Skip to main content

“பா.ஜ.க.வின் ஒரே நாடு, ஒரே மொழி கொள்கை எடுபடாது” - அமைச்சர் ஐ.பெரியசாமி

Published on 17/12/2022 | Edited on 17/12/2022

 

minister i periyasamy said One countryone language policy of BJP will not be taken

 

தி.மு.க. முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தி.மு.க. சார்பாக பொதுக்கூட்டங்கள் நடைபெற்றது. தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு கம்பம் வடக்கு நகர செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். தெற்கு நகர செயலாளர் செல்வக்குமார் வரவேற்றார். மாநில தீர்மானக்குழு இணைச் செயலாளர் ஜெயக்குமார், மாநில கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பாண்டியன், மாநில தேர்தல் பணிக்குழு செயலாளர் செல்வேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், எம்.எல்.ஏ.வுமான கம்பம் இராமகிருஷ்ணன், ஆண்டிப்பட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராசன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினார்கள்.

 

இதனையடுத்து பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, “கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு அ.தி.மு.க. அரசு செய்த சாதனை என்னவென்றால் தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் முதியோர்களுக்கு வழங்கிய உதவித்தொகையை நிறுத்தியதுதான் சாதனை. சுமார் 7.5 லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகையை நிறுத்திய பெருமை முன்னாள் வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமாரையே சேரும். நான் கூட்டுறவுத்துறை அமைச்சராக பதவி ஏற்றவுடன் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களை உடனடியாக பதவி உயர்வு செய்ததால் அவர்கள் பணிசெய்யும் இடத்திற்கு புதிதாக ஆட்கள் நியமிக்க வேண்டிய நிலை வந்தது. இதன் மூலம் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பை பெறக் கூடிய சூழ்நிலை உருவானது. 

 

minister i periyasamy said One countryone language policy of BJP will not be taken

 

தேனி மாவட்டத்தை பொறுத்தவரை சுகாதாரம் மற்றும் ஊரக வளர்ச்சியில் நூறு சதவிகிதம் பணிகள் நடைபெற்று வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை அனைவரும் இலவசமாக கல்வி கற்க காரணமாக இருந்தவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர். கடந்த ஒரு வருடத்திற்குள் 1.25 லட்சம் பேருக்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இலவச மின்சாரத்திற்காக விவசாயிகள் மனு செய்துவிட்டு காத்திருந்த காலம் போய் விவசாயிகளை அழைத்து இலவச மின்சாரம் வழங்கியது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசுதான்.

 

அ.தி.மு.க. ஆட்சியின்போது பணம் கூடுதலாக கட்டிய விவசாயிகளுக்குத்தான் இலவச மின்சாரம் வழங்கினார்கள். ஆனால், தற்போது தமிழகத்தில் நடைபெற்று வரும் தளபதியாரின் ஆட்சியில் ஏழை எளிய விவசாயிகளுக்குத்தான் முதலில் இலவச மின்சாரம் என்ற நிலைமை உருவாகி உள்ளது. கிராமப்புற மாணவர்கள் கல்வி கற்கவும், பெண்கள் இலவசமாக பேருந்தில் சென்று வேலைக்கு செல்வதும் அதிகரித்து வருகிறது. இதன்மூலம் கிராமப்புற பெண்களின் வாழ்வாதாரம் உயர்ந்துள்ளது. தமிழ் மொழிக்காகவும், தமிழ் இனத்திற்காகவும் இன்று மட்டும் அல்ல என்றுமே குரல் கொடுக்கும் இயக்கமாக தி.மு.க. என்ற மாபெரும் இயக்கம் உள்ளது. தமிழனின் வீரம், பண்பு, கலாச்சாரம் அத்தனையையும் பாதுகாக்கும் இயக்கமாக தி.மு.க. உள்ளது. தமிழகத்தில் உள்ள அத்தனை இயக்கமும் விரைவில் தி.மு.க.வுடன் இணைந்து செயல்படும் நிலைமை உருவாகப் போகிறது. ஒன்றிய அரசு சொல்வது போல் ஒரே மொழி, ஒரே நாடு தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் சாத்தியப்படாது. இனி கிராம ஊராட்சிகளுக்கு அதிக அளவு நிதி உதவி வழங்கி கிராமங்களை முன்னேற்றப் பாதையில் அழைத்துச் செல்வது தான் எனது முதல் கடமையாகக் கருதி செயல்படுவேன்” என்று கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.