Skip to main content

கரோனாவிலும் கூட்டம்! சர்ச்சையில் தி.மலை மாவட்ட திமுக மற்றும் அதிமுக!!!

Published on 07/08/2020 | Edited on 07/08/2020

 

Tiruvannamalai

 

 

கரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அரசாங்கம் பொது நிகழ்ச்சிகள், அரசியல், சமய, மத நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் தடை விதித்துள்ளன. 5 பேருக்கு மேல் கூடக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளன. அந்த உத்தரவுகளை அரசு அமைப்புகளே மீறி வருகின்றன. மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதற்கு பொதுமக்களை வரவழைக்கும் அதிகாரிகள், அங்கே சமூக இடைவெளியை கடைபிடிக்க வைப்பதேயில்லை.

 

இதனைப் பார்த்து அரசியல் கட்சிகளும் விதிகளை மீறத் துவங்கியுள்ளன. திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவுக்கு புதிய மா.செ.வாக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் தினமும் தனது வீட்டுக்கு புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்கிற பெயரில் நூற்றுக்கணக்கானவர்களை வரவழைத்து கட்சியில் இணைத்துக்கொண்டுள்ளார்.

 

இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்ட திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தை சேர்ந்த மாவட்ட கவுன்சில் செயலாளரான இ.பி.மனோகரன் என்பவர் கரோனா நோய் தாக்கி, சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார். இது திமுகவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

இதுப்பற்றி நம்மிடம் பேசிய கட்சியினர் சிலர், மார்ச் மாதம் முதல் கரோனா நலத்திட்ட உதவிகள் செய்து மக்களிடையே நல்ல செல்வாக்கை பெற்றார் எங்கள் தெற்கு மா.செ வேலு எம்.எல்.ஏ. இப்போது கட்சியினரே அவர் மீது அதிருப்தியாக உள்ளனர். முன்பெல்லாம் கட்சி நிர்வாகிகள், அணி நிர்வாகிகள் உட்பட அனைவரையும் பாதுகாப்பாக இருங்கள். கூட்டமாக இருக்கும் இடங்களுக்கு போகாதீர்கள் என எச்சரிக்கை விடுத்து வந்தவர் தற்போது அடிக்கடி கட்சி கூட்டம், அணி நிர்வாகிகள் கூட்டம், செயற்குழு கூட்டம் என கட்சி நிர்வாகிகளை கட்சி அலுவலகத்துக்கு வரவைக்கிறார்.

 

thiruvannamalai

 

 

கலைஞரின் நினைவு நாளை முன்னிட்டு கடந்த ஆகஸ்ட் 2ந் தேதி திருவண்ணாமலை வடக்கு மற்றும் தெற்கு மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகளை திருவண்ணாமலையில் உள்ள மாவட்ட கழக அலுவலகத்துக்கு வரவைத்து கூட்டம் நடத்தினார். கூட்டம் நடந்த இடத்தில் சமூக இடைவெளி பின்பற்றப்பட்டது, அதை மறுக்கவில்லை. ஆனால் கூட்டத்துக்கு வரும்போது கட்சி நிர்வாகிகள் கார்களில் 4 பேர், 5 பேர் என வந்தார்கள். அப்படி வந்தவர்களை தனி அறையில் ஒவ்வொருவரையும் தனித்தனியே சந்தித்து பேசிவிட்டு செல்லச் சொல்ல அதன்படி செய்தார்கள். இந்த கூட்டம் மட்டுமல்ல, இதற்கு முன்பு இப்படி சில கூட்டங்கள் நடந்துள்ளன.  

 

Tiruvannamalai

 


கட்சி தலைமையே அனைத்து கூட்டங்களையும் வீடியோ கான்பரன்ஸ் முறையில்தான் நடத்துகின்றன. பல மாவட்ட செயலாளர்களும் வீடியோ கான்பரன்ஸ் முறையில் தான் மாவட்ட கூட்டங்களை நடத்தினார்கள். ஆனால் இங்கு மட்டும் தான் நேரடி கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. இந்த கரோனா லாக்டவுனில் மட்டும் அதிகாரபூர்வமாக, அதிகாரபூர்வமற்ற முறையில் 10க்கும் அதிகமான கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.

 

இந்த கூட்டங்களை கட்சி அலுவலகத்தில் ஒருங்கிணைக்க சிலர் உண்டு. அவர்களில் ஒருவர் தான் இ.பி.மனோகரன். 59 வயதானவர், மின்சாரவாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர், மாவட்ட கட்சி அலுவலகத்தின் பணிகளை அதன் மேலாளரோடு சேர்ந்து செய்து வந்தார். அவருக்கு கரோனா வந்து இறந்துள்ளார். இது கட்சி அலுவலகத்துக்கு வந்த நிர்வாகிகள், தொண்டர்கள், அலுவலக பணியாளர்களுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அதுப்பற்றி அவர் கண்டுக்கொள்ளாமல் கூட்டங்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்.

 

அவருக்கு கரோனா வந்தால் நன்றாக சிகிச்சை பெற்று குணமாகும் அளவுக்கு பண வசதி உள்ளது, கூட்டத்துக்கு வரவைக்கும் மற்ற நிர்வாகிகள், தொண்டர்கள், ஊழியர்களுக்கு வந்தால், அப்படிப்பட்ட சிகிச்சை கிடைக்குமா என கேள்வி எழுப்பினர்.

 

திமுக, அதிமுக போன்ற பெரும் கட்சிகளின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். இன்று தொழில்நுட்பம் எவ்வளவோ வளர்ந்துவிட்டது. அதன் வழியாக கட்சி நிர்வாகிகளுக்கு, தொண்டர்களுக்கு உத்தரவுகள், ஆலோசனைகள் வழங்கலாம். அவர்களை பாதுகாப்பாக பணியாற்ற வையுங்கள். உங்கள் அரசியல் விளம்பரத்துக்காக தொண்டர்களை தொடர்ச்சியாக பலி கொடுக்காதீர்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

'சாதனைகளைச் சொல்லி வாக்கு கேட்டுள்ளோம்'-அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'We have asked for votes by telling achievements'- Minister Anbil Mahesh interviewed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட திமுக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி கிராப்பட்டி லிட்டில் பிளவர் மேல்நிலைப் பள்ளியில் வரிசையில் நின்று வாக்களித்தார். வாக்களித்த பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசுகையில், ''பொறுப்பாக மனிதன் வரவேண்டும் என்றாலும், பொறுப்புக்கு மனிதன் வரவேண்டும் என்று சொன்னாலும் பள்ளிக்கூடத்திற்கு வந்தே ஆக வேண்டும். நான் வேட்பாளராக வாக்களித்துள்ளேன். சட்டமன்ற உறுப்பினராக வாக்களித்துள்ளேன். இப்போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக பள்ளியில் வாக்களிப்பது புது அனுபவமாக உள்ளது. எங்கள் சாதனைகளை சொல்லி வாக்கு கேட்டுள்ளோம். பயனாளிகளான மக்கள் எங்களுக்கு ஆதரவு தருவார்கள். அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது''என்றார்.