Skip to main content

உளவு சொன்ன கோழி செந்தில்..? கட்டம் கட்டிய செந்தில் பாலாஜி...

Published on 04/12/2019 | Edited on 04/12/2019
senthil



கரூர் மாவட்ட திமுகவில் வாசுகி முருகேசனுக்கு பிறகு கட்சியின் முக்கிய பொறுப்பில் இருந்தவர் நன்னீயூர் ராஜேந்திரன். இவருக்கு வலது கரமாகவும், உதவியாளராகவும் இருந்தவர் கோழி செந்தில். இவரை திமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மாநில செயலாளர் பிடிஆர். பழனிவேல் தியாகராஜன், தகவல் தொழில் நுட்ப அணியின் கரூர் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் பொறுப்பில் இருந்து விடுவித்துள்ளார். இது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த 15 நாட்களுக்கு முன்பு கட்சியின் உள்ளாட்சி தேர்தல் குறித்த அவசர ஆலோசனை கூட்டத்தில் கரூர் மாவட்ட பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கடுமையாக பேசின பேச்சு கட்சியினரிடையே பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

senthil


 

''நாம் எதிரியை கூட களத்தில் நேருக்கு நேர் சந்தித்து சண்டை போடலாம். ஆனால் கூடவே இருந்து எதிரிக்கு உளவு சொல்லும் துரோகியை நாம் விட்டு வைக்கவே கூடாது. அவர்கள் இந்த வேலைக்கு பதிலாக வேறு தொழில் செய்து பிழைத்துக்கொள்ளலாம். இடைத்தேர்தலில் நாம் நடத்திய அத்தனை ரகசிய கூட்டத்தையும் நம்முடைய தேர்தல் வெற்றிக்கு வகுத்த திட்டங்கள் அத்தனையையும் செல்போனில் ரகசியமாக வீடியோ எடுத்து எதிரிகளுக்கு அப்படியே அனுப்பியிருக்கிறார். இதை கண்டுபிடித்து விட்டேன். அவரை கட்சியை விட்டே நீக்க சொல்லி எழுதியிருக்கிறேன்'' என்றார். அதன் வெளிப்பாடு தான் கோழி செந்தில் நீக்கம் என்கிறார்கள்.
 

செந்தில்பாலாஜியின் இந்த பேச்சுக்கு பிறகு கோழி செந்தில் கட்சி அலுவலகம் பக்கம் வராமல் தவிர்த்து வந்திருக்கிறார். இந்த நிலையில் தான் இந்த விடுவிப்பு என்கிறார்கள்.

 

senthil


 

கோழி செந்தில் குறித்து நாம் விசாரித்தபோது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட பொறுப்பாளாக இருந்த நன்னீயூர் ராஜேந்திரனின் உதவியாளராக இருந்தார் கோழி செந்தில். கட்சியில் மாவட்ட செயலாளர் தேர்தல் நடந்தபோது, கரூர் சின்னசாமி அதற்கு போட்டியிட்டார். அப்போது, நன்னீயூர் ராஜேந்திரன் என்ன என்ன திட்டம் வகுக்கிறார் என்பதை அப்போதே ரகசியமாக உளவு பார்த்து கரூர் சின்னசாமிக்கு தகவல் சொல்லியவர்தான் கோழி செந்தில் என்கிறார்கள்.
 

கட்சியின் அலுவலகத்தை மதிய நேரங்களில் தவறான விசயங்களுக்கு பயன்படுத்தி கையும் களவுமாக பிடிப்பட்ட போதும் நன்னீயூர் ராஜேந்திரன் அவர் மீது நடவடிக்கை எடுக்காமல் கவனமாக தவிர்த்து வந்தார். இந்த நிலையில் செந்தில் பாலாஜி மாவட்ட பொறுப்பாளர் ஆன பின்பு அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் நடத்திய ரகசிய கூட்டங்கள் அனைத்தையும் வீடியோ, டாக்குமெண்டுகளை அனுப்பியிருக்கிறார்.


 

இதை எப்படி செந்தில்பாலாஜி கண்டுபிடித்தார் என்று நாம் விசாரித்த போது, அதிமுக அமைச்சருடன் இருந்து கொண்டு அங்கிருந்து உளவு பார்த்து செல்லும் அதிமுக நிர்வாகி ஒருவர் தான் செந்தில்பாலாஜியிடம் போட்டு கொடுத்து விட்டார் என்கிறார்கள்.
 

அரசியலில் நேரடியான அரசியலை விட உள் அரசியல்களை மிக கவனமாக கையாள வேண்டும் என்பதை கோழி செந்தில் நீக்கம் கட்சியிருக்கு உணர்த்தியிருக்கிறது என்கிறார்கள் கரூரில் உள்ள திமுக முக்கிய நிர்வாகிகள்.



 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார்.