Skip to main content

மலேஷியாவில் விசா பிரச்சனையால் தவிக்கும் தமிழக மக்களை மீட்க வேண்டும்: தமிமுன் அன்காரி 

Published on 03/05/2020 | Edited on 03/05/2020
thamimun ansari



மலேஷியாவில் விசா பிரச்சனையால் தவிக்கும் தமிழக மக்களை மீட்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நாகை எம்எல்ஏவும், மஜக பொதுச்செயலாளருமான தமிமுன் அன்சாரி கடிதம் எழுதியுள்ளார்.
 

அதில், ''வணிகம் மற்றும் சுற்றுலா நிமித்தமாக மலேஷியாவுக்கு குறுகிய கால பயணம் மேற்கொண்ட தமிழர்கள், திடீர் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு, விசா நீட்டிப்பும் பெற முடியாமல் உள்ளனர்.
 

அவர்களில் அநேகர் நாடு திரும்ப உரிய விசா மற்றும் விமான டிக்கெட் முன் பதிவு செய்திருந்தவர்கள் ஆவர். மலேஷிய காவல்துறையினர் அவர்களில் இருநூறுக்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.

 

அவர்களின் நிலையை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின்  கவனத்திற்கு எடுத்துச் சென்று, அவர்களை பாதுகாக்கவும், விமான சேவைகள் தொடங்கும் வரை பாதுகாப்பாக தங்க வைக்கவும், தமிழக அரசின் சார்பில் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அன்புடன் தங்களை கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அக்கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

இது குறித்து தலைமைச் செயலாளர் சண்முகத்திடமும், செல்போனில் இதுகுறித்து பேசி நிலைமையை விளக்கியுள்ளார் தமிமுன் அன்சாரி. மேலும், மலேஷியாவில் இருக்கும் 'கிம்மா' கட்சியின் தலைவர் டத்தோ செய்யது இப்ராகிம் அவர்களிடம் பேசி, அங்குள்ள தமிழக பயணிகளுக்கு உரிய சட்ட உதவிகளை செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
 

அங்கு மனித நேய கலாச்சாரப் பேரவையினர் மலேஷிய அமைச்சர் டத்தோ.சரவணனிடம் இது குறித்து முறையிட்டுள்ளனர். தற்போது அங்கு தங்கியிருக்கும் மஜக பொருளாளர் ஹாரூன் ரஷீது, அங்குள்ள தமிழக பயணிகளுடன் தொடர்பில் இருந்து ஒருங்கிணைத்து வருகிறார்.
 

அவர்களுக்கு தேவையான மனிதாபிமான உதவிகளை செய்து தமிமுன் அன்சாரி, அந்நாட்டின் தொழிலதிபர்களில் ஒருவரும், சமூக ஆர்வலருமான டத்தோ.அப்துல் அஜீஸ் (சுபைதா குழுமம்) அவர்களிடமும், பிரபல சமூக செயல்பாட்டாளர் திருவாட்டி. ஃபாத்திமா அவர்களிடமும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

வாக்கு சதவீதத்தில் முரண்; அறிவிப்பை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Discrepancy in vote percentage; Finally the Election Commission issued the notification

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, தமிழகத்தில் பதிவான வாக்கு சதவீதங்கள் குறித்த தகவல் நேற்று மாலை 7 மணிக்கு வெளியாகியிருந்த நிலையில் அதனைத் தொடர்ந்து இரவு 12 மணிக்கு வேறொரு வாக்கு சதவீத தகவல் வெளியாகி இருந்தது. தற்பொழுது வரை இறுதி வாக்குப்பதிவு சதவீதம் குறித்த தகவல் உறுதியாக தெரிவிக்கப்படவில்லை.

இது தொடர்பாக மதியம் 12 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி செய்தியாளர்களைச் சந்திப்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால் திடீரென அந்தச் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மாலை 3 மணி,  5 மணி எனத் தள்ளிப் போடப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது வரை நடக்காததால் பல்வேறு சந்தேகங்கள் எழுந்தது.

வாக்குப் பதிவுகள் முடிந்து 24 மணி நேரம் ஆன பிறகும் ஒட்டு மொத்த தேர்தல் வாக்குப்பதிவு சதவீதம் இன்னும் வெளியாகாதது சந்தேகத்தைக் கிளப்பிய நிலையில், தற்போது தமிழகத்தில் 69.46 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. 

அறிவிப்பின்படி அதிகபட்சமாக தர்மபுரியில் 81.48 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது. கள்ளக்குறிச்சி 79-25 சதவிகிதம்,  நாமக்கல் 78.16 சதவீதம், சேலம்-78.13 சதவீதம், திருவள்ளூர்-68.31 சதவீதம், வடசென்னை-60.13 சதவீதம், தென் சென்னை- 54.27  சதவீதம், மத்திய சென்னை-53.91 சதவீதம், ஸ்ரீபெரும்புதூர்-60.21 சதவீதம், காஞ்சிபுரம் -71.55 சதவீதம், அரக்கோணம்-74.08 சதவீதம், வேலூர்-73.42 சதவீதம், கிருஷ்ணகிரி-71.31 சதவீதம், திருவண்ணாமலை-73.88 சதவீதம், ஆரணி-75.65 சதவீதம், விழுப்புரம்-76 47 சதவீதம், ஈரோடு-70.54 சதவீதம், திருப்பூர்-70.58 சதவீதம், நீலகிரி-70.93 சதவீதம், கோவை-64.81 சதவீதம், பொள்ளாச்சி-70.70 சதவீதம், திண்டுக்கல்-70.99 சதவீதம், கரூர்- 78.61 சதவீதம், திருச்சி-67.45 சதவீதம், பெரம்பலூர்-77.37 சதவீதம், கடலூர்-72.28 சதவீதம், சிதம்பரம்-75.32 சதவீதம், மயிலாடுதுறை-70.06 சதவீதம், நாகை-71.55 சதவீதம், தஞ்சை-68.18 சதவீதம், மதுரை-61.92 சதவீதம், சிவகங்கை-63.94 சதவீதம், தேனி-69.87 சதவீதம், விருதுநகர்-70.17 சதவீதம், ராமநாதபுரம்-68.18 சதவீதம், தூத்துக்குடி-59.96 சதவீதம், தென்காசி-67.55 சதவீதம், திருநெல்வேலி-64.10 சதவீதம், கன்னியாகுமரி-65.46 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

அதேபோல் எந்தத் தொகுதியிலும் மறு வாக்குப் பதிவு இல்லை எனவும், தனிப்பட்ட தரவுகள் வர இருப்பதால் இது  இறுதியானது இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.