Skip to main content

“இதுவரை எத்தனை போதைப்பொருள் மாபியாக்களை பிடித்து இருக்கிறீர்கள்?” - காங்கிரஸ் எம்.பி. காட்டம்

Published on 22/12/2022 | Edited on 22/12/2022

 

lok sabha issue congress mp gaurav gogoi  versus amit  shah 

 

கடந்த ஆண்டு இந்தியா உட்பட உலகம் முழுவதும் உள்ள பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் என பலரது தொலைபேசிகள் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு, அவர்களின் பேச்சுகள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது.

 

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் போதைப்பொருள் குறித்த விவாதம் நேற்று நடைபெற்றது. இந்த விவாதத்தில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.பி கவுரவ் கோகாய் பேசும் போது, "இந்தியாவுக்குள் போதைப்பொருள் வருவதை தடுக்க நிலம் மற்றும் கடல் எல்லைகள் மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் என்னென்ன கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? இந்திய மியான்மர் எல்லையில் ஆயுதக் கடத்தல், ஆட்கடத்தல் மற்றும் வனவிலங்குகளின் உடல் பாகங்கள் கடத்தலை தடுக்க என்னென்ன கண்காணிப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறீர்கள்? மேலும், எங்களை மீண்டும் மீண்டும் உளவு பார்க்கிறீர்கள். எங்கள் செல்போன்களிலும் பத்திரிகையாளர்களின் செல்போன்களிலும் பெகாசஸ் மென்பொருள் பொருத்துகிறீர்கள். ஆனால், இதுவரைக்கும் எத்தனை போதைப்பொருள் மாபியாக்களை பிடித்து இருக்கிறீர்கள்?" எனக் கேள்வி எழுப்பினார்.

 

குறுக்கிட்டுப் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "தனது செல்போனில் பெகாசஸ் உளவு மென்பொருள் பொருத்தப்பட்டு இருப்பதாக கவுரவ் கோகாய் குற்றம் சாட்டி இருக்கிறார். அதற்கான ஆதாரத்தை அவர் மக்களவையில் சமர்ப்பிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டும். இது பொறுப்புடன் விவாதம் நடத்த வேண்டிய இடம். பொறுப்பற்ற அரசியல் செய்யும் இடம் அல்ல" என்று பேசினார்.

 

அப்போது கவுரவ் கோகாய் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை பார்த்து, "உளவு பார்க்க பெகசஸ் மென்பொருளை பயன்படுத்துகிறீர்களா? இல்லையா? என்று நான் கேட்டது தவறா என்று சபாநாயகர் கூற வேண்டும்" என்று கூறினார். இது குறித்து அமித்ஷா மீண்டும் குறுக்கிட்டுப் பேசும் போது, "தனது செல்போனில் பெகாசஸ் மென்பொருள் பொருத்தப்பட்டு இருப்பதாக சொல்கிறார். அதற்கு உண்டான ஆதாரத்தை காட்ட வேண்டும். இது போன்று அவர் பேசக்கூடாது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இது குறித்து தீர்ப்பளித்துவிட்டது. உங்கள் தலைவரை போலவே நீங்களும் படிப்பதில்லை என்றால் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது" என்றார்.

 

அப்போது பேசிய சபாநாயகர் ஓம் பிர்லா, " உறுப்பினர்கள் சபையில் பேசும்போது ஆதாரத்துடன் கருத்துகளை முன் வைத்தால் சபையின் கண்ணியம் அதிகரிக்கும்" என்று அறிவுறுத்தினார். 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

“பாஜக இன்ஸ்டன்ட் அரசியல் செய்கிறது” - அமைச்சர் உதயநிதி விமர்சனம்

Published on 01/11/2023 | Edited on 01/11/2023

 

  BJP does instant politics says Minister Udhayanidhi

 

அவதூறு பரப்பி நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறியில் பாஜக 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்வதாக அமைச்சர் உதயநிதி கடுமையாகச் சாடியுள்ளார்.

 

தேனி, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், மக்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இந்த நிலையில் மாவட்டங்களுக்குப் பயணம் மேற்கொண்டதை வைத்து ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு, அதில் பாஜக மற்றும் அதிமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநில மாநாட்டையொட்டி, இளைஞர் அணி செயல் வீரர்கள் கூட்டம் & கழக மூத்த முன்னோடிகளுக்கு, பொற்கிழி வழங்குகிற நிகழ்வு ஆகியவற்றில், தேனி - விருதுநகர் - நெல்லை - கன்னியாகுமரி மாவட்டங்களில் கடந்த வாரம் பங்கேற்றோம். செல்லும் இடமெல்லாம் கழக இளைஞர்களின் உற்சாகம், மூத்த முன்னோடிகளின் வாழ்த்து ஆகியவை ‘இன்ஸ்டன்ட் அரசியல்’ செய்யும் பா.ஜ.க.வும் ‘ஏமாற்று அரசியல்’ செய்யும் அ.தி.மு.க.வும் 2024 மக்களவைத் தேர்தலில் வீழப் போவதை உறுதி செய்தன. போலி அரசியலை வீழ்த்தி, மாநில உரிமையை உயர்த்திப் பிடிக்க அயராது உழைப்போம்.

