Skip to main content

“செஞ்சிருவீங்கல்ல... நம்பளாம்ல..” : கமல்ஹாசன் பேட்டி

Published on 04/04/2018 | Edited on 04/04/2018
Kamal  Hassan



மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்கூட்டம் திருச்சியில் இன்று நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று மதியம் சென்னையில் இருந்து வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலில் திருச்சி புறப்பட்டார். 
 

பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களும் கமல்ஹாசனுடன் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு கமல்ஹாசன் பேட்டியளித்தார். 
 

கேள்வி:- தமிழக அரசியல் எப்படி இருக்கிறது?.
 

பதில்:- சீர்திருத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கிறது. அது மக்களின் கடமையும் கூட. யாரோ ஒரு அரசியல்வாதி வருவான். அவன் திருத்துவான் என்று நினைக்காமல், மக்கள் தன் பொறுப்பாக அதை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டும். அதை தொடங்கிவிட்டார்கள். அதற்கான அடையாளங்கள் தெரிவதாக நான் நம்புகிறேன்.
 

கேள்வி:- மக்கள் எப்படி செயல்பட வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?.
 

பதில்:- முதலில் ஓட்டுபோட பணம் வாங்கக்கூடாது. அது தலையாய கடமை. ஓட்டுபோட்டே ஆக வேண்டும். இது 2-வது தலையாய கடமை. மற்றபடி, நீங்கள் யாரை தேர்ந்தெடுக்கிறீர்களோ, அவர்களிடம் துணிவாக கேள்விகளை கேட்க வேண்டும். அரசியல்வாதிகளுக்கு இருக்கும் சுயநலங்களை நீங்கள் பிரதிபலிக்கக்கூடாது.
 

கேள்வி:- தமிழகத்தில் கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ‘நாளை நமதே’ பயணத்தை மேற்கொண்டு மக்களை சந்தித்து இருக்கிறீர்கள். மக்களின் எதிர்பார்ப்பு எண்ணவாக இருக்கிறது?.
 

பதில்:- நெஞ்சைப் பிழியும் படியாக இருக்கிறது. அவர்கள் ஏதாவது ஒரு வித்தியாசம் நடக்காதா என்று ஏங்குவதை பார்க்கும்போது நெஞ்சைப் பிழியும் ஒரு நம்பிக்கை. எங்களுக்கு இருக்கும் கடமை என்னவென்பதை எங்களுக்கே உணர்த்தியது. கண்ணீர்மல்க வைக்கும் நம்பிக்கை. “செஞ்சிருவீங்கல்ல... நம்பளாம்ல..” என்று கேட்கிறார்கள். இவ்வாறு கூறினார். 
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘தேவர் மகன் பார்த்து திருந்திட்டோம்னு சொன்னாங்க’- சீமான் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்

Published on 29/07/2019 | Edited on 29/07/2019

பூமணி, கிழக்கும் மேற்கும், மிட்டாமிராசு ஆகிய வெற்றிப் படங்களை இயக்கியவர் மு.களஞ்சியம். கருங்காலி படத்தை இயக்கி அதில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் மு.களஞ்சியம். தற்போது முந்திரிக்காடு என்ற படத்தை இயக்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் ராஜூ முருகன், சீமான், இயக்குனர் சசி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துகொண்டனர்.
 

seeman

 

 

இந்நிலையில் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாரளருமான சீமான், கருத்தம்மா படத்தை பாரதிராஜா இயக்கும் சமயத்தில் அவருக்கு துணை இயக்குனராக சீமான் இருந்தார். அப்போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி பேசினார். 
 

“எங்க அப்பா பாரதிராஜா கிழக்குச் சீமையிலே படத்தை முடித்துவிட்டு கருத்தம்மா படத்தை எடுத்துகொண்டிருந்தார். இரவு நேரத்தில் படபிடிப்பு நடந்துகொண்டிருந்தது. அந்த ஊரே கையில் அருவா, கம்புடன் ஓடிக்கொண்டிருந்தது. என்ன சத்தமா ஓடுராங்களே என்று திரும்பி பார்த்து அங்கிருந்த சில ஊர்க்காரர்களிடம் கேட்டால், ‘பக்கத்து ஊருடன் சாதிப் பிரச்சனை’என்றனர். 
 

