Skip to main content

“அவர் அலங்காரமாக இருந்தாலும் காலையில் தயிர் சாதம் தான் சாப்பிடுகிறார்” - தமிழிசை சவுந்தரராஜன்

Published on 03/12/2022 | Edited on 03/12/2022

 

lord venkateshwara only eats curd rice in the morning – Tamilisai Soundarrajan

 

தெலங்கானா மாநில ஆளுநர் ஸ்ரீமதி தமிழிசை சவுந்தரராஜன் சனிக்கிழமை திருமலையில் உள்ள வெங்கடேசபெருமானை தரிசனம் செய்தார். இதன் பின் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களைச் சந்தித்தார். 

 

அப்போது பேசிய அவர், “முக்கியமான நபர்கள் காலை 10 மணிக்கு வந்து 11 மணிக்குச் செல்வது நல்ல ஏற்பாடு எனவே நிர்வாகத்தை மிகவும் பாராட்டுகிறேன். இரவு முழுதும் மக்கள் காத்திருந்து கடவுளைத் தரிசிக்கும் சூழல் மாறி விடியற் காலையிலேயே அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் பொழுது மக்கள் மகிழ்ச்சியாக இருக்கின்றனர். இறைவனும் மகிழ்ச்சியாக உள்ளார்.

 

எளியோரைக் காண்பது தானே வெங்கடேஸ்வர பெருமாளுக்கு மகிழ்ச்சி. அவர் எவ்வளவு தான் அலங்காரமாக இருந்தாலும் காலையில் எளிமையான தயிர் சாதத்தைத்தானே சாப்பிடுகிறார். மாற்றுத்திறனாளிகள் எல்லோருக்கும் நல்ல வாய்ப்புகளை அரசாங்கம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அவர்கள் அனைவரும் தன்னம்பிக்கையோடு வாழ்க்கையில் முன்னேற வேண்டும்” என்றார்.

 

அதே போல் நேற்று தனியார் பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அவர் நிகழ்ச்சி முடிந்த பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “மூக்கு வழியாகச் செயல்படும் சொட்டு மருந்தை நாம் கண்டுபிடித்துள்ளோம். இது நமக்குப் பெருமை. ஆரம்ப காலத்தில் கொரோனா தடுப்பூசியை ஆரம்பிக்கும் பொழுது பல கட்சிகள் மத்திய அரசின் மீது விமர்சனம் வைத்தனர். தற்போது சீனாவில் கொரோனா மீண்டும் அதிகரிக்கிறது. 130 கோடி மக்களைக் கொண்ட நாடு பாதுகாப்பாக உள்ளது என்றால் அதற்கு நாம் எடுத்துக்கொண்ட தடுப்பூசிதான் காரணம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.