 

குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைப்பதுதான் பா.ஜ.க.வின் அரசியல். அமைதியான தெளிந்த நீரோடை போல் உள்ள தமிழ்நாட்டில், அவர்களால் அரசியல் செய்ய முடியவில்லை. இந்தத் தெளிந்த நீரோடையை அவதூறு பேச்சு, சர்ச்சை, சாதி -மதத் துவேஷம் போன்ற அழுக்குகளைக் கொட்டி குழப்பிவிட்டு, பிறகு அரசியல் செய்ய நினைக்கிறது. ஆனால், பல சமயங்களில் அழுக்கைக் கொட்டும்போதே பிடிபட்டு அம்பலப்பட்டு விடுகிறது. ‘யாருக்கும் தெரியாமல் அழுக்கைக் கொட்டிவிட்டோம்' என்று நினைக்கையில், சி.சி.டி.வி காட்சிகள், சாட்சியங்களுடன் கையும் களவுமாகப் பிடிபட்டு முகமூடி கிழிக்கப்படுகிறது. தங்களின் செயல்பாடுகள் மூலம் மக்களின் மனங்களை வெல்வதுதானே சிறந்த அரசியலாக இருக்க முடியும். அந்தக் கொள்கைப் பயணத்தில் இளைஞர்களைக் கொள்கை ரீதியாக வளர்த்தெடுத்து, அவர்களைத் தலைவர்களாக உருவாக்கி, மக்கள் பிரதிநிதிகளாக உயர்த்தி, அவர்கள் மூலம் மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தி என அது ஒரு நீண்ட நெடிய பயணம்.

 

அதைத்தான் பெரியார் - அண்ணா - கலைஞர் போன்றோரெல்லாம் பின்பற்றிச் சமூக நீதி, மாநில சுயாட்சி அரசியலைக் கையிலெடுத்து தமிழ்நாட்டை வளர்த்தெடுத்தனர். அவர்களின் தொடர்ச்சியாகத்தான் நம் தலைவர் அவர்கள் இன்று கழகத்தையும் தமிழ்நாட்டையும் வழிநடத்தி வருகிறார். ஆனால், 'இன்ஸ்டன்ட் அரசியல்' செய்யும் பா.ஜ.க.விடம் அவ்வளவு பொறுமை இல்லை. இன்று அவதூறு பரப்பி நாளையே கோட்டைக்குள் சென்றுவிட வேண்டும் என்ற வெறி மட்டுமே அவர்களிடம் உள்ளது. இந்தப் போலி அரசியல் பயணத்தில் அங்கங்கு இருக்கும் சமூக விரோதிகளை எல்லாம் அள்ளிப் போட்டுக்கொண்டு, அரசியல் என்ற பெயரில், மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபட்டு வருகிறது. இப்படி உருவாக்கப்படும் இந்தப் பரபரப்புகளால் வரும் ஊடக வெளிச்சத்தைத் தன் மீது வாங்கிக்கொண்டு மறுபக்கம் அ.தி.மு.க.வைப் பாதுகாக்கவும் நினைக்கிறது. பா.ஜ.க. உடனான கூட்டணி முறிவு, தனித்துப் போட்டி போன்றவை அந்த நாடகத்தின் சில அத்தியாயங்கள் தான்” என்று 8 பக்கங்கள் கொண்ட நீண்ட அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

தெலங்கானாவில் அமித்ஷாவுக்கு எதிராக கருப்பு பலூன்

Published on 11/10/2023 | Edited on 11/10/2023

 

Black balloon for Amit Shah in Telangana

 

ஐந்து மாநிலத்திற்கான தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தேர்தல் பரபரப்பு தொடங்கியுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தங்களது பரப்புரையை தொடங்க தற்போது தெலங்கானாவிற்கு படையெடுத்து வருகின்றன. இந்நிலையில் தெலங்கானாவிற்கு தேர்தல் பரப்புரைக்காக வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் காரை, கருப்பு பலூன் காட்டி முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

 

தெலங்கானா மாநிலம் அடிலாபாத் பகுதியில், பாஜக சார்பில் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் வந்திருந்தார். அப்போது சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா ஊழியர்கள் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு எதிர்ப்பு பதாகைகளை காட்டி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். உடனடியாக அங்கிருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த  முயன்றனர். சிமெண்ட் கார்ப்பரேஷன் இந்தியா நிறுவனத்தை மூடும் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த எதிர்ப்பை அவர்கள் வெளிப்படுத்தினர். போலீசார் அவர்களை அகற்ற முயன்றதால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்