Skip to main content

கடைசி நேரத்தில் உளவுத்துறை எடப்பாடிக்கு கொடுத்த ரிப்போர்ட்! 

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

ஆளும்கட்சித் தரப்புக்கு இது தேர்தல் வெற்றித் தீபாவளி என்று அரசியல் வட்டாரங்களில் கூறிவருகின்றனர். இது பற்றி அரசியல் வட்டாரங்களில் விசாரித்த போது, இடைத்தேர்தல் என்றால் அதில் கிடைக்கும் வெற்றி எப்படிப்பட்ட வெற்றியாக இருக்கும் என்பது ஜெயித்தரவர்களுக்கும், ஜெயிக்க விட்டவங்களுக்கும் நன்றாக  தெரியும் என்கின்றனர். இடைத்தேர்தல் தொகுதிகளான நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய இரண்டிலும் கட்சிக்குதான் சாதகமான நிலை என்று உளவுத்துறை கடைசி நேரத்தில் முதல்வர் எடப்பாடிக்குக் கொடுத்த ரிப்போர்ட் பற்றி நக்கீரனில் முன்கூட்டியே கூறியிருந்தோம். அதே மாதிரி தான் ரிசல்ட்டும் வந்துள்ளது. வாக்குகளை எண்ண ஆரம்பித்ததும் முன்னணி நிலவரம் தங்களுக்கு சாதகமாக வந்தவுடன், உளவுத்துறை ஐ.ஜி.சத்தியமூர்த்தியைத் தொடர்பு கொண்டு சரியான ரிப்போர்ட்டு என்று மகிழ்ச்சியையும், நன்றியையும் முதல்வர் எடப்பாடி உற்சாகமாக தெரிவித்துள்ளதாக கூறுகின்றனர்.   

 

admk



அதே போல் ஆளும்கட்சித் தரப்புக்கு இது வெற்றித் தீபாவளி என்பதையும் தாண்டி கலெக்ஷன் தீபாவளியாவும் அமைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, சுகாதாரத்துறை என்று சகல துறைகளிலும் தீபாவளி கலெக்ஷனும், வெயிட்டான பங்கு பிரிப்புகளும் நடந்துள்ளதாக கூறுகின்றனர். குறிப்பாக உள்ளாட்சித் துறையில் அமைச்சரின் அன்-அபிஷியல் உதவியாளராக இருப்பவர் மூலம் ஒவ்வொரு நகராட்சியும் 25 ஆயிரம் ரொக்கம் மற்றும் 2 சவரன் கோல்ட் காயினைக் கொடுக்க வேண்டும் என்றும், மாநகராட்சிக்கு இதைவிடக் கூடுதலாக இருக்க வேண்டும் என்று கூறியதாக சொல்லப்படுகிறது. 


பேரூராட்சிகளுக்கு அதுக்கு தகுந்த மாதிரி அன்பளிப்பு இருக்க வேண்டும்  என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அதைக் கொண்டுவந்து கொடுக்க வேண்டும் என்று சென்னையில் இருந்து இன்ஷ்ஸ்ட்ரக்ஷன் போனதாக கூறுகின்றனர். பிறகு "நேரில் வரவேண்டாம். வரும் நபர்களிடம் கொடுக்கவும் அடுத்த தகவல் அனுப்பப்பட்டு, அதன்படி மெஹா வசூலும் விறுவிறுப்பாவே நடந்துள்ளதாக கூறுகின்றனர். இப்படி அனைத்து துறைகளிலும் அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இந்தத் தீபாவளி அமர்க்களமாக இருந்துள்ளதாக கூறுகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.