அதேசமயத்தில் பெருசுகளும், சின்ன பையன்களும் நிறைய பேர் ஷூட்டிங்கை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தனர். ‘ஏன் நீங்கள் எல்லாம் போகவில்லையா?’ என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டேன். ‘இல்லைங்க முன்னாடி எல்லாம் இப்படி போயிட்டிருந்ததானுங்க, தேவர் மகன் படம் பார்த்த பிறகு டப்புனு அரிவாள் கம்பெல்லாம் எடுக்க அசிங்கமா இருக்குங்க’ என்றார்கள். 
 

பல வருடங்களாக ஒருவிஷயத்தை நமக்கு கற்பிச்சத ஒரு திரைக்கதை உடைச்சிடுச்சு. ஹையோ நான் கொடுத்த பாலெல்லாம் இரத்தமா ஓடுதேனு ஒரு ஆத்தா அழுகும்போது அந்த கண்ணீரில் கரைஞ்சுவிட்டது சாதி. அவர்கள் உணர்ந்துவிட்டார்கள், அங்க மாற்றம் நிகழ்ந்துவிட்டது. அதை மாதிரி இந்தப் படமும் இளைய தலைமுறையினருக்கு சாதி என்ற நஞ்சை ஊட்டவிடாமல் தடுக்கும் ஒரு கேடயமாக இருக்கும் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை” என்று கூறினார்.

 

 

Next Story

19 வருடங்கள் கழித்து பிரமாண்ட படத்திற்காக இணையும் கமல் - ரஹ்மான்...

Published on 16/07/2019 | Edited on 16/07/2019

விஸ்வரூபம் 2 படம் வெளியானதை அடுத்து கமல்ஹாசன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிட அரசியலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சபாஷ் நாயுடு படத்தை எடுப்பதில் முதலில் பிஸியாக இருந்தார் பின்னர் அந்த படம் என்ன நிலையில் இருக்கிறது என்றுகூட யாருக்கும் தெரியவில்லை. 
 

kamal

 

 

கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு தலைவன் இருக்கிறான் என்ற படத்தை எடுக்க இருப்பதாக தகவல் வெளியானது. கமலின் கனவு படமான மருதநாயகத்தை போல இதுவும் ஒரு கனவு படம் என்று சொல்லப்பட்டது. ஆனால், இதுவும் பேச்சுவார்த்தையுடனே முடிவடைந்தது. அரசியல் பிரவேசத்திற்கு பின்பு ஷங்கருடன் கைகோர்த்து இந்தியன் 2 வில் நடிக்கிறார் என்று அறிவிக்கப்பட்டு, படத்திற்கு பூஜையும் போடப்பட்டது. பின்னர், ஷங்கர் இருக்கும் பிரச்சனையில் இந்த படமும் கைவிடப்பட்டுவிட்டது என்பது போன்ற செய்திகள் வருகின்றன.
 

இந்நிலையில் நேற்று இரவு திடீரென ஏ.ஆர். ரஹ்மான் கமலுடன் இணைந்து பணிபுரிவதாக புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்தார். அந்த பதிவை பார்த்த பலரும் ஷாக்காகிவிட்டனர். இனி கமல் சினிமாவிற்கே வரமாட்டார் என்று எண்ணியவர்களுக்கு பெரும் வியப்பாக இந்த பதிவு இருந்தது. அந்த ட்வீட்டிற்கு கமல்ஹாசன் பதிலளித்து தகவலை உறுதி செய்தார். லைகா மற்றும் ராஜ்கமல் இண்டெர்னேஷனல் பிலிம்ஸ் இரண்டும் நிறுவனங்களும் இணைந்து தலைவன் இருக்கிறான் என்கிற மாபெரும் பிரமாண்ட படத்தை உருவாக்க இருக்கிறோம். அதில் ஏ.ஆர். ரஹ்மான் இணைந்துகொண்டது மிக்க மகிழ்ச்சியை அளிக்கிறது என்று கமல் பெருமிதம் கொண்டார்.
 

கமல்ஹாசனும் ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட இருவரும் இணைந்து கடைசியாக பணிபுரிந்த படம் 2000ல் வெளியான தெனாலி. 19 வருடங்கள் கழித்து இருவரும் இணைகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.