Skip to main content

காவல்துறையால் தாக்கப்பட்ட காயல்பட்டினம் இளைஞருக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் -மு.தமிமுன் அன்சாரி

Published on 30/06/2020 | Edited on 30/06/2020

 

M.Thamimun Ansari

 

காவல்துறையால் தாக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் காயல்பட்டினம் இளைஞரின் முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் கொலை வெறித் தாக்குதலை நடத்திய காவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, பணி இடை நீக்கம் செய்ய வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளரும், நாகை எம்.எல்.ஏ.வுமான மு.தமிமுன் அன்சாரி கூறியுள்ளார்.

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தைச் சேர்ந்த ஹபீப் முஹம்மது (31) என்பவர் கடந்த ஜூன் 9 அன்று முகக்கவசம் அணியாமல் வந்ததாகவும், அப்போது காவலர்களுக்கும், அவருக்கும் இடையே  வாக்குவாதம் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

 

அதனைத் தொடர்ந்து ஹபீப் முஹம்மது ஆறுமுகநேரி காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டிருக்கிறார். அங்கு அவர் காவல்துறையினரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாக அவரின் இரண்டு சிறுநீரகமும் மிகவும் பாதிக்கப்பட்டு, திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தற்போது டயாலிஸஸ் கிசிச்சை பெற்று வருகிறார். அவர் மரணத்தை எதிர்நோக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது.

 

அவர் குற்றம் செய்திருப்பின் வழக்குப்பதிவு செய்வது தான் காவல் துறையின் கடமையாகும். அவர் மீது கொலைவெறித் தாக்குதலை நடத்தும் உரிமையைக் காவல்துறைக்கு சட்டம் வழங்கிடவில்லை. 

 

எனவே சட்டத்துக்குப் புறம்பாக இவர் மீது கொலை வெறித் தாக்குதலை நடத்திய காவலர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுத்து, பணி இடை நீக்கம் செய்வதோடு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரது முழுச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும் எனவும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

 

http://onelink.to/nknapp

 

ஊரடங்கை முன்னிட்டு காவல்துறையினர் பல இடங்களில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு வரும் செய்திகள் கவலையளிக்கிறது. இவ்விவகாரங்களில் தமிழக காவல் துறை இயக்குனரகம் உரிய கவனம் செலுத்தி சட்டத்தின் வழி செயல்பட்டு, மனித உரிமைகளைக் காத்திட முன் வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விபத்தில் சிக்கி உயிரிழந்த காவலரின் கண்கள் தானம்!

Published on 30/04/2024 | Edited on 30/04/2024
Eye donation of a policeman who passed away in a two-wheeler accident

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை, இவர் வாணியம்பாடி கிராமிய காவல்நிலையத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி 1 வயதில் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கடந்த 28  ஆம் தேதி இரவு அண்ணாமலை தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் நாட்றம்பள்ளி நோக்கிச்சென்று கொண்டிருந்த போது, கல்லாறு என்ற பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம், சாலையோர  தடுப்பு சுவரில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற காவலர் அண்ணாமலையும் மற்றும் அவரது நண்பரும் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

சிகிச்சை பலனளிக்காமல் அண்ணாமலை 29 ஆம் தேதி மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து காவலர் அண்ணாமலையின் கண்களை அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கினர்.

Next Story

“இப்படி ஆகும்னு நினைக்கல..”-உடைந்தே போனார் நிர்மலா தேவி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
"I didn't think it would happen like this.."- Nirmala Devi was devastated!

2018 ஏப்ரல் 5ஆம் தேதி முதன்முதலில் நிர்மலாதேவியைத் தொடர்புகொண்டு  ‘கல்லூரி மாணவிகளிடம் ஏன் இப்படி பேசினீர்கள்?’ என்று கேட்டபோது  “நான் மாணவிகளிடம் பேசிய ஆடியோ உங்க (நக்கீரன்) கைக்கு எப்படி வந்துச்சு? அந்த ஆடியோவைத் தந்தவர்கள் எதுவும் சொன்னார்களா? நான் ஏற்கெனவே போன்ல பேசி ஏதேதோ பிரச்சினைகள் ஆயிருச்சு. இது குறித்து போன்ல பேச வேண்டாமே.. நேரில் பேசலாமே!” என்று பதற்றத்துடன் பேசினார்.

அதன்பிறகு, செய்தி சம்பந்தமாக அவரிடமிருந்து விளக்கம் பெறுவதற்காக பல தடவை கைபேசி மூலம் பேசியிருக்கிறோம்.  சில நேரங்களில், நிர்மலாதேவி தனது சொந்த வருத்தங்களை நம்மிடம் பதிவு செய்திருக்கிறார். “உண்மையிலேயே நான் யார்? எப்படிப்பட்டவள்? என்னுடைய இன்னொரு பக்கம் பலருக்கும் தெரியாது.” என்று மனம் திறந்திருக்கிறார். அப்போது, தனக்கிருந்த சுற்றுச்சூழல் ஆர்வத்தையும்,  தாவரங்கள், மரங்கள்  குறித்த அக்கறையையும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

2024 ஏப்ரல் 29ஆம் தேதி குற்றவாளி எனத் தீர்ப்பு அறிவிப்பதற்கு முன், பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த நிர்மலாதேவியிடம் பேச்சுக் கொடுத்தோம். பழைய நினைவையும் பேச்சையும் அறவே மறந்திருந்த அவர், மிகவும் சன்னமான குரலில் “மாணவிகள்கிட்ட போன்ல பேசுனது இந்த அளவுக்கு சீரியஸா ஆகும்னு நான் நெனச்சே பார்க்கல. அந்தப் பேச்சுக்காக, இந்த நேரம் வரைக்கும் நான் கோர்ட்டுக்கு வந்துபோறது, ஜெயிலுக்குள்ள இருந்ததுன்னு எல்லாமே நடந்திருச்சு. இந்தச் சட்ட நடவடிக்கைகளை எல்லாம் அறியாதவளா அப்ப நான் இருந்திருக்கேன்.” என்று உடைந்துபோய் பேசியவரிடம்,  உடல்நலம் குறித்து விசாரித்தோம்.

“எனக்கு இருக்கிற உளவியல் பாதிப்பு முற்றிலுமா இன்னும் சரியாகல.” என்று சொன்னபோது  ‘நிர்மலாதேவி வகையறா..’ என்று நீதிமன்ற அரங்கத்திலிருந்து சத்தமாக அழைப்புவர, விறுவிறுவென்று உள்ளே சென்றுவிட்டார். இவ்வழக்கில் இரண்டாம் மற்றும் மூன்றாம் எதிரிகளான உதவிப் பேராசிரியர் முருகனுக்கும், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமிக்கும் விடுதலையை அறிவித்ததோடு,   நிர்மலாதேவி குற்றவாளி என்பதை ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றத்தின் நீதிபதி பகவதி அம்மாள்  உறுதி செய்துவிட்டு,  “கூண்டில்போய் நில்லுங்க..” என்று உத்தரவிட, நடை தளர்ந்து, சோகம் அப்பிய முகத்துடன் கூண்டில் ஏறி நின்றார் நிர்மலாதேவி. அப்போது ஒரு இளம் வழக்கறிஞர் “ஒருவர் என்ன படித்திருந்தால் என்ன? எவ்வளவு பெரிய பொறுப்பில் இருந்தால் என்ன? தெரிந்தே தவறிழைத்தால், சட்டத்தின் பார்வையில் அது குற்றமென்றால், தண்டனையிலிருந்து தப்பவே முடியாது.” என்று நம் காதில் விழும் அளவுக்கு கமெண்ட் அடித்தார்.