப்பூர்வமான ஆதரவு மற்றும் வழிகாட்டுதல் நமது மாணவர்களுக்கு மிகவும் முக்கியமானவை” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

'ஆளுநருக்கு என் மீது பாசம் அதிகம்'-அமைச்சர் பொன்முடி பேச்சு

Published on 24/03/2024 | Edited on 24/03/2024
 'Governor has a lot of affection for me' - Minister Ponmudi's speech

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடியின் தண்டனை உச்சநீதிமன்றத்தால் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு பிறகு ஆளுநர் அவருக்கு மீண்டும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இந்நிலையில் விழுப்புரம் கூட்டத்தில் பொன்முடி பேசுகையில், 'ஆளுநருக்கு என் மேல் ரொம்ப பிடிப்பு, பாசம் அதிகம். ஏனென்றால் என்னுடைய நண்பர்கள் எல்லாம் சொன்னதைப்போல நான் கொஞ்சம் சமத்துவக் கொள்கை, சமதர்மக் கொள்கை இதெல்லாம் கொஞ்சம் பேசுற ஆளு. மத்த அமைச்சர்களை விட நான் தான் அவரிடம் நேரடியாக எல்லாவற்றிலும் தொடர்புடையவன். அதனால் என் மேல அவருக்கு பாசம், பற்று, பிரியம் எல்லாம் இருந்தது. உச்சநீதிமன்றத்தை தீர்ப்பு வந்ததற்கு பிறகு சட்டமன்ற உறுப்பினராக என்னை டிசம்பர் 19ஆம் தேதியிலிருந்து சபாநாயகர் அறிவித்துவிட்டார். அதற்கு பிறகு மார்ச் மாதத்தில் உத்தரவு எல்லாம் வந்த பிறகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தை அவர் உடனடியாக பார்த்து நான் அமைச்சராக பொறுப்பேற்கிறேன் என்று சொல்லி இருந்தால் சரி. அதைதான் அரசியலமைப்புச் சட்டத்தின் படி ஆளுநர் செய்ய வேண்டும்.

உண்மையான நிர்வாகத்தை நடத்துபவர் முதல்வர். ஆளுநர் பெயருக்கு நிர்வாகத்தை நடத்துபவர். கவர்னர் என்ன ஓட்டு போட்டா வந்தார். ஒரு நியமனம் செய்யப்பட்ட ஒருவர் மாநில அரசாங்கம் எதை சொல்லுகிறதோ அதை செய்ய வேண்டியதுதான் அவருடைய பொறுப்பு. அதுதான் அரசியலமைப்பு சட்டம் சொல்லுவது. இன்றுகூட கேரளாவில் ஏழு அரசியலமைப்பு சட்டங்களுக்கு கையெழுத்து போடாமல் ஆளுநர் இருக்கிறார் என்று சொல்லி கேரளாவினுடைய முதல்வர் உச்சநீதிமன்றம் சென்று இருக்கிறார் என்று சொன்னால் இந்த ஆளுநர்களை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சி ஆளுகின்ற மாநிலங்களையெல்லாம் ஆட்டிப் பார்க்கலாம் என்று நினைக்கின்ற இந்த ஒன்றிய அரசை நீங்கள் தூக்கி எறிய வேண்டுமா வேண்டாமா? என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.