Skip to main content

பிரதமரின் கிசான் திட்டத்தில் ஊழல்... அ.தி.மு.க அரசுக்குத் தெரியாமல் நடந்திருக்க வாய்ப்பில்லை... நாடாளுமன்றத்தில் ஜோதிமணி எம்.பி பேச்சு!

Published on 15/09/2020 | Edited on 16/09/2020

 

kisan- farmers - subsidy - corruption - karur- mp - jothimani - request - central - cbi - enquiry

 

தமிழகத்தில் பிரதமரின் கிசான் சம்மான் திட்டத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. இது அரசியல் களத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. இதனால், முறைகேட்டில் தொடர்புடைய பல அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில், இந்த முறைகேடு குறித்து, இன்று (15-09-2020) கூடிய நாடாளுமன்ற மக்களவையில் கரூர் எம்.பி ஜோதிமணி பேசியுள்ளார்.

 

அதில், "தமிழகத்தில், விவசாயிகளுக்கான  பிரதம மந்திரி கிசான் திட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளது. லட்சகணக்கான தகுதியுள்ள விவசாயிகளுக்கு இந்த நிதி உதவி கிடைக்கவில்லை. ஆனால், 5 லட்சத்திற்கும் மேற்பட்ட போலி பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 

பெரும் பணக்காரர்கள் மற்றும் கார்ப்பரேட்டுகளின் பல்லாயிரம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்யும் இந்த அரசு, விவசாயிகளின் கடனைக் கூட தள்ளுபடி செய்யாமல், அவர்களை முற்றிலுமாகக் கைவிட்டுவிட்டது.

 

இச்சூழலில், விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ள இந்தச் சிறிய திட்டத்தைக் கூட முறையாக நடைமுறைப்படுத்தாமல் ஊழல் மலிந்துகிடப்பது, வேதனை அளிக்கிறது. ஊழலில், அதிகாரிகள் மட்டுமே பலிகடா ஆக்கப்படுகின்றனர்.

 

ஆளும் அ.தி.மு.க அரசுக்குத் தெரியாமல் இந்த ஊழல் நடந்திருக்க வாய்ப்பில்லை. மேலும், தமிழக பா.ஜ.க பல்வேறு அரசுத் திட்டங்களை பகிரங்கமாகவே கைப்பற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல.

 

அரசு திட்டங்கள், முறையாக எவ்வித அரசியல் தலையீடும் இல்லாமல், தகுதியுள்ள பயனாளிகளுக்கு வழங்கப்பட வேண்டும். அரசியல் குறுக்கீடுகள் இம்மாதிரியான ஊழலுக்கே வழிவகுக்கும். தமிழகத்தில் நடந்துள்ள இந்த மாபெரும் ஊழலை விசாரிக்க, உடனடியாக மத்திய அரசு சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்." இவ்வாறு பேசியுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்தியா கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் - ஜோதிமணி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
India Alliance will win all 40 constituencies says Jothimani

தமிழகத்தில் ஒரே கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தமிழகத்தில் கரூர் நாடாளுமன்ற  தொகுதியில் அதிக வேட்பாளராக 54 பேர் போட்டியிடுகின்றனர். ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் நான்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகின்றது.

கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதியிலும் 6,93,730 ஆண் வாக்காளர்களும்,7,35,970 பெண் வாக்காளர்கள், 90 இதர வாக்காளர்கள் என மொத்தம் 14,29,790 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் இந்நிலையில் இந்தியா கூட்டணி வேட்பாளர் ஜோதிமணி தனது சொந்த ஊரான பெரிய திருமங்கலம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களைச்  சந்தித்த ஜோதிமணி, “இந்தியா கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதியிலும் மகத்தான வெற்றி பெறும். இந்தியா முழுவதும் இந்தியா கூட்டணி 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று ராகுல் காந்தி பிரதமர் ஆவார். தமிழ்நாட்டில் பொற்கால ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார் மு.க.ஸ்டாலின். தமிழர்களின் உணர்வுகளும்,  உரிமைகளும் மீட்கப்பட வேண்டும். வளர்ச்சி பாதை நோக்கி பயணிக்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். இந்த தேர்தலில் செல்லுமிடமெல்லாம் எனக்கு மகத்தான  வரவேற்பை வழங்கியுள்ளனர். அது வாக்குகளாக மாறி வெற்றியை வழங்கும்”  எனக் கூறினார்.

Next Story

“இது மோடியின் வெட்கக்கேடான செயல்” - திருச்சி சிவா விமர்சனம்

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Trichy Siva critcized This is a shameful act by Modi

கரூர் மாவட்டம்,  கரூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும், காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியை ஆதரித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது பேசிய திருச்சி சிவா, “இந்தத் தேர்தலானது மிக முக்கியமான ஜனநாயகத் தேர்தல். மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் தேர்தல் நடைபெறுமா என்று சந்தேகம் உள்ளது. மதச்சார்பற்ற அனைவரும் சகோதரர்களாய் உள்ள நிலையில், மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால் ஒற்றை மதத்தைச் சார்ந்த ஆட்சியாக இருக்கும். ஜனநாயகமானது காணாமல் போய்விடும். கடந்த 2016ஆம் ஆண்டு 60 ரூபாய்க்கு விற்ற பெட்ரோல் தற்போது 100 ரூபாய்க்கு மேல் விற்று வருகிறது. மோடி ஆட்சிக் காலத்தில் 108 முறை பெட்ரோல், டீசல் கேஸ், விலையினை உயர்த்தியுள்ளது.

ஆண்டிற்கு இரண்டு கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தருவதாக பிரதமர் மோடி கூறினார். ஆனால் இதுவரை ஏதும் செய்யவில்லை. நான்கு கோடி இளைஞர்கள் வேலை வாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். 80 கோடி பேர் தினமும் ரேஷன் கடையில் வரிசையில் நின்று பொருள் வாங்குகிறார்கள். 22 கோடி பேர் இரவு உணவு இல்லாமல் உறங்குகிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்த நாடு என்று கூறிக்கொள்ளும் மோடியின் வெட்கக்கேடான செயல்.

விவசாயக் கடன், மாணவர்களுக்கான கல்விக் கடன்களை ரத்து செய்யாத மோடி அரசு, கார்ப்பரேட் பெரும் முதலாளிகளுக்கு பல்லாயிரக்கணக்கான கோடியினை தள்ளுபடி செய்திருக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சியை பிடிக்கும் போதும், விவசாயக் கடன் மற்றும் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும்” என்று கூறினார